"மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்ந்து விழும்
ஈசல் கூட்டம்
காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் ஏறிந்து
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளர வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.."
Wednesday, March 9, 2011
Saturday, December 18, 2010
கிருஷ்ணராஜபுரத்தில் என்ன ஃபேமஸ்?- முகுந்த் நாகராஜன்
'இது என்ன ஸ்டேஷன்?' என்று கேட்டார்,
இரவுப் பயணம் முடிவை நெருங்கிய அதிகாலையில்.
'கிருஷ்ணராஜபுரம்' என்றேன் வெளியே பார்த்து.
'இங்கே என்ன ஃபேமஸ்?' என்று கேட்டார் சகஜமாக.
திடுக்கிட்டேன் நான்.
இன்னொரு முறை கேட்டார்.
என்னவாக இருக்கும்?
மலைக்கோயிலா, அருவியா,
மத்திய அமைச்சரா,
இனிப்புப் பலகாரமா,
நாடி ஜோசியனா…
என்னவாக இருக்கும்?
இறங்கி உள்ளே போய்
ஊர்க்காரன் எவனையாவது
பிடித்துக் கேட்கலாம்.
ஆனால், ஒன்றுமே ஃபேமஸ் இல்லாவிட்டால்,
அவமானத்தில் அவன்
மனம் உடைந்து விடக்கூடும்.
இல்லாவிட்டால், சனிக்கிழமைதோறும் கூடும்
சாதாரண சந்தையைப் பற்றி உற்சாகமாக
ஒரு மணி நேரம் பேசவும் கூடும்,
என்னைப் பிடித்து வைத்துக்கொண்டு.
ரயிலோ இரண்டு நிமிஷம்தான் நிற்கும்.
அட, வெட்கம் கெட்ட கிருஷ்ணராஜபுரமே!
உனக்கெல்லாம் ஸ்டேஷன் ஒரு கேடா?
இரவுப் பயணம் முடிவை நெருங்கிய அதிகாலையில்.
'கிருஷ்ணராஜபுரம்' என்றேன் வெளியே பார்த்து.
'இங்கே என்ன ஃபேமஸ்?' என்று கேட்டார் சகஜமாக.
திடுக்கிட்டேன் நான்.
இன்னொரு முறை கேட்டார்.
என்னவாக இருக்கும்?
மலைக்கோயிலா, அருவியா,
மத்திய அமைச்சரா,
இனிப்புப் பலகாரமா,
நாடி ஜோசியனா…
என்னவாக இருக்கும்?
இறங்கி உள்ளே போய்
ஊர்க்காரன் எவனையாவது
பிடித்துக் கேட்கலாம்.
ஆனால், ஒன்றுமே ஃபேமஸ் இல்லாவிட்டால்,
அவமானத்தில் அவன்
மனம் உடைந்து விடக்கூடும்.
இல்லாவிட்டால், சனிக்கிழமைதோறும் கூடும்
சாதாரண சந்தையைப் பற்றி உற்சாகமாக
ஒரு மணி நேரம் பேசவும் கூடும்,
என்னைப் பிடித்து வைத்துக்கொண்டு.
ரயிலோ இரண்டு நிமிஷம்தான் நிற்கும்.
அட, வெட்கம் கெட்ட கிருஷ்ணராஜபுரமே!
உனக்கெல்லாம் ஸ்டேஷன் ஒரு கேடா?
Friday, November 5, 2010
தீராத விளையாட்டு - ராமச்சந்திரன் ஸ்ரீனிவாசன்
விளையாட்டுப் பிள்ளைன்னு கண்டிச்சி
விடியல்ல ஸ்கூலுக்கனுப்பி
எம்மவன் எஞ்சினியர்ன்னு
எங்கப்பா முடிவு செஞ்சி
கல்யாணம் கட்டி முடிச்சி
மணவாழ்க்கையில முங்கிக் குளிச்சி
பிள்ளைங்களப் படிக்க அனுப்பி
அதுங்க பெரிசானதும் பெருமப்பட்டு
மகள மாமியார் வீட்டுக்கனுப்பி
என் மனைவிய மாமியாராக்கி
இப்ப
திண்ணையில சேர் போட்டுத்
தூங்கலாம்னு நினைக்கையில
பேட் புடிச்சி விளையாடக் கூப்புடுதான்
எம்பேரன்!
விடியல்ல ஸ்கூலுக்கனுப்பி
எம்மவன் எஞ்சினியர்ன்னு
எங்கப்பா முடிவு செஞ்சி
கல்யாணம் கட்டி முடிச்சி
மணவாழ்க்கையில முங்கிக் குளிச்சி
பிள்ளைங்களப் படிக்க அனுப்பி
அதுங்க பெரிசானதும் பெருமப்பட்டு
மகள மாமியார் வீட்டுக்கனுப்பி
என் மனைவிய மாமியாராக்கி
இப்ப
திண்ணையில சேர் போட்டுத்
தூங்கலாம்னு நினைக்கையில
பேட் புடிச்சி விளையாடக் கூப்புடுதான்
எம்பேரன்!
Monday, October 18, 2010
மற்றுமொரு மாலைவேளைக்கான காத்திருப்பு ஆறுமுகம் முருகேசன்
புன்னகைத்து திரும்பியவேளை
கைபற்றி குலுக்குவாளென நானும்
அழுத்தமான முத்தமொன்று
பதியவிடுவேனென்று அவளும்
யோசித்திருக்கலாம்..!
எல்லாமும் ...
காற்றின் ரீங்காரத்தில்
கசிந்து கொண்டிருக்கிறதென
எதுவுமே நிகழாத
விடைபெறுதலொன்று
மறுசந்திப்புக்கான ஆதியாய்..!
ஒளிந்திருக்கும் காதல் ,
காதல் கவிதையென
பிரகடனப்பட ..
அவளொருவள் அனுமானித்தாலே
திருப்தியென்ற பாசாங்குடன் ,
வார்த்தைகளற்று நீள்கிறது..
வண்ணத்துப்பூச்சியும்
சிறகுகளைசைக்கும் சிறுமியும்
முந்திகொண்டனர் எனக்கென..!
கைபற்றி குலுக்குவாளென நானும்
அழுத்தமான முத்தமொன்று
பதியவிடுவேனென்று அவளும்
யோசித்திருக்கலாம்..!
எல்லாமும் ...
காற்றின் ரீங்காரத்தில்
கசிந்து கொண்டிருக்கிறதென
எதுவுமே நிகழாத
விடைபெறுதலொன்று
மறுசந்திப்புக்கான ஆதியாய்..!
ஒளிந்திருக்கும் காதல் ,
காதல் கவிதையென
பிரகடனப்பட ..
அவளொருவள் அனுமானித்தாலே
திருப்தியென்ற பாசாங்குடன் ,
வார்த்தைகளற்று நீள்கிறது..
வண்ணத்துப்பூச்சியும்
சிறகுகளைசைக்கும் சிறுமியும்
முந்திகொண்டனர் எனக்கென..!
தீபாவளி ஹைக்கூ கோவை புதியவன்
1. ஒரு நாள் விடுமுறை
நரகாசுரனுக்கு நன்றி
சிவகாசி விரல்கள்
2. செய்யா தவறுக்கு
நவீன நரகாசுரன் தண்டனை
“உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக”
3. பூமித்தாயின் மடியில்
புகைத் திருவிழா
மூர்ச்சையாய் ஓசோன் குழந்தை
4. தெருவெங்கும் கொண்டாட்டம்
தலைவர்கள் வாழ்த்து
தெருக்களில் வாழ்வோர்க்கும்
5. அசுரனுக்கு நினைவஞ்சலி
உயிர் பெற்றன இயந்திரங்கள்
ஒரு நாள் மனிதர்களாய்
நரகாசுரனுக்கு நன்றி
சிவகாசி விரல்கள்
2. செய்யா தவறுக்கு
நவீன நரகாசுரன் தண்டனை
“உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக”
3. பூமித்தாயின் மடியில்
புகைத் திருவிழா
மூர்ச்சையாய் ஓசோன் குழந்தை
4. தெருவெங்கும் கொண்டாட்டம்
தலைவர்கள் வாழ்த்து
தெருக்களில் வாழ்வோர்க்கும்
5. அசுரனுக்கு நினைவஞ்சலி
உயிர் பெற்றன இயந்திரங்கள்
ஒரு நாள் மனிதர்களாய்
கீதாஞ்சலி உன் காதல் என் மீது ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் ) தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
உள்ளத்தைக் கவர்ந்த காதலனே!
உன்னை நானறிவேன்,
காதலைத் தவிர,
யாதொன்று மில்லை,
என்மீது நீ
கொண்டிருப்பது!
பரிதியின்
தங்க ஒளிகள் துள்ளி
நடனமிடும்,
சலசலக்கும் மரத்தின் இலைகளில்!
படகுபோல்
மிதந்து செல்லும்,
வான வெளியின் குறுக்கே,
மோன முகிற் கூட்டம்!
தவழ்ந்திடும்
தென்றலின் சிலுசிலுப்பு,
தனது குளிர்ச்சியைத்
தடவிப் போகும்
நடுவே
என் நெற்றியில்!
பொழுது புலர்ந்ததும்
பொற்சுடர் ஒளிமயம்
கண்ணிமை கட்குத் திரையிடும்,
வெண்ணிற வெள்ளத்தால்!
என் நெஞ்சுக்கு உணர்த்திடும்,
உன் அறிவுரை
அதுவே!
மேலிருந்து வளைகிறது,
கீழ் நோக்கி
உன்முகம்!
விண்ணிலிருந்து பார்க்கின்றன
கீழே
என்னிரு விழிகளை,
நின் விழிகள்!
என்னிதயம் தொடுகின்றது,
பணிந்து சென்று
நின்னிரு
பாதங்களை!
உன்னை நானறிவேன்,
காதலைத் தவிர,
யாதொன்று மில்லை,
என்மீது நீ
கொண்டிருப்பது!
பரிதியின்
தங்க ஒளிகள் துள்ளி
நடனமிடும்,
சலசலக்கும் மரத்தின் இலைகளில்!
படகுபோல்
மிதந்து செல்லும்,
வான வெளியின் குறுக்கே,
மோன முகிற் கூட்டம்!
தவழ்ந்திடும்
தென்றலின் சிலுசிலுப்பு,
தனது குளிர்ச்சியைத்
தடவிப் போகும்
நடுவே
என் நெற்றியில்!
பொழுது புலர்ந்ததும்
பொற்சுடர் ஒளிமயம்
கண்ணிமை கட்குத் திரையிடும்,
வெண்ணிற வெள்ளத்தால்!
என் நெஞ்சுக்கு உணர்த்திடும்,
உன் அறிவுரை
அதுவே!
மேலிருந்து வளைகிறது,
கீழ் நோக்கி
உன்முகம்!
விண்ணிலிருந்து பார்க்கின்றன
கீழே
என்னிரு விழிகளை,
நின் விழிகள்!
என்னிதயம் தொடுகின்றது,
பணிந்து சென்று
நின்னிரு
பாதங்களை!
Monday, February 1, 2010
Subscribe to:
Posts (Atom)
