Monday, October 18, 2010

மற்றுமொரு மாலைவேளைக்கான காத்திருப்பு ஆறுமுகம் முருகேசன்

புன்னகைத்து திரும்பியவேளை
கைபற்றி குலுக்குவாளென நானும்
அழுத்தமான முத்தமொன்று
பதியவிடுவேனென்று அவளும்
யோசித்திருக்கலாம்..!

எல்லாமும் ...
காற்றின் ரீங்காரத்தில்
கசிந்து கொண்டிருக்கிறதென
எதுவுமே நிகழாத
விடைபெறுதலொன்று
மறுசந்திப்புக்கான ஆதியாய்..!

ஒளிந்திருக்கும் காதல் ,
காதல் கவிதையென
பிரகடனப்பட ..
அவளொருவள் அனுமானித்தாலே
திருப்தியென்ற பாசாங்குடன் ,
வார்த்தைகளற்று நீள்கிறது..

வண்ணத்துப்பூச்சியும்
சிறகுகளைசைக்கும் சிறுமியும்
முந்திகொண்டனர் எனக்கென..!

No comments: