Friday, March 25, 2011

சென்றது மீளாது ...சுப்ரமணிய பாரதி

சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

Wednesday, March 16, 2011

மு. மேத்தா கவிதைகள்

வாழ்க்கை

பெட்டி படுக்கைகளை
சுமந்தபடி
ஒரு
பிரயாணம்

எப்போது சுமைகளை
இரக்கி வைக்கிரோமோ
அப்போது

சுற்றி இருப்பவர்கள்
நம்மை
சுமக்க தொடஙு கிறார்கள்


ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் - அமெரிக்கா
ஈராக் அழிந்து

சிதைந்த பிறகுதான்

தெரிந்தது

பேரழிவு ஆயுதங்கள்

எவர் கையில்

இருந்ததென்பது


வரலாறு
சரித்திரம் என்பது விளம்பர மனிதரின்
சாகச முத்திரைகள் - கடல்
தெறித்திடும் போதினில் புகைப்பட மாகிடும்
சிற்சில நீரலைகள்!

ஆயிரங் கோடி மனிதரில் ஒருசிலர்
அடைகிற பிரபலங்கள் - பல
ஆயிர மாயிரம் பெயரை மறைத்திடும்
அற்புதப் புதைகுழிகள்!

வையத்து மாந்தர் நடந்துசென் றேகிய
வழிகளின் ஓவியங்கள் - சில
பொய்யையும் தூக்கி மெய்யென ஆக்கிப்
புகன்றிடும் மூலங்கள்!

பட்டணத்தில் பாதி கவிஞர் வாலி

பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான்
எடுத்தான்.... முடித்தான்.... ஹோய்...
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்
அந்த பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான்
அதில் எட்டடுக்கு மாடி வைத்து
கட்டிடத்தை கட்டி விட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தார்
மண்ணை கொட்டியவன் வேலி எடுத்தான்.... ஹோய்...
(உண்டாக்கி)

புதிது புதிதாக எழுதச் சொல்கிறார்கள் பா.விஜய்

புதிது புதிதாக எழுதச்
சொல்கிறார்கள்
உன் பழைய
ஞாபகங்களைத் தான்
கிளற வேண்டும்

ஒரு தைரியசாலி
அச்சம் அடைவது
உன்னைப் போன்ற
கோழையிடம் தான்

நீ அளித்த
அன்பளிப்புகளிலேயே
அற்புதமான
அன்பளிப்பு இந்த
வேதனைதான்

உன் புருவங்கள் என்பது கோடிட்ட இடம் அதை என் கவிதைகளால் நிரப்பட்டுமா

இருட்டுக் கூந்தலை பகலில் காட்டுகிறாய்
நிலா முகத்தை
இரவில் பூட்டுகிறாய்
புரியவில்லை உன்
வானியல்

வெண்டைக்காயில் ஒளிந்தவர்கள் நா முத்துக்குமார்

வெண்டைக்காயில் ஒளிந்தவர்கள்
எல்லா வீடுகளையும் போலவே
கிணற்றடித் தண்ணீரை
குடித்து வளரும்
எங்கள் வீட்டிலும்.

வதங்கிச் சுருண்டு
இலைகளில் தொங்கும்
செம்பருத்திப் பூக்கள் தவிர்த்து
அம்மாவினுடையதும்
அக்காவினுடையதுமாக
விரல்களைக் கடன் வாங்கி
பச்சையாய் துளிர்க்கும்
வெண்டைக்காய்ச் செடிகள்
அத்தோட்டத்தின் தனித்தன்மை.

‘மூளைக்கு நல்லது’ என்று
மருத்துவ குணம் கூறி
அதன் காய்களில் ஒளிந்திருக்கும்
என் அல்ஜிப்ரா கணக்கி இற்கான
விடைகளை நோக்கி
ஆற்றுப்படுத்துவாள் அம்மா.

மதிய உணவில்
பெரும்பான்மை வகிக்கும்
அதன் ‘கொழ கொழ’ த் தன்மை
வழக்கம்போல் பள்ளியில்
என் விரல்களில் பிசுபிசுத்து
வராத கணக்கைப் போல்
வழுக்கிக் கொண்டிருக்கும்.

முன்புக்கு முன்பு
அதன் காம்புகள் கிள்ளி
கம்மல் போட்டுக்கொள்ளும்
அக்கா இப்போது,
வைரங்களை நோக்கி
விரியுமொரு கனவில்
‘ உங்களுக்கு வாக்கப்பட்டு
என்னத்தைக் கண்டேன்’ என்று
அத்தானிடம் பொருமுகி்றாள்.

கடன்முற்றித் தத்தளித்த சூழலில்
கியான்சந்த் அண்ட் சன்சுக்கு
கைநடுங்கி கையெழுதுத்திட்டு
வீட்டுடன் தோட்டமும்
விற்றார் அப்பா .

முன்வாசலில் தொங்கும்
குரோட்டன்ஸ் செடி கடந்து
பிஞ்சு வெண்டைகள் பொறுக்கி;
கூர்முனை ஒடித்து;
தள்ளு வண்டிக்காரனிடம்
பேரம் பேசுகையில்
இப்போது உணர்கிறேன் …………

ஒவ்வொரு வெண்டைக்காயிலும்
ஒளிந்திருக்கிறார்கள்
மென்மையான
விரல் கொண்ட
ஒரு அம்மா ;

கனவுகள் விரியும்
ஒரு அக்கா ;
கைகள் நடுங்கும்
ஒரு தந்தை ;
மற்றும்
கணக்குகள் துரத்தும்
ஒரு பையன்.

கூட்ஸ் கார்டு நா முத்துக்குமார்

குழந்தைகள்
கை காட்டாத
கூட்ஸ் ரயிலில் இருந்து
கொடியசைத்துப் போகிறான்
கடைசிப் பெட்டியில் கார்டு.

இட்லிப்புத்திரர்கள் நா முத்துக்குமார்

இட்லிகள் மென்மையானவை.
வெதுவெதுப்பானவை.

சைபர் சைபராய்
வட்டக்குழியில் வெந்தவை.

திடப்பொருளாய் தோன்றி
இளகிய நிலையில் திரவமாகி
வெப்பத்தால் இறுகியது
அதன் உருவம்.

மிகமுக்கியம்
இட்லிகள் கொள்கையற்றவை.
சாம்பாரில் மிதவையாகவும்,
சட்னியில் துவையலாகவும்,
ஏதுமற்றப் பொழுதுகளில்
எண்ணெய் மிதக்கிற
மிளகாய்த்தூளில் துணுக்கெனவும்
எதனுடனும் அமையும்
இட்லிகளின் கூட்டணி

கம்ப்யூட்டர் ‘சிப்ஸ்’ விற்கிற
அந்நிய நாடுகளில்
உள்ளூர் இட்லிகளுக்கு
அமோக வரவேற்பு

மேலும்
இட்லிகளை
அஃறினை என்று
அர்த்தப்படுத்த முடியாது
அவை
குட்டிப்போட்டுப் பாலூட்டும்
இனத்தைச் சார்ந்தவை.

இட்லிப்புத்திரர்கள் நா முத்துக்குமார்

இட்லிகள் மென்மையானவை.
வெதுவெதுப்பானவை.

சைபர் சைபராய்
வட்டக்குழியில் வெந்தவை.

திடப்பொருளாய் தோன்றி
இளகிய நிலையில் திரவமாகி
வெப்பத்தால் இறுகியது
அதன் உருவம்.

மிகமுக்கியம்
இட்லிகள் கொள்கையற்றவை.
சாம்பாரில் மிதவையாகவும்,
சட்னியில் துவையலாகவும்,
ஏதுமற்றப் பொழுதுகளில்
எண்ணெய் மிதக்கிற
மிளகாய்த்தூளில் துணுக்கெனவும்
எதனுடனும் அமையும்
இட்லிகளின் கூட்டணி

கம்ப்யூட்டர் ‘சிப்ஸ்’ விற்கிற
அந்நிய நாடுகளில்
உள்ளூர் இட்லிகளுக்கு
அமோக வரவேற்பு

மேலும்
இட்லிகளை
அஃறினை என்று
அர்த்தப்படுத்த முடியாது
அவை
குட்டிப்போட்டுப் பாலூட்டும்
இனத்தைச் சார்ந்தவை.

பட்டாம்பூச்சி விற்பவன் நா முத்துக்குமார்

பதிவுகள்
மலை உச்சிப் பாறையில்,
கல்லூரி மரக்கிளையில்,
தியேட்டர் சேரில்,
புழுதி படிந்த
கார் கண்ணாடியில்,
போன்ற பலவற்றில்
சந்தோஷமாய்
எழுதிய என் பெயர்
குறுகிப் போனது
கடன் பத்திரத்தில்

மேல் வீட்டுக்காரன் நா முத்துக்குமார்

மேல் வீட்டுக்காரன்
என்கிற உரிமையில்
நீ கைப்பற்றும் சுதந்திரம்
அதிகப்படியானது.
உன் ஒவ்வொரு அசைவும்
பூதாகரமாய் ஒலிக்கிறது
கீழ்த்தளச் சுவர்களில் .
திட்டமிட்டு நகர்த்தும்
சாமார்த்தியமும் உனக்கில்லை.
பாக்கு இடிக்கும் பாட்டி;
சதுர அம்மியில்
சார்க் புர்ரக்கென்ற
குழவி நகர்த்தும் அம்மா;
ஏதேதோ பாட்டுக்கெல்லாம்
எம்பிக்குதிக்கும் குழந்தைகள்;
என
உன் உறவுகள் கூட
உன்னைப் போலவே.
உன்னை பழிவாங்கும் விதமாக
என்னால் முடிந்தது ஒன்றுதான்.
எனதருமை மேல்தளத்து நண்பா…….
தலையணையையும் மீறி
உன்காதுகளில்
சுழன்று கொண்டிருக்கும்
என் மின்விசிறி.

இது போதும் எனக்கு வைரமுத்து

இது போதும் எனக்கு
அதிகாலை ஒலிகள்
ஐந்துமணிப் பறவைகள்
இருட்கதவுதட்டும் சூரியவிரல்
பள்ளியெழுச்சி பாடும்உன்
பாதக்கொலுசு
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்

இதுபோதும் எனக்கு

தண்ணீர் போலொரு வெந்நீர்
சுகந்தம் பரப்பும் துவாலை
குளிப்பறைக்குள் குற்றாலம்
நான் குளிக்க நனையும் நீ

இதுபோதும் எனக்கு

வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்

இதுபோதும் எனக்கு

குளத்தங்கரை
குளிக்கும் பறவைகள்
சிறகு உலர்த்தத்
தெறிக்கும் துளிகள்
முகம் துடைக்க உன் முந்தானை

இதுபோதும் எனக்கு

நிலா ஒழுகும் இரவு
திசை தொலைத்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை

இதுபோதும் எனக்கு

மரங்கள் நடுங்கும் மார்கழி
ரத்தம் உறையும் குளிர்
உஷ்ணம் யாசிக்கும் உடல்
ஒற்றைப் போர்வை
பரஸ்பர வெப்பம்

இதுபோதும் எனக்கு

நிலாத் தட்டு
நட்சத்திரச் சோறு
கைகழுவக் கடல்
கைதுடைக்க மேகம்

கனவின் விழிப்பில்
கக்கத்தில் நீ

இதுபோதும் எனக்கு

தபோவனக் குடில்
தரைகோதும் மரங்கள்
நொண்டியடிக்கும் தென்றல்
ஆறோடும் ஓசை
வசதிக்கு ஊஞ்சல்
வாசிக்கக் காவியம்
பக்க அடையாளம் வைக்க
உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ

இதுபோதும் எனக்கு

பூப்போன்ற சோறு
பொரிக்காத கீரை
காய்ந்த பழங்கள்
காய்கறிச் சாறு
பரிமாற நீ
பசியாற நாம்

இதுபோதும் எனக்கு

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
பிரம்பு நாற்காலி
பிரபஞ்ச ஞானம்
நிறைந்த மௌனம்

நீ பாடும் கீதம்

இதுபோதும் எனக்கு

அதிராத சிரிப்பு
அனிச்சப்பேச்சு

உற்சாகப்பார்வை
உயிர்ப் பாராட்டு

நல்ல கவிதைமேல்
விழுந்து வழியும் உன்
ஒரு சொட்டுக் கண்ணீர்

இருந்தால் போதும்
எதுவேண்டும் எனக்கு?

சிறுமியும் தேவதையும் வைரமுத்து

திடீரென்று...
மேகங்கள் கூடிப்
புதைத்தன வானை

ஒரே திசையில் வீசலாயிற்று
உலகக் காற்று

பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய்
உருண்டது பூமி

மருண்டது மானுடம்
அப்போதுதான்
அதுவும் நிகழ்ந்தது

வான்வெளியில் ஒரு
வைரக்கோடு

கோடு வளர்ந்து
வெளிச்சமானது

வெளிச்சம் விரிந்து
சிறகு முளைத்த தேவதையானது

சிறகு நடுங்க
தேவதை சொன்னது:

''48 மணி நேரத்தில்
உலகப்பந்து கிழியப் போகிறது

ஏறுவோர் ஏறுக என்சிறகில்
இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன்

இரண்டே இரண்டு
நிபந்தனைகள்:
எழுவர் மட்டுமே ஏறலாம்

உமக்குப் பிடித்த ஒரு பொருள் மட்டும்
உடன்கொண்டு வரலாம்''

* * * * *
புஜவலியுள்ள இளைஞன் ஒருவன்
சிறகு நொறுங்க ஏறினான்

அவன் கையில்
இறந்த காதலியின்
உடைந்த வளையல்
முதல் முத்தத்து ஞாபகத்துண்டு

* * * * *
'இன்னொரு கிரகம் கொண்டான்
என்றென்றும் வாழ்க'
கொட்டிமுழங்கும் கோஷத்தோடு
சிறகேறினார் அரசியல்வாதி

தங்கக் கடிகாரம் கழற்றியெறித்து
களிம்பேறிய கடிகாரம் கட்டிக்கொண்டார்

உள்ளே துடித்தது -
சுவிஸ் வங்கியின்
ரகசியக் கணக்கு.

* * * * *
இறந்துவிடவில்லையென்ற சோகத்தை
இருமி இருமியே
மெய்ப்பித்துக் கொண்டிருக்கும்
நோயாளி ஒருவர்
ஜனத்திரள் பிதுக்கியதில்
சிறகொதுங்கினார்

அவர் கையில் மருந்து புட்டி

அதன் அடிவாரத்தில்
அவரின்
அரை அவுன்ஸ் ஆயுள்

* * * * *

அனுதாப அலையில்
ஒரு கவிஞனும் சிறகு தொற்றினான்

ஜோல்னாப் பையில் -
அச்சுப் பிழையோடு வெளிவந்த
முதல் கவிதை

* * * * *
தன் மெல்லிய ஸ்பரிசங்களால்
கூட்டம் குழப்பி வழிசெய்து
குதித்தாள் ஒரு சீமாட்டி

கலைந்த ஆடை சரிசெய்ய மறந்து
கலைந்த கூந்தல் சரிசெய்தாள்

கைப்பையில்
அமெரிக்க வங்கிக் கடன் அட்டை

* * * * *
கசங்காத காக்கிச் சட்டையில்
கசங்கிப்போன ஒரு போலீஸ்காரி
லத்தியால் கூட்டம் கிழித்துப்
பொத்தென்று சிறகில் குதித்தாள்

லத்தியை வீசியெறிந்தாள் - ஒரு
புல்லாங்குழல் வாங்கிக் கொண்டாள்

* * * * *
'ஒருவர்
இன்னும் ஒரே ஒருவர்'
என்றது தேவதை

கூட்டத்தில்
சிற்றாடை சிக்கிய சிறுமியருத்தி

பூவில் ரத்தஓட்டம்
புகுந்தது போன்றவள்
செல்ல நாய்க்குட்டியோடு
சிறகில் விழுந்தாள்

'நாய்க்குட்டியென்பது
பொருள் அல்ல - உயிர்
இறக்கிவிடு'
என்றது தேவதை

'நாய் இருக்கட்டும்
நானிறங்கிக் கொள்கிறேன்'
என்றனள் சிறுமி

சிறகு சிலிர்த்தது தேவதைக்கு
சிலிர்த்த வேகத்தில்
சிதறிவிழந்தனர் சிறகேறிகள்

வான் பறந்தது தேவதை
சிறுமியோடும் செல்ல நாயோடும்.

மெளனத்தில் புதைந்த கவிதைகள் வைரமுத்து

கம்மாக் கரையோரம்
களையெடுக்கும் வேளையில
கறுப்புக் கொடபுடிச்சுக்
கரைவழியே போனீரு

அப்ப நிமிந்தவதான்
அப்புறமாக் குனியலையே
கொடக்கம்பி போலமனம்
குத்திட்டு நிக்கிறதே

நீர்போனபின்னும் ஒம்ம
நெழல்மட்டும் போகலையே
நெஞ்சுக்குழியில் ஒம்ம
நெழல்வந்து விழுந்திருச்சே

வண்ண மணியாரம்
வலதுகையிக் கெடியாரம்
ஆனை புலியெல்லாம்
அடக்கிவைக்கும் அதிகாரம்

போறபோக்கில் ஒரு
புஞ்சிரிப்பால் உசுர்கசக்கி
வேரோட பிடுங்கிஎன்ன
வெயில்தரையில் போட்டீரே

வெல்லப் பார்வைஒண்ணு
வீசிவிட்டீர் முன்னாடி
தாங்காத மனசுஇப்பத்
தண்ணிபட்ட கண்ணாடி

* * * * *
பச்சி ஒறங்கிருச்சு
பால், தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து
எலகூடத் தூங்கிருச்சு

காசநோய்க்காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக
அரநிமிசம் தூங்கலையே

ஒறங்காத கண்ணுறங்க
உபாயம் ஒண்ணு உள்ளதய்யா
அழகா! நான் ஒறங்கஒம்ம
அழுக்குவேட்டி தாருமய்யா

* * * * *

குத்துதய்யா கொடையுதய்யா
குறுகுறுன்னு வருகுதய்யா
சூறாவளி புகுந்து
சுத்துதய்யா தலக்குள்ள

தைலந்தான் தேச்சேன்
தலவலியோ தீரலையே
நொச்சிஎல வச்சேன்
நோய்விட்டுப் போகலையே

தீராத தலவலியும்
தீரவழி உள்ளதய்யா
நீவச்ச தலையணைய
நான்வச்சாத் தீருமய்யா

* * * * *
ஒருவாய் எறங்கலையே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் எறங்கலையே

ஆத்து மீன்கொழம்பு
அடுப்பில் கொதிக்கையில
ஏழுதெரு மணக்கும்
எனக்குமட்டும் மணக்கலையே

சோறுதண்ணி கொள்ளஒரு
சுருக்குவழி உள்ளதய்யா
எங்கஞ்சி நீர்வந்து
எச்சில்வச்சுத் தாருமய்யா

* * * * *
உள்நெஞ்சுக்குள்ள
ஒம்மநான் முடிஞ்சிருக்க
எங்கே எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

தவிப்புக்கு ஒருத்தன்
தாலிக்கு வேறொருத்தன்
எத்தனையோ பெண்தலையில்
இப்படித்தான் எழுதிருக்கோ?

ஏழப் பொம்பளைக
எதுவும்சொல்ல முடியாது
ரப்பர் வளவிக்குச்
சத்தமிட வாயேது?

நண்பா உனக்கொரு வெண்பா வைரமுத்து

ஊரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி நோயொன்று
பாரைக் குடித்துவிடப் பார்க்கிறதே - பாரடா
வையத்தில் மானுடம் வாழுமோ என்னுமோர்
அய்யத்தில் உள்ளோம் அடா!

போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்
பாதை வழுவிய பாலுறவில் - காதைக்
கழுவாத ஊசி கழிவுரத் தத்தில்
நுழையும் உயிர்க்கொல்லி நோய்!

இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின்
எடைகாட்டி இன்பம் இழைப்பாள் - மடையா
கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை
விலைமகள் ஆசை விடு!

கண்ணுக்குத் தோன்றாத காமக் கிருமிகளோ
புண்ணுக்குள் சென்று புலன்கொல்லும் - கண்ணா
முறையோடு சேராத மோகம் பிறந்தால்
உறையோடு போர்செய்தே உய்!

கரைமீறிச் சேர்ந்தாடும் காமக் கலப்பில்
உறைமீறி நோய்சேர்வ துண்டே - உறைநம்பிக்
கம்மாக் கரையோ கடற்கரையோ தேடாமல்
சும்மா இருத்தல் சுகம்!

தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
வேகையிலும் விட்டு விலகாதே - ஆகையினால்
விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
கற்பனையை வீட்டுக்குள் காட்டு!

கலவிக்குப் போய்வந்த காமத்து நோயைத்
தலைவிக்கும் ஈவான் தலைவன் - கலங்காதே
காவலனாய் வாய்த்தவனே கண்ணகிக்கு நோய்தந்தால்
கோவலனைக் கூசாமல் கொல்!

ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப்
பேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் - பாரில்
இயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச்
செயற்கை உறவென்ன சீ!

தேன்குடிக்கப் போன திருவிடத்தில் உன்னுடைய
ஊன்குடிக்க ஒட்டும் உயிர்க்கொல்லி - ஆண்மகனே!
உல்லாச நோய்சிறிய ஓட்டையிலும் உட்புகுமே
சல்லாப வாசலைச் சாத்து!

மோகக் கிறுக்கில் முறைதவறிப் போனவர்கள்
தேகம் இளைத்தபடி தேய்கின்றார் - ஆகப்
பொறுப்பற்ற வாழ்வில் புகுந்தபலர் இங்கே
உறுப்பற்றுப் போவார் உணர்!

பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளைக்
கண்ணைக் கெடுக்கும் கலைகளை - இன்றே
எரியூட்ட வேண்டும் இளைய குலம்வாழ
அறிவூட்ட வேண்டும் அறி!


துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)
இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்
மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த
மானுடத்தை வாழ்விப்போம் வா!

மெளனத்தில் புதைந்த கவிதைகள் வைரமுத்து

கம்மாக் கரையோரம்
களையெடுக்கும் வேளையில
கறுப்புக் கொடபுடிச்சுக்
கரைவழியே போனீரு

அப்ப நிமிந்தவதான்
அப்புறமாக் குனியலையே
கொடக்கம்பி போலமனம்
குத்திட்டு நிக்கிறதே

நீர்போனபின்னும் ஒம்ம
நெழல்மட்டும் போகலையே
நெஞ்சுக்குழியில் ஒம்ம
நெழல்வந்து விழுந்திருச்சே

வண்ண மணியாரம்
வலதுகையிக் கெடியாரம்
ஆனை புலியெல்லாம்
அடக்கிவைக்கும் அதிகாரம்

போறபோக்கில் ஒரு
புஞ்சிரிப்பால் உசுர்கசக்கி
வேரோட பிடுங்கிஎன்ன
வெயில்தரையில் போட்டீரே

வெல்லப் பார்வைஒண்ணு
வீசிவிட்டீர் முன்னாடி
தாங்காத மனசுஇப்பத்
தண்ணிபட்ட கண்ணாடி

* * * * *
பச்சி ஒறங்கிருச்சு
பால், தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து
எலகூடத் தூங்கிருச்சு

காசநோய்க்காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக
அரநிமிசம் தூங்கலையே

ஒறங்காத கண்ணுறங்க
உபாயம் ஒண்ணு உள்ளதய்யா
அழகா! நான் ஒறங்கஒம்ம
அழுக்குவேட்டி தாருமய்யா

* * * * *

குத்துதய்யா கொடையுதய்யா
குறுகுறுன்னு வருகுதய்யா
சூறாவளி புகுந்து
சுத்துதய்யா தலக்குள்ள

தைலந்தான் தேச்சேன்
தலவலியோ தீரலையே
நொச்சிஎல வச்சேன்
நோய்விட்டுப் போகலையே

தீராத தலவலியும்
தீரவழி உள்ளதய்யா
நீவச்ச தலையணைய
நான்வச்சாத் தீருமய்யா

* * * * *
ஒருவாய் எறங்கலையே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் எறங்கலையே

ஆத்து மீன்கொழம்பு
அடுப்பில் கொதிக்கையில
ஏழுதெரு மணக்கும்
எனக்குமட்டும் மணக்கலையே

சோறுதண்ணி கொள்ளஒரு
சுருக்குவழி உள்ளதய்யா
எங்கஞ்சி நீர்வந்து
எச்சில்வச்சுத் தாருமய்யா

* * * * *
உள்நெஞ்சுக்குள்ள
ஒம்மநான் முடிஞ்சிருக்க
எங்கே எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

தவிப்புக்கு ஒருத்தன்
தாலிக்கு வேறொருத்தன்
எத்தனையோ பெண்தலையில்
இப்படித்தான் எழுதிருக்கோ?

ஏழப் பொம்பளைக
எதுவும்சொல்ல முடியாது
ரப்பர் வளவிக்குச்
சத்தமிட வாயேது?

* * * * *

Monday, March 14, 2011

போதுமென்று இருந்துவிடாதே! ஏ. அன்சூயா த்ரேஸ்

போதுமென்று இருந்துவிடாதே!
ஏ. அன்சூயா த்ரேஸ்

போதுமென்ற மனம் வேண்டும்
செல்வத்தை பொறுத்தமட்டில்

ஆனால் ...

கல்வி
போதுமென்று இருந்துவிடாதே
ஞானத்தை இழந்திடுவாய்!

தியாகம்
போதுமென்று இருந்து விடாதே
இதயத்தை இழந்திடுவாய்!

பொறுமை
போதுமென்று இருந்துவிடாதே
புகழை இழந்திடுவாய்

உண்மை
போதுமென்று இருந்துவிடாதே
உன்னை இழந்திடுவாய்!

உழைப்பு
போதுமென்று இருந்துவிடாதே
மகிழ்வை இழந்திடுவாய்!

அன்பு
போதுமென்று இருந்துவிடாதே
அனைத்தையும் இழந்திடுவாய்!

Sunday, March 13, 2011

வாழ்க்கை

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

கவிதை பொ. செந்திலரசு

(அ)ரூப திசைகள்

ஒரு மலையை
எவ்வாறு நீங்கள் அடையாளப்படுத்துவீர்கள்
பெயர் சார்ந்து . . .
மண் சார்ந்து . . .
மரங்கள் சார்ந்து . . .
பறவைகள் சார்ந்து . . .
பசுமை சார்ந்து . . ?
அன்று,
மதுக்கோப்பைகள் வழுக்க
திசைகளின் மேல் தடுமாறி விழுந்த
மூவரில்
மலைகளை,
திசைகள் சார்ந்து
பிரமாதப்படுத்திக்கொண்டிருந்தான்
முதலாமவன்.
வடக்கில் கஞ்சமலையும்
கிழக்கில் கொல்லிமலையும்
மேற்கிலிருப்பது
சங்ககிரி மலையுமென.
- அம்
மலையுச்சியில் தெரியும் திப்புசுல்தான் கோட்டையின்
தென்புறம் மசூதியும்,
அதன்
வடபுறமுள்ள உள்ளொடுங்கும் நிலவறையின்
ஒருபகுதி
கஞ்சமலையின் தென்மேற்கிலும்
மற்றொரு பகுதி
கொல்லிமலையின் தென்கிழக்கிலும்
திறப்பதாயும்,
சித்தர்கள் அவ்வழி வந்து செல்வதாயும்,
காட்டு முயலும் உடும்பும் தென்படும்
அந்நிலவறைக்கு வடகிழக்கில்
மரகதப்பச்சையாய்
களிப்பின் உதிரம் தேங்கிய
இராணிகளின் பொற்றாமரைக் குளத்தின்
வடமேற்காழத்தில் புதையலிருப்பதாயும்
கதைத்து முடிக்கையில்
ஒரு பிளேட் ‘சில்லிசிக்கன்’ தீர்ந்திருப்பது கண்டு
சுற்றுமுற்றும் பார்த்த
இரண்டாமவன்,
அமானுஷ்யத்தின் பிரதியாயுள்ள அந்
நிலவறையினுள்ளே நுழையத் தொடங்கினான்
முயல் வேட்டை நிகழ்த்த.
அதற்கு முன்பே,
ஆச்சர்யக் குடுவையை முதுகில் கட்டிய
மூன்றாமவன்,
முங்கிக்கொண்டிருந்தான் அப்
பொற்றாமரைக் குளத்தில்.
- திசைகளற்ற சித்தனான
முதலாமவன்
யாவற்றையும் அரூபிக்க.

கவிதை ப்ரதிபா ஜெயச்சந்திரன்

புறவரிகள்


(i)

என் எல்லைகளுக்குள் வந்தவர்களைப்
புறக்கணிக்கவில்லை.
வரவேற்று விசாரித்தேன்
அவர்களைப் பற்றிய செய்திகள்
சேகரிப்பில் நிறைய:
ஏகதாரன் வந்தான்
முகமன் கூறி வரவேற்றபோது
ஈர்க்கினால் செய்த அம்பையும்
வில்லையும் கீழே வைத்து வணங்கினான்.
சுமையாக இல்லையா என்றேன்
என்னைச் சுமக்க வைத்துவிட்டார்கள்
என்றான்.
இதனால் நீ கண்டதென்ன என்றேன்
இன்னும் காடுகளுக்குள்
அலைந்து திரிகிறேன் என்றான்.
உன் மகுடத்தை எடுத்துக்கொள் என்றேன்
பிழை நேர்ந்துவிட்டது
பிழைப்புக்காகச் சிலரால்
சொல்லப்பட்ட கதைகள்
வரலாறுகளாகிப் போன பின்
என் நிலையை எப்படி விளக்குவது
எனக்கு வழி சொல்ல வேண்டும் என்று
வேண்டினான்.
கைமீறிப் போய்விட்டது
நீயே போய்ச் சொன்னாலும்
நம்பமாட்டார்கள் குடிகள்
கதைகளால் வாழ்பவர்கள் கயவர்கள்
உழைத்துப் பிழைத்துக்கொள் என்றேன்
ஒரு கப் காப்பியுடன்
விடைபெற்றுச் சென்றவன்
குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டான்
இன்னும்
கயவர்கள் வாழ்கிறார்கள்.

(ii)

நதியின் பிரவாஹத்தை
உடலின் மிக மெல்லிய கேசத்தால்
தடுத்துத் தாங்கிவிட்டாயே
பஞ்ச பூதங்களைத் தமதாக்கி
கூத்தாடும் உன் செயல்
வினோதம் என்றேன்.
ஆச்சரியத்துடன் பார்த்தான்
எனக்கு
வயதாகி வழுக்கை விழுந்துவிட்டது
இன்னும் அப்படி நம்புகிறார்களா
என்றான்.
சாட்சியாகித் துணைபோனவன்
பேசுவது வியப்பில்லை என்றேன்
அப்படியல்ல -
நயமாய்ச் சொல்லப்படும் கதைகளை
உண்மையென நம்புகிறவன் முட்டாளில்லையா என்றான்
தண்ணீரின் கால்களைத் தேடி
அலையும் எனக்கு
ரத்த அபிஷேகம் செய்கிறார்கள்
எனக்கும் அவர்களுக்குமான
இடைவெளி நீண்டு செல்கிறது.
நான் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறேன்
இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளின்
ரத்தத்தைப் பருகத் தருகிறார்கள்
என்றான்.
அழிப்பதற்கென நீ
அறியப்படுகிறாய் என்றபோது
கேவி அழுதான்
நான் கட்டுக்கதைகளால் பிழைப்பவன்
அவற்றை உருவி எடுத்துவிட்டால்
சூன்யம்தான் என்றான்
முடிவாக என்ன சொல்கிறாய்
என்றேன்
நான்கு கட்டுகளையும்
ஐந்து பூதங்களையும்
ஆறு புத்திகளையும்
ஏழு உலகங்களையும்
எட்டுத் திசைகளையும்
என்னைவிட்டு அகற்ற
கொஞ்சம் மது கொடு என்றான்
கொஞ்சம் விஷம் கொடுத்தேன்.

கவிதை சத்யன்சிபி

உனக்கும் எனக்குமான வேறுபாடு

கொலைவாளாய்த் துரத்திக்கொண்டேயிருக்கின்றன
உனது கண்கள்
நாளும் மழை பொழியும்பொழுது
நனையாமல் ஒதுங்கிக்கொள்வாய்
நான் நீராய் ஓடியோடி
மடையென மாறி வயலில் நிற்பேன்
உறிஞ்சு நீ சூரியனாய்
என் விரல் பூத்து மணிமணியாய்
விளைவித்துக் கொடுப்பேன்
நீ நடனமாடு
நான் உனக்கு விழா எடுப்பேன்
காலைச் சுற்றிய நாயைப் போல்
நீ உதைக்கிறாய்
நான் உழுகிறேன்
நான் யார், சிற்பி உழவன்
நான் கடவுள்
என்ன செய்வாய் நீ
ஒரு சிற்றெறும்பின் பசிபோக்க
இயலுமா உன்னால்

என்னைச் சாராமல்

நான் நுகரும் நிழலும்
என்னைவிட்டு நடக்கக் கற்றுக்கொண்டது
அகத்தின் வாசலில் என்னைவிட
அதற்கான
பரிமாணங்கள் முக்கியமானவை
என் விரைப்புகளின் ஒளித்தடங்களில்
கரும்புள்ளியாய்க்
காற்று மறைகிறது
சாயல்களின் ஆதரவோடு
இயங்க வேண்டிய அவசியமல்ல
மழைத்துளிக்கு
நீண்ட அலங்கோலமான வார்த்தைகளிடையில்
மெய்மையின் மெய்யறிந்து
மீண்டும் வரும்
என்னிடம்

கவிதை அருணாசலம்

துருவேறிய பாத்திரமும் ஒரு முதிர்ந்த கிழவனும்

ஒரு வயது முதிர்ந்தவர் கோடைக்கால நடுப்பகலில்
மஞ்சள் பூக்கள் நிறைந்த கொன்றை மரத்தடியில்
தலைகவிழ்ந்திருக்கிறார்
சோர்வு நிறைந்த அவர் முகத்திலிருந்து
நான் எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லை
பரந்த புல்வெளி அருகிலிருக்கும் மந்தைகள்
வெளிர் நிறத்தாலான துருவேறிய பாத்திரம் இவற்றைக்கொண்டு
நான் அவரை மேய்ப்பான் எனக் காண்கிறேன்
குற்றம் நிறைந்த என் விழிகளை அவர் அலட்சியம் செய்கையில்
உதிர்ந்துகிடக்கும் மஞ்சள் கொன்றைப் பூக்களூடே
என் படுகொலைப் பாடல்கள் அவரை நெருங்கிச் செல்கின்றன
என் முகத்திலிருந்து நான் தூர விலகிப்போய்விட்டேன்
எதையும் உறுதிப்படுத்த முடியாமல்
பல ஆண்டுகளின் பின்
நீயும் நானும்
மஞ்சள் பூக்கள் நிறைந்த கொன்றை மரத்தடியில் மீண்டும்
அவரைக் கண்டோம்
அவரைப் பற்றிய ஓர் அழகிய சித்திரத்தை நீ வரையத் தொடங்கினாய்
நான் சில நவீன கவிதைகளை எழுதினேன்
உனது சித்திரம் அவரைப் பைத்தியக்காரராகக் கண்டது
எனது கவிதைகள்
அவரை மந்தை மேய்ப்பான் என்பது போலவே எழுதிச் சென்றது
அமாவாசை இரவொன்றில் உலகின் எல்லாக் கலைஞர்களும்
எமக்குப் பாராட்டுகளையும் பரிசுகளையும் அனுப்பிக்கொண்டிருந்தார்கள்
உன்னதமான கனவின் பொருளை அடைந்துவிட்டதாக
நானும் நீயும் மாறி மாறி முகர்ந்துகொண்டோம்
பின்னொரு நாள்
நானும் நீயும் அவர்களுமாக
மஞ்சள் பூக்கள் நிறைந்த கொன்றை மரத்தடியில்
அவரைக் கண்டோம்
ஒரு கூரிய உலோகத்தால்
அவர் தன் கழுத்தை அறுத்துக்கொண்டிருந்தார்
காயத்திலிருந்து குருதி பெருகுகிறது
நாம் பேசிக்கொள்கிறோம்
அவரிடமிருந்து தூர இருந்திருக்கிறோம் ஆகவே
நாம் கொலைகாரர்களும் அல்ல துரோகிகளும் அல்ல

வயது முதிர்ந்தவரின் மரணச் சடங்கில்
பல்வேறு முகங்களும் முகர்ந்துகொண்டன.

உரைநடைக் கவிதைகள் ராணிதிலக்

எனக்குப் பசிக்கிறது



எனக்குப் பசிக்கிறது. இது எல்லோருக்கும் நடப்பதுபோலத்தான். என் பசியைப் போக்கக் கூடிய கனியொன்று அந்த மரத்தில் வாழ்கிறது. இக்கனியை வீழ்த்த ஓர் அம்பு போதுமானது. அல்லது எனது உடல் போதுமானது. நான் என் உடலை நம்பினேன். அது மரமேறத் தொடங்கியது. இந்தச் சின்னஞ்சிறிய மரமோ மேலும் மேலும் வளர்ந்தபடியே இருக்கிறது. எனக்கோ வயதாகிவருகிறது. எனக்குப் பசி தீர வேண்டும். கனி வேண்டும். என் கால்கள் மரத்தைப் பற்றியிருந்தாலும் கைகளால் கனியைப் பறிக்க முடியவில்லை. என் முதுகு சுமக்கும் அம்புக்கூட்டில், சில அம்புகள் வெளியை நோக்கிப் பார்த்தபடியிருக்கின்றன. எனக்கு வயதாவதால், மரத்தைவிட்டு இறங்கினேன். நாணில் அம்பைப் பூட்டினேன். குறி பார்த்தேன். கனியைப் பார்வை எய்தியது. என் பார்வை யைத் தொடர்ந்தபடி அம்புகள் பறந்தன. அக்கனி தரையில் விழுந்தது. ஏதோ ஓர் அம்புதான், கனியை வீழ்த்துகிறது. அக்கனியிலிருந்து அம்பைப் பறித்தேன். அம்பறாத்தூணியில் அடைத்தேன். கனியைப் புசித்து பசியை அழித்தேன். கனியை வீழ்த்தாத அம்புகள் பறந்துகொண்டிருந்தன. அவை தற்சமயம் கிளையை, இலையை, புவி ஈர்ப்பு விசையைக் கடந்துவிட்டன. அவற்றிற்கும் பசிதான் போலும்.

சனி

என் உச்சந்தலையில் சிலந்தி எதுவும் வசிக்கவில்லை. சமீப காலமாக, என் தலையை நோக்கி வரும் காக்கை, சடாரென்று கொத்திப் பறப்பது வழக்கமாக நிகழ்ந்துவருகிறது. இக்காகங்களைப் பிதிர்கள் என்பார்கள். எந்தப் பிதிருக்கு நான் என்ன செய்தேன் என்றும் தெரியவில்லை. மேலும் பிதிரைக் கல்லால் அடிப்பதுகூடப் பாவம் என்பதால் காகம் தப்பிப் பிழைத்துவருகிறது. மேலும் காகம் கொத்துவது என்பது சனி பிடிப்பது என்கிறார்கள். சனி பிடிக்கிறதோ இல்லையோ, என்னிடம் சிலந்தி இல்லை என்றாவது காகத்திடம் சொல்ல வேண்டும். என்னால் முடியாத பட்சத்தில், என் தலையை அறுத்தாவது, அதனிடம் தந்துவிட வேண்டும். எனக்கிருப்பது ஒரே ஒரு தலைதான் என்பதால் அதற்கும் சாத்தியம் இல்லை. மேலும் காகம் கொத்துவது குறித்த சந்தேகங்கள், மனதில் பலப்பல வலைகளை விரித்தபடி இருக்கிறது. எதிலும் காக்கை சிக்குவதாக இல்லை. ஒரு வேளை சிலந்தி கிடைத்தால் காகத்திடம் கொடுத்திடத்தான் வேண்டும். இப்போதைக்குக் காகத்தை விரட்டியபடி இருக்கிறேன். அது கொத்தியபடியே இருக்கிறது. அந்தி சாய்ந்த பிறகு காகம் மறைந்துவிடுகிறது. என்றாலும், இந்த இரவு காகத்தின் நிறத்தில் ஒளிரும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. அவ்வப்போது தலையைத் தொட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது.

மீனின் வார்த்தைகள்

நான் என் பார்வையைத் தொடங்குகிறேன். அங்கிருந்து ஆறு பிறக்கிறது. அது போலத்தான் ஆறு முடிவதும்கூட. இந்த ஆறு வாழ்ந்துகொள்ள, இதன் கரையில் அமர்ந்திருக்கிறேன். ஏனெனில், என்னை நானே தொலைத்துக்கொள்ளும் முகாந்திரம் இங்குதான் கிடைக்கிறது. அதன் சுழித்தோடும் ஓசையைக் கேட்கும் போது, என் கால்கள் கூழாங்கற்களை அடைந்துவிடுகின்றன. என் விரல்கள் வழவழப்பாகிக்கொண்டிருக்கும் கற்களைத் தீண்டும் கணத்தில், என் கண்கள் மீன்களைப் பார்க்கத் தொடங்குகின்றன. மீன்கள் உதடசைப்பது, அவை பார்க்கத் தவறவிடுவதும் இல்லை. என் காதுகளோ, மீன்கள் தமக்குள் பேசுகின்றன என்கின்றன. அவற்றின் பேச்சுகள் அர்த்தமானவை என்று நான் நம்பத் தொடங்கினேன். என் இதயம், மீனின் வார்த்தைகளுக்கு அர்த்தங்களை உருவாக்கத் தொடங்கின. நான் மீன்களோடு உரையாட எத்தனிக்கும்போது துரதிர்ஷ்டம் நடந்தேறியது. நீங்கள் நினைப்பதுபோலவே அந்தி சாய்ந்துவிட்டது. ஓசை மறைந்தது. அதன் பின்னால் கூழாங்கற்கள் உருண்டோ டிவிட்டன. நதியும் காணாமல்போனது. நான் காணாமல் போக முடியாது என்பதால், இந்த நகரத்திற்கு வந்தும்விட்டேன். எதிர்ப்படுபவர்களிடம் மீனின் வார்த்தைகளைச் சொல்ல முயல்கிறேன். அவர்களோ, உங்கள் உதடுகள் ஏன் மீனின் உதடுகள் போல் துடிக்கின்றன என்கிறார்கள். எங்கே என்மீதான நம்பிக்கையை நான் வெறுக்கிறேனோ, அங்கிருந்து நீர்க் குமிழிகள் அதிகமாகவே உடைபடத் தொடங்கிவிடுகின்றன. நகரமெங்கும் சும்மாவாகவே பேசியபடி திரியும் ஒருவனைப் பைத்தியக்காரன் என்று சொன்னாலும், எனக்கு ஆட்சேபம் இல்லை. அங்கிருந்தே மீன்களின் புரிபடாத வார்த்தைகள் தொடங்குகின்றன.

கவிதைகள் அப்பாஸ் கவிதைகள்

ஜன்னல்


அ) முடிவே
இல்லாததுதான்
இந்த ஜன்னல்
நீ
ஆடையை ஒப்பனையை
களைந்து, களைந்து
மாற்றுவதைப் போல
உன்னை
நோக்கிக்
காத்திருக்கிறது
ஒரு
வெளி ஜன்னல்.

ஆ) பிரபஞ்ச வெளியெங்கும்
நீந்தும்
உனது ஜன்னலில்
ஒரு
ஓவியம்
வரைந்துகொண்டிருக்கிறது
தன்
வரைபடத்தை
விரித்தபடி

இ) வெள்ளை நாரைகள்
நீந்துகின்றன
ஏரியில்
உனது கண்களைப் போலவே
மெல்ல உடையும்
ஜன்னலின்
பகலில்
உனது கண்களை
யாசித்துக் கிடக்கிறான்
ஜன்னல் மனிதன்.

ஈ) கண்களையும்
திறந்த ஜன்னல்களையும்
என்னதான் செய்துவிட முடியும்
ஜன்னல் இல்லாத
வீடொன்று வேண்டுமா
வெளியில் வா
மறைப்பே
இல்லாத பூமி ஒன்று
தகித்துக் கிடக்கிறது
தன்
நிர்வாணத்தின்
பச்சை மலைகளோடு.

உ) வெளி தெரியும்
ஜன்னலில்
என்னதான் பேசுகின்றன
உனது கண்கள்.
உன்னை மறைக்க
எது உண்டு பூமியில்
நனைந்த மரங்களும்
உதிர்ந்த மஞ்சள் பூக்களும்
நீயெனக்
கிடக்கின்றன
வெளி ஜன்னலில்.

ஊ) ஒரே ஒரு முறை
பார்க்கிறாய்
ஜன்னல் வழியே
பின்னும்
திறந்துகொள்கிறது
மற்றும் ஒரு ஜன்னல்.

எ) திறந்த ஜன்னல்
காட்சிகள் மாறுகின்றன
ஒரே நொடியில்
வேறு வேறு
வடிவங்கள்
வேறு வேறு
பார்வைகள்
எல்லாம் நொடியில்.

ஏ) உனது
ஜன்னலுக்குத் தெரியும்
உனது நிர்வாணம்
மூடுவதும்
திறப்பதும்
உன் கையில் என்றாலும்
தன் சுதந்திரத்தை
உனக்குக் கொடுத்தபடி
அது கிடக்கிறது
ஒரு பெரு
மன வாசலில்.

ஐ) ஏதாவது
ஒன்றில்தான் மிதக்க வேண்டியிருக்கிறது
தேநீர்க் கோப்பையில்
மாலை சாய்மானத்தில்
குழந்தையின் சிரிப்பில்
புகைப்பின் தனிமையில்
நீ
மிதக்க முடியாத
பகல் ஒன்று
துணைக்கு அழைக்கிறது
தன்
தனிமையின் ஜன்னலுக்கு.

கவிதைகள் ராஜ்குமார்

சூனியம் புரியாது அழுகிறார்கள்
மரணங்களில்

வெவ்வேறு வீதங்களில்
விஷம் அடைத்த குப்பிகள்
உயிர் உடைக்க அலைகிறது
வெளி எங்கும்

மரண ரட்சகர்களென
பாவிக்கப்பட்டவர்கள எப்போதோ
சிறுகுப்பிகளில் உயிர்நீத்தார்கள்.

பதட்டப்படாதிருங்கள்

உங்களின் துளைகள்
அடைக்கப்பட்டாலும், நுழையும்.
விழுங்கிக்கொண்டாலும்
விருப்பப்படி காலங்கடத்தும்.

வெளிகடந்து
வேறெங்கும் செல்வீர்கள்.
அங்கு பாருங்கள்
பூக்களையும் புல்வெளிகளையும்.

n

குரூர மிருகம்
முதல்தர மிருகத்தை
நடுவில் இருத்திக்கொள்கிறது
அலுக்கும்வரை புணர.

குரூர மிருகத்தைச் சுற்றிலும்
புணர்வோம் என்கிற கனவில்
சுயமைதுனத்தில் கழிகிறது
இரண்டாம்தர மிருகங்களின் வாழ்தல்.

குரூர மிருகக் குழுவினரின்
ஓரினச் சேர்க்கைக்கு
ஒத்துழைக்கிறீர்கள்
மூன்றாம்தர மிருகமாகிய நீங்கள்.

குரூர மிருகம் வடிவிலிருக்கிறது
நாற்காலி.

n

நுழைதல் எனும் நிகழ்வு...

தற்செயலாய் வந்தமர்ந்த
வண்ணத்துப் பூச்சி
சிந்தனையைக் கலைக்கவே
பிடித்துவிட்ட போது
என் விருப்பம் இன்றியே ஒட்டியிருந்தது
விரல் நுனியில்
அதன் வர்ணம்.

தன் இருத்தல்
விரல் மத்தியில் உறுத்தவே
ஏதோ ஒன்றில்
அழுத்தித் துடைத்து அகற்றிவிட்டேன்
அவசரமாய்.

அது எந்த ரூபத்திலும்
பறக்காமலும்
எங்காவது அமர்ந்து சிறகசைக்காமலும் இருக்கத்
தொடர் சிந்தனையினுள்
நுழையவிடாமல் பாதுகாத்தேன்
முழு பிரக்ஞையில்.

ஆனாலும்...
பறத்தல் என்ற நகர்ச்சியின்றி
கவனத்தில் தட்டுப்படாமல்
எப்படியோ புகுந்து
சிறகசைக்கத் தொடங்கிவிட்டது
இப்போது
இந்தக் கவிதை முழுவதும்.

கவிதைகள் கோகுலக் கண்ணன்

பகலொளியின் ஒலி


முதன் முதலாகத் திறக்கும் புத்தகம்போல
விரியும் இந்தப் பகல்
வேறொரு பகலின் பிரதி அல்ல:

பூங்காவின் மத்தியில்
வெளிறும் நிழல்களை அகற்றித்
தனிமையின் கிண்ணத்தில் நிரம்புகிறது
விகாசம், உத்வேகம், உவப்பு மற்றும்
நிகரற்ற ஒளி

கவிழ்த்த தொப்பியால் முகத்தை மூடிப்
புல்வெளியில் படுத்திருப்பவனின்
கால்களுக்கிடையில்
காற்று அலசும் புற்களைப் போல
துடிக்கும் இந்தப் பகலின் ஒளி
அவன் காதருகில்
பறக்கும் சிறுவண்டின் ரீங்காரம்போல
ஒலிக்கிறது.

நகர்வு

ஒரே இரவில் எல்லாம் மாறிவிட்டது
வீட்டின் அறைகள் இடம் மாறிவிட்டன
நேற்றைய படுக்கையறை இன்றைய சமைலறையாய்
நேற்றைய கூடம் இன்றைய கழிப்பறையாய்

வீட்டிடம் கேட்டேன்
ஏன் இந்த மாற்றம் என
சுவர்கள் கூறின:
ஓஎன் கால்கள் இன்று அறிந்துகொண்டன
நிற்பது ஒரே இடத்தில் அல்ல என்றுஔ

வீட்டுத்தோட்டம் பெருக்கெடுக்கும் ஆற்றின் கரையில் நின்றது
ஆற்றிடம் கேட்டேன்
எப்போது, எங்கிருந்து வந்தாய் என

ஆற்றில் முங்கித் தலை துவட்டிய
நான்
பதில் சொன்னேன்
நீருக்கு ஞாபகங்கள் கிடையாது
நகரும் எதற்கும் சரித்திரம் கிடையாது

கரையில் அவிழ்த்த ஆடையில் கிடந்த என் கால்கள்
என்னை விட்டுவிட்டு
நடக்கத்தொடங்கின

கெட்ட வார்த்தை சொல்லும் சிறுவன்

சிறுவன்
தனிமையில்
கிசுகிசுப்பாக உச்சரிக்கிறான்
அவன் அடிவயிறு பதறுகிறது
அவன் குரல் லேசாக நடுங்குகிறது
விருட்டென்று சுற்றியொரு முறை பார்க்கிறான்

மூச்சை இழுத்து
முகத்தை இறுக்கி
சற்றே உரக்க
அவனுக்கு மட்டும் கேட்கும்படி உச்சரிக்கிறான்
அவனுடைய குரல் அவனுக்குப் பிடித்திருக்கிறது
அந்த வார்த்தையைச் சொல்லும்பொழுது
அவனுடைய நாக்கு மிருகத்தின் கூர்மையான நகம் போல மேலண்ணத்தைக் கீறுகிறது
அழுகிய பழத்தின் கிறக்கமான சாறு நாக்கில் துளிர்க்கிறது
திறக்க மறுத்த பூட்டில் திரும்பும் சாவிபோல நாக்கு வளைகிறது

சிறுவன் இப்போது உரக்கக் கத்துகிறான்
முஷ்டிபோல
நாக்கை மடித்து உயர்த்தி

நடனம்

மண்ணின் இருள் அதன் வேரிலிருந்து நுனிவரை நீள
அந்தச் சிறு செடி பசும் கரங்களை முதல் முறையாக விரிக்கிறது
அப்பழுக்கற்ற ஒளி செடியின் கரங்களைப் பற்றுகிறது
மெல்லத் தொடங்கும் நடனத்தில் செடியின் அசைவுகள் நேர்த்தியற்று இருக்கின்றன
ஒளியின் சிறு அசைவும் செடியின் உடலில் பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது
செடிக்கு வெட்கமாக இருக்கிறது
நேர்த்தியான அசைவுகளைப் பிரார்த்திக்கிறது
பறவைகள் சீராக வானில் பறக்கின்றன
பக்கத்தில் நிற்கும் பெருமரம் செடியைக் கேட்கிறது
அவற்றின் சிறகடிப்பு ஒத்திகை பார்க்கப்பட்டதா
செடிக்குப் பதில் தெரியவில்லை
ஒரு சிறுபெண் செடிக்கு அப்போது நீரூற்றுகிறாள்
செடி நீரின் ருசியை ஒளிக்குத் தருகிறது
அப்பழுக்கற்ற ஒளியின் உதடுகள் ஈரத்தில் மின்னுகின்றன
செடி ஒளியை முத்தமிடுகிறது தன்னிச்சையாக
அவள் செடியையும் ஒளியையும் பார்த்தபடி நிற்கிறாள்
அவள் பாதங்களில் செடியின் ஈரம் பரவுகிறது
அவள் கண்களில் இரவில் நகரும் நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன
அவள் உடலில் பாயும் ரத்தத்தின் ஈரத்தை
முதன்முதலாய் உணர்கிறாள்
செடியின் கரங்கள் அவள் உடலுக்குள் நரம்புகளாக
நுழைகின்றன
ஒளியின் கரம் அவள் இடுப்பைப் பற்றி
அவளை மெல்ல உயர்த்திச் சுற்றுகிறது
கால்களுக்கிடையில் பொங்கும்
காற்றில் குடையாய் விரிகிறது
அவள் பாவாடை

காலத்தின் மோதல்

நடுவானிலிருந்து திடீரென
முளைத்துத் தொங்கியது
ஒரு பெண்டுலம்

இரவில் நிலைத்துவிட்ட மனிதர்கள்
தொங்கும் பெண்டுலத்தைப்
பிடித்து ஊஞ்சலாடிப்
பகலுக்கு வந்தார்கள்.
பகல் மனிதர்கள்
பெண்டுலத்தின் நிழலில்
இரவென உறங்கினார்கள்

முடிவின் ஆரம்பம் இதுவே
என்ற சாமியார்களின்
கைகளில் நீண்ட ஆலயமணிகள்
நாக்குகளைச் சத்தமின்றி உதிர்த்தன

தயார் நிலையில் ராணுவ அதிகாரிகள்
தளவாடங்களின் பளபளப்பில்
மீசையைத் திருத்திக்கொண்டார்கள்

கடவுளின் விறைத்த குறிபோல
அதிர்கிறது பெண்டுலம்
என்ற கவிஞனை
பெண்ணியவாதிகள் கொடும்பாவி
கொளுத்தினார்கள்

ஒரே சமயத்தில் எல்லாக் கடிகாரங்களும்
திகைத்து நின்றன

கடிகாரங்களுக்கு எப்படி இறுதி மரியாதை செலுத்துவதென்று
புரியாத மனிதர்கள்
பனிக்கும் கண்களை
ரகசியமாகத் துடைத்துக்கொண்டார்கள்

மலைத்துப்போன மனிதர்கள்
மலையாய்க் குவித்த கடிகாரங்கள்மீது
பெண்டுலம் மோதியது

தூக்கத்திலிருந்து திடீரென விழித்தவன் ஒருவன்
தெருவில் ஓடினான்
'இதுதான் காலத்தின் மோதல்' என்றபடி

கவிதைகள் மாதுமை சிவசுப்ரமணியம்

நீயா கணவா ...?

அந்த நிமிடங்களில் நீயாக நீயிருக்கவில்லை . . .
உன்னுள் இருந்த
மது போதை ஒருபுறம் . . . காமப் பசி மறுபுறம் . . .
இரண்டின் வெளிப்பாட்டிலும்
நீ புணரும் மிருகமானாய் . . .
காதலுக்கு மட்டுமே கசிகின்ற என் யோனி
உன் ஆவேசத்திற்குக் கசிய மறுத்தது . . .
உன் விடாப்பிடியான போராட்டத்தினூடே
என் வறண்ட யோனிக்குள்
தாகம் தீர்க்க முயன்றது உன் ஆண் குறி . . .
ஒன்று . . . இரண்டு . . . மூன்று என . . .
என் யோனித் துவாரத்தை
நீ ஊடறுக்கும் ஒவ்வொரு முறையும்
உடலைவிட மனது வலித்தது . . .
உன் வேகம் அதிகரிக்க
என்னில் கண்ணீர் தயாரானது . . .
வழமையாய்க் காதலில் கசிந்து
உன்னைக் கட்டியணைத்து
முத்தமிடும் எனக்கு
உன் மூச்சுக் காற்றின்
மது நெடி சாட்டையடித்தது . . .
எங்கிருந்தோ வந்து
அம்மாவின் முகம்
மனத்தில் நிழலாடியது . . .
இதைத்தானா
"பெண் பொறுப்பதற்குப்
பிறந்தவள்" என்றாய் அம்மா? . . .
என் உயிரின் கடைசிச் சொட்டு
பலம்வரை பொறுத்திருந்தேன் . . .
அப்பாடா . . .
உன் நீர் கசிந்து
நீ மனிதனானாய் . . .
என்ன உணர்ந்தாயோ
"பசிக்குதா?" என்றாய்
முழுதாய் உனது பசி தீர்ந்த பின் . . .
குரல் தழும்ப
"வலிக்குது" என்றேன் . . .
எந்தப் பதற்றமும் இல்லாமல்
"ஸாரிடா செல்லம்" என்றாய் . . .
உருண்டு திரண்டிருந்த
என் கண்ணீர்த் துளிகள்
மௌனமாய் வழிந்தன . . .
சில நிமிட மௌனங்கள் . . .
எங்கே என் தலை கோதி
என்னை வருடிக் கொடுப்பாயோ . . .
என எதிர்பார்த்த எனக்கு
உன் குறட்டை ஒலி
உயிரை வதைத்தது . . .
உன் தாகம்
உன் தேவை - தீர்ந்ததால்
உனக்கு உறக்கம் . . .
என் வலி
என் அழுகை - ஓயாமல்
விழி மூடி விழித்திருந்தேன் . . .

கவிதைகள் சுகிர்தராணி

மின்மினிப் பூச்சிகள் மிகுந்த அடர்வானின்
பச்சை வெளிச்சத்தில்
கூடல்ஒன்று நிகழவிருந்தது.
முன்னர் நிகழ்ந்தவை எல்லாம்
வெம்மையைக் கிளறிவிட்டுப் போகும்
பருவம் தப்பிய மழையின்
சாயலுடையதாகவே இருந்தன.
பருவச் சாற்றில் அரும்பிய மலரென
அவனுடல் மேலெழும்பி நுரைக்கிறது.
மகரந்த நெடி பரவியிருந்த
அவன் தேகம்
வெளுத்த பாளையாய் வசீகரிக்கிறது.
சுழலும் காற்றாடியைப் போல்
எனக்குள் அவனைச் சுழற்றத் தொடங்கினேன்
இறக்கைகளை இழந்து
புள்ளியில் மறைய ஆரம்பித்தோம்
காற்றாடி
வெளியின் நிறத்தொடு கட்டுண்டிருந்தது.
கூடலின் முதல் விதியை
அவனது உடல்குளத்தில் துவக்கினேன்
அவன் திகைத்து விலகி
ஏழுகடல் தாண்டி மரமொன்றின் உச்சியில்
மாட்டியிருந்த மலட்டுக் குறியை
எடுத்துவரக் கிளம்பினான்
பின் எப்போதும் அவன் வரவில்லை.

n n n

இரவுகளைப் புணர்ந்து திரியும்
கள்ளத்தனமான விலங்கினைப் போல
மிகவும் மோசமானவளாக அறியப்படுகிறேன்.
இரண்டாகக் கிழிதலுற்ற என் முகம்
சலனமடங்கிய யுத்த களத்தின்
கந்தலாடையாய் நசிந்திருக்கிறது.
பருவ நாணில் பூட்டப்பட்ட என் குரல்
ரணங்களை மென்று விழுங்கிய
துயரத்தின் ஒலியொடு பயணிக்கிறது.
காம்பிலிருந்து விடுபட்டு
வெடித்துச் சிதறும் துரியன் பழங்களென
நாற்றமெடுக்கின்றன வார்த்தைகள்.
எரிமலையின் நெருப்புக் குழம்பு
இறுகிக் கிடக்கும் கோர வடுவாய்க்
குவிந்திருக்கிறது என் தேகம்
வழக்கொழிந்த வரைபடத்தில்
உறைந்த இரத்தத்தின் மீது
படிந்திருக்கிறது என் இருப்பிடம்
வெயில் வீசும் செங்குத்தான மலைச் சரிவில்
உன்னோடு பகிரவென்றே
செதுக்கப்பட்டிருக்கிறது
என் கற்படுக்கை
என்றாலுங்கூட
என் யோனி மயிர்கள்
வளர்ந்துகொண்டுதானிருக்கின்றன.

n n n

தீரா உயிர்

ஒலியற்ற ஓசைகளால் நிரம்பியிருந்தது
அவ்வறை.
பெருமழையின் ஈரத்தில் சரிந்துருண்ட
ஒரு மலைப் பாறையைப் போல்
உயர்த்தப்பட்ட கட்டிலில் அமர்ந்திருந்தார்.
உயிரோடு பிணைந்திருந்த அவரது உடல்
பூப்பொதியினும் மென்மையுற்றிருந்தது.
அடித் தோலின் சுரப்பிகளெல்லாம்
பொன்னிறமாய் மேலே திரண்டிருந்தன.
மேனியில் படிந்திருந்த வெள்ளாடை
அறையின் பிரகாசத்தைக் கூட்டியபடி
என் விழித் திரையை வியப்பிலாழ்த்தியது.
பழுப்பு நிற நதியில் நீந்திக்கொண்டிருந்த
அவரது கண்கள்
முப்பரிமாணக் காட்சிகளில் தப்பியிருந்தன.
நோயுற்றிருந்த சுவாசம்
ஆழமற்ற கடலின் அலைபோல்
மார்பின்மீது அசைந்துகொண்டிருந்தது.
தீர்ந்த காற்றினை அவர் தேடுகையில்
என் ஞாபகப் பால் சுரந்து
கட்டிலின் கால்களை நனைக்க ஆரம்பித்தது.
கொடூர விலங்கின் குளம்பொலி நெருங்கி வர
என்னுயிரையெல்லாம் திரட்டிப் பரிசாக நீட்டினேன்.
அவரும் அவருடையதை நீட்டியிருந்தார்
அப்பாவின் உயிரோடு வாழ்வது
கடினமாயிருக்கிறது.

கவிதைகள் தேன்மொழி தாஸ்

இரவுகள்

சில ஆண்டுகளாய் என் ஆழ்மனம் இருளைக் காண்கிறது
எனது மொழியின் காலை என்ற சொல்லை
இரவுகள் கேலி செய்கின்றன
என் தனிமையைப் பார்க்கிலும் இரவுகள் கடினமானவை
மனதின் அந்தகாரம் புலம்பலாகவும்
உதடுகள் உடைந்த மகதியின் நரம்புகளெனவும் துடிக்கையில்
தண்ணீரின் வாசனை பற்றிய நம்பிக்கைகூடக்
காதலில் இல்லை
மாதங்களை நிர்ப்பந்தங்கள் எனவும்
ராவுகளைச் சஞ்சலங்கள் உலாவும் கல்லறைத் தோட்டம் எனவும் உணர்கிறேன்.
வாழ்ந்த மலைகளின் பள்ளத்தாக்குகளுக்குள்
இறந்த கால இரவுகள்
ஆற்றுக் கற்களெனக் கிடப்பதைத் தரிசிக்கையில்
நடுக்கம் என் தசைகளைக் கட்டுகிறது.
நாளை என்பது புறாவின் இறகுகளால் செய்யப்பட்ட
பட்டாம்பூச்சியெனப் பறக்கக்கூடும்
எனக்கோ
இரவுகள் நெய்கிற நூலென ஓடி
நம்பிக்கையற்று முடிகின்றன.
முதுகின் மேலும் கீழும் விரகம்
ராமுழுதும் தங்குகையில்
காதல் குளிர்காலத்துப் பனிக்கட்டி அவ்வளவுதான்
காதலுணர்வுகூட சிறகொடியும் ஈசல்
காமம் சாகத் தெரியாத பிசாசு
என் மீறுதல்களை நாட்குறிப்பேடுகளில் மூடி ஒளித்தால்
ஈவு எதுவாகவும் இருக்கும்
சாம்பலாக இயலாதவை எனத் தெரிந்தும்
காம வருத்தத்தை எருவாட்டியென உருட்டி
இராவின் முதுகில் எறிகிறேன்
ஆயினும்
ஒலிமுக வாசலில் பறவையென உறங்கவியலாத
காவலாளியைப் போல் இருக்கிறேன்.

n n n

ஆராரோ

நிழலுள்ள செடிகளை அறியாத காளானைப் போல்
காட்டில் அமர்கிறேன்
மரங்கள் புலம்புகின்றன
கூர்மையான நகங்கள் கொண்ட கால்களால்
காற்று இலைகளில் நடப்பது பற்றி
சருகுகளோ உதிரும்போது
காற்றின் பாதச் சுவடுகளைக் கண்களாக்கிவிட்டுச் சாகின்றன.
அப்போதெல்லாம்
நிர்வாணப்படுத்த முடியாத காட்டு மரங்களின் ஆடைகளை
முத்தமிடுகிறேன்
உங்களுக்குத் தெரியுமா
நதியின் துளிகள் மரங்களின் சதைக்குள் நீல நிறத்தில் இல்லை
ரத்தமென உயிர் வலிமை குன்றியதுமில்லை
ஆராரோ என்ற சொல்
காட்டுப் பூக்களின் வாசனையென்றும்
ஆரிரரோ என்ற சொல் மான்களின் விழியென்றும்
நான் யாரிடம் சொல்வது
அங்கங்கே நீண்டுகொண்டிருக்கும் மரங்களின்
கரங்களை அணைத்துப்
பைத்தியக்காரியைப் போல் இவற்றைப் பாடியலைகிறேன்.
மரங்கள் உறங்குகின்றன.
விடியற் காலையில் காட்டுக்குள் வீழும் ஒளிக் கற்றைகள்
மரங்களின் புருவங்களாகின்றன.

கவிதைகள் இளம்பிறை

இரவில் பதுங்கும் பறவை



விரிந்து கிடக்கிறது இரவு
கூரிய முட்களாக
கழிவிரக்கக் கண்ணீரில் மிதக்கும்
மெலிந்த நினைவுகளை
சுகத்திலாழ்ந்த தவிப்புகள் பெருகி
மூழ்கடித்து
முள்ளாய் இரவில்
கிடத்துகின்றன மீண்டும்.
எரிவது பொறுக்காது
எங்கோ சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும்
நதியில் நனைவதற்கான ஓட்டம்
கல்லாக்கி எறியப்பட்ட
நேசங்களில் இடறி
குருதியொழுகச் சாய்ந்து கிடக்கின்றன.
புதிதாக
ஒரு விருப்பத்தைத் தொடர்வதென்பது
ஒரு துயரத்தைத் தொடர்வதாவதால்
கீறல் வலிகளுக்கஞ்சி
அடர்ந்த மரக்கிளையொன்றில்
இரவுதோறும் பறவையாகி
அமர்ந்துகொள்ளும் ஞாபகங்களை
விருப்பமற்ற மகளைத்
திருப்பியனுப்பும் தாயாக
உடலில் சேர்ப்பித்துச் செல்கிறதிந்தக்
குளிர்ந்த அதிகாலை.

கவிதைகள் கவிதா

கவிதைகள்

கவிதா



புதுமைப்பித்தன் நூற்றாண்டை முன்னிட்டு பெண் கவிஞர்களுக்காக
நடத்தப்பட்ட போட்டியில் தேர்வு பெற்ற முதல் பத்துக் கவிதைகள்.

கவிதைகளின் தரவரிசைப் பட்டியல் சென்ற இதழில் வெளியானது.

n n n

காலத்தின் மீது என்
காலடித் தடங்களை விட்டுச் செல்கிறேன்.

மவுனங்கள் கடந்தேறி
என் தடங்கள் தொடர்ந்து
நீங்கள் வந்து சேருமிடம்

பைத்தியக்காரர்களின் கூடாரமாக இருக்கலாம்.

பின்ஜாம வேளைகளில்
யாருக்கும் தெரியாமல்
நீங்கள் கண்ட ரகசியக் கனவுகள்
பற்றி
அங்கே
அவர்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் கேட்க விரும்பாத பாடலொன்று
அங்கே ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

கடந்துவிட்டதாக நீங்கள் நினைத்த சிறுபிராயத்து
பயங்கள் சில
முகமூடிகள் களைந்து உங்களையே
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்றன

குருதி தோய்ந்த வன்மத்தோடு
என்னைத் தேடித் திரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

உங்கள்
பயங்களின் பார்வையாகவும்
பைத்தியக்காரர்களின் சிரிப்பாகவும்

அங்கேயேதான் நான் இருக்கிறேன்.

n n n

சந்தியாவின் முத்தம்

சந்தியா அப்படிச் செய்திருப்பாள்
என்று
நீங்கள் நம்ப மாட்டீர்கள்.
சந்தியா அப்படிச் செய்யும்வரை
அவள்கூட
அப்படி நினைக்கவில்லை.
அன்றைய வகுப்பின் அவமானங்களை
காலி வகுப்பறையில் அவள்
அழுது கரைத்துக்கொண்டிருக்கும் போதுதான்
சந்தியா அதைச் செய்தாள்.
அழுது வீங்கிய கன்னங்கள் துடைத்து
சந்தியா முத்தம் ஒன்று கொடுத்தாள்.
அந்த சந்தியாவிற்குப் பிறகு
அவள்
பல சந்தியாக்களைப் பார்த்துவிட்டாள்.
வளர்ந்து பெரியவளாகிவிட்ட அவள்
உலகில் இப்போது
முத்தம் தந்த சந்தியா இல்லை.
ஆனால் சந்தியா தந்த முத்தம்
அவள் வாழ்க்கையின் மீது
மூழ்கவியலாத ஒரு கப்பலைப் போல
மிதந்துகொண்டேயிருக்கிறது.

n n n

மல்லிகை சூடி
சந்தனம் பூசிக்
காத்துக்கொண்டிருந்தாள் அவள்.
காத்திருப்புகள் கருகத் தொடங்கும்போது
வந்து சேர்ந்தது அந்தச் செய்தி.
அவள் எரிந்தாள்.
எரிந்துகொண்டிருந்த உடலிலிருந்து
சந்தன முலையைக் கிள்ளி எறிந்தாள்.
ஊர் எரிந்தது.
உயிர் எரிந்தது.
காடுகள் எரிந்தன.
காலங்கள் எரிந்தன.
அவளின் பாதித் தகிப்பில்
வெந்து அழிந்தது ஒரு நகரம்.
மீதித் தகிப்பைப் பகிர இடமின்றித்
தவித்து அழுதாள்.
மூழ்கவும் முடியாமல்
மீளவும் தெரியாமல்
அவளின் ஒரு துளிக் கண்ணீரில்
இன்னும் மிதந்துகொண்டிருக்கின்றன
சில யுகங்கள்.

மௌனன் கவிதைகள்

மௌனன்
கவிதைகள்

இளம் கவிஞர் அறிமுகம்

இயற்பெயர்: கொளஞ்சிநாதன்
வயது: 28

'பேய்த்திணை' தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் இவை.

தூது இலை காலம்

வலுத்த மழை வந்தால்
நம் வீதி நதியாகும்

பெயரெழுதி எண்ணம் எழுதி
இலைவிடுதூது நிகழ்த்தியிருக்கிறோம்

ஞாபகமிருக்கிறதா
இதுவும் அந்த மழைக்காலம்தான்
தூதுஇலைகள் தளிர்விட்டிருப்பதை
ஒருமுறை பார் என்கிறேன் நான்

இலைகள் சருகாகட்டும்
என்பதாக இருக்கிறதுன் மௌனம்.

சொடுக்கு

விரல்களுக்குத்தான் தெரியும்
அந்த இன்பம்

சிறுவயதில்
தலைகோதியும் கதைசொல்லியும்
வராத தூக்கத்தைச்
சொடுக்கெடுத்து வரவைப்பாள் பாட்டி

கால் நீட்டச் சொல்லி
அம்மா எடுத்த சொடுக்குக்கு அளவில்லை

எருக்கம் பூக்களில்
சொடுக்குப் போட்டி வைத்தால்
செயிப்பேன் நான்

பேனா பிடித்தே மரத்துப்போகும்
விரல்களுக்கு இப்போதெல்லாம்
சொடுக்கெடுப்பதில்லை.

விரலைப் பிடித்து வேறு யாரேனும்
எடுத்துவிட்டால்தான்
சொடுக்கில் சுகம்

ஏக்கம் சொடுக்கெடுக்குமா.

தோழிமார் நிலம்

ஊடல் நிலமெங்கும்
வளவி ஒலி சிதறக்
கொடியிலிருந்து உதிரும் மண்ணில்

நிலத்திற்குரிய தேவதைகளில்
ஒருத்தியாகிய உன் வாசமும்
காடெங்கும் கடலை வாசமும்
நிறைந்திருக்கும்

அந்தி சிவக்கும் வரை
தோழிமார் கதைகளில்
நீயும் கதை சொல்வாய்

உப்பு பூத்த உன் கழுத்து வியர்வை
என் உணர்நீட்சியில் சுவைநீட்சியின்மீது
தாகத்தை ஏவி விடும்
கறுத்த உன்உடம்பு கரிக்கும்

ஆய்ந்து முடித்து
பெண்டுகளோடு நீ சென்ற பிறகு

குறுக்கொடிய நீ
அமர்ந்த இடத்திற்கு வந்து பார்ப்பேன்

எனக்காகவே இனிக்கும் பிஞ்சுகளும்
உரித்துத் தின்ற கடலைத்தொளும்புகளும்
மிஞ்சிக் கிடக்கும்.

கணம்

இருளை அகற்ற
மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தேன்
அந்த வெளிச்சத்தில்
ஒரு கவிதை எழுத முடிந்தது என்னால்

காற்றில்லை . . .
மெய் என்னைப் பால்கனிக்கு நகர்த்தியது

எப்போதும் தன் தலையைப்
பால்கனிக்குள் நுழைத்துக்கொண்டிருக்கும்
மாமரத்தின் ஓர் இலையைப் பிடித்து
முகத்தில் தடவினேன்
அனிச்சையாய் அப்படியோர் பொருள் கொடுத்தது
என் கவிதை.

காரணமழை

பிறிதொன்றின்மேல் சாற்றும்போதும்
உணர்வுகள் எல்லாம்
நதியில்படியும் நிலவென்பதாகவே இருக்கின்றன
பட்டாம்பூச்சிகள் விரும்பக்கூடியது
என்றொரு இசைக்குறிப்பை
என்னிடம் தந்தாய்
என் புல்லாங்குழலிலிருந்து
நீ இயற்றிய கவிதை
இசையாய்க் கசிகிறது
முன்பொரு மழைநாளில் அப்படித்தான்
தரையில் விழுந்து சிதறும் மழையில்
குடை பிடித்துக் கொஞ்சம்நனைந்தாய்
சொட்டச்சொட்டத் தூரத்தில் நின்று
நனைந்த என்னைப்பற்றித்
தோழியிடம் சொல்லியிருக்கிறாய்
சாலைகளெங்கும் குடைக்காளான்கள்
பிடித்து வரக்கூடாதா அவன்.

பேய்த்திணை

நிறைய மாற்றத்திற்குப் பிறகு
என்னுள்ளிருந்த இழையவிழ்ந்து
நீ வசிக்கும் நிலமெங்கும்
படர நேரிட்டதே அப்போதுதான்
வந்ததிந்த இச்சை அணுக்களில் இலை
இருந்தும் எனை நீ
குடிநீருக்குக் கையேந்துபவனாகவே
வைத்திருக்கிறாய்
தரம் தாழ்த்தும் உன் பார்வையில்
உயர்குடிக் கர்வம் குறையவேயில்லை
பாதகத்தி
உன் பூப்புக்குக் கட்டக் கீற்றுக்கு ஏறிய
தென்னை மரத்தில்
என்னை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும்
அன்றைய அவசர மூச்சும்
அன்று தேய்ந்துபோன என்நெஞ்சும்
பதினாறு நாள் உன்ருதுவாடைக்கு
ஏங்கித் திரிந்த பேய்க்காற்று...

சிற்றில் காலம் - 1

ஏதோ ஒரு மழைக்குப்பின்
முதன்முதலாய்
மணல்வீடு கட்டியதாய் ஞாபகம்
காலம் சில
பின்னோக்கிப் புதைகையில்
கால்சட்டைப் பையிலிருந்து
மணல்துகள்கள் உதிர்கின்றன
அத்தனையும்
கால்களால் கட்டிய வீடுகள்
எதிர்வீட்டுத் தோழனிடம்
பாதம் புதைக்கச் சொல்லிக்
கைகளால் நான் தட்டிச்செய்த வீட்டில்
மறுநாள் தேங்கியிருந்த
மழைநீர்
இப்போதும் சில்லிடுகிறது.

பற்றும் தீ . . .

அமர்ந்த பறவையின்
அதிர்வில் உதிர்ந்த
காய்ந்த இலையின்
பச்சைப் பருவம்
கூடுகள் இருந்த
கிளையில் கழிந்தது

m

மரத்தின் சருகும்
மரத்திலமர்ந்த பறவையின் இறகும்
ஒரே நேரத்தில் உதிரக்கண்டால்
எதனுள் சென்று இதயம்படியும்

m

ஒவ்வோர் இலையிலும்
காற்றின் கவிதை இருக்கும்
சருகுகளில் தீ வைத்தால்
இசை பற்றிக் கொள்ளும்.

கவிதைகள் அய்யப்ப மாதவன்

ஒற்றைக் கண் புலி

கொடூரமான
ஒற்றைக்கண் புலியின் வாயைத் திறக்கிறாள்
கடைவாய்ப் பற்களில் சதைத்துணுக்கு ஒட்டியிருக்கிறது
சுத்தப்படுத்தும் ஆர்வமின்றியே
புலிமீது பயணிக்கிறாள்

ஒரு கண்ணைக் குருடாக்கிய மானின்
கொம்புகளைப் புலித்தொண்டையில் பீறிடும்
ஜுவாலையில் தேடுகிறாள்
குரல்வளையில் ஓட்டையிட்டு துர்சத்தங்களை
விஷமேற்றித் துப்பச் செய்கிறாள்

விஷம் பரவிய இதயத்தைத் தாங்கிக்கொண்டு
காட்டின் முள்பாதை வழியே
இயக்கம்
தடுமாறிச் சரிகிறது மான்
சரியும் உடல் கண்டு
புலியின் ஒற்றைக் கண்ணைத் திறந்து விரிக்கிறாள்

வேட்கை பலித்துவிட்டதாக வாய்பிளந்து
காடு அதிரச் சிரிக்கிறாள்
மீதமான சடலத்தின் அருகில்
ஓர் ஓநாயையும் விட்டுச் செல்கிறாள்
கோபம் தணியாமல்

புலிமீது ஏறி வருபவள் அதனை விடுத்து
பெரும் புன்னகையுடன்
பிணத்தை உண்ணும் ஓநாயை
உச்சி முகர்ந்து செல்கிறாள்

l

தூண்டில்காரன்

ஓய்ந்துபோன நீரிலிருந்து
ஒரு மீனைக் கண்டெடுக்கிறேன்
மணல் வெளியெங்கும்
செதில்கள் தேய்ந்து உதிர்கின்றன
கரையில் ரத்த வாடையோடு
மீனின் உடல்
தூண்டிலோடு வந்தவன்
கைகளில் பிடித்துவிடுகிறான்
அவனைத் துரத்துகிறேன்
திடுமெனத் தோன்றிய கடலில்
மீனை விட்டெறிகிறான்
செதிலுடைந்த மீன்
நீரெல்லாம் பெரிதாகி அலைகிறது
கரையிலிருந்து நான்
அலைகளுக்குள் ஓடுகிறேன்
அலை அலையாய் என்னுடல் மாற
என்மீது நீந்துகிறது மீன்
அவன் மறுகரையிலிருந்து
கையசைக்கிறான் கேலிச் சிரிப்புடன்.

l

36ஆம் மாடி

ஒரு மாய நிழல் நான்
நகரத்தின் நிலத்தின் மீது
அலையலையாக அலைகிறேன்
ததும்பும் நுரையில்
மணல் துகளாக உடைந்துபோகிறேன்
இருளின் வாயில்
உருவமிழந்து முனகுகிறேன்
நெறிக்கும் விதியை நினைத்து

விடியும் பகலிலிருந்து
நெருப்புத் துண்டாக
பேரண்டத்தின் இமைகள் விரிகின்றன

அழகிய மலர் வாசனையுடன்
அறைக்குள்ளிருந்து விடுபட்டு
கழுகுகளிடையே நடக்கிறேன்

உருளும் தலைக்குள் கொத்திய இடத்தில்
தீபம் ஏற்றுகிற சாத்தான்களிடமிருந்து
குற்றச்சாட்டுகள் குவிகின்றன

பற்பல சாலைகள் புகழ் பெற்ற இடங்களென
ஆகிவிட
உடலில் கதறிக்கொண்டு
விலகப் பார்க்கிறது
நானாகிய மாய நிழல்
வேறு போக்கிடமின்றி
நகரின் 36ஆம் மாடியொன்றின்
விளிம்பில் நின்று கண்காணிக்கிறேன்
ஸ்தம்பிக்கவைக்க.

l

பனிப்பெண்

செயற்கையாய் உறைந்த பனிக்கட்டிகளில்
அவளைச் செதுக்குகிறேன் மிகுந்த ரசனையுடன்
கண்ணாடி தேகத்தில்
அவள் இதயத்தை வடிவமைத்தேன்
என் ரத்தத்துளிகளைப் பனிச்சிலைமீது தெளித்தேன்
சிவப்பான இதயத்தில் துடிப்புகள்
மெல்லக் கட்டியணைத்து உதடுகளைக் கடிக்கிறேன்
பனித்துளிகள் என்மீது பரவுகின்றன
வெள்ளை உடலென மாறுகிறேன்
பனிப்பனியாய் உறைய உறைய
சிலையாகிறேன்
அதிர்ந்தவள் என்மீது நெருப்பாக அலைகிறாள்
பனிக்கட்டிகள் உருகிக் கரைந்து
பெரும் நதி
நகரின் பனிக்கட்டிகளை உடைத்தோடுகிறது
மீண்டு எழுந்ததும் அவளுடன் உரையாடுகிறேன்
உரிய காதலுடன்
ஓர் இரவு அவளுடன் கடுங்குளிரில்
பனியோடு பனியாய் இறுகிக்கிடக்கிறேன்
அதிகாலை ஒளியில்
படுத்திருந்தவளிடத்தில் நான் கொடுத்த
ரத்ததுளிகள் மட்டும் தேங்கியிருக்கின்றன
குளிர்காலம் விடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

l

கரை மீன்

இரவின் கசிவிலிருந்து வந்தவள்
முத்தமிடப்படாத என் விரல்களை முத்தமிடுகிறாள்
இவள் வார்த்தைகள் நாண வைக்கின்றன
விரல்களில் விரல்களால் மேனியின்
இமை திறக்கிறாள்
உதடுகள் வழியே சிதறுகின்றன
அவன்மீது நட்சத்திரங்கள்
ஈரத்துடன்
கடல் தேடிய கரை மீன்
துள்ளித் துள்ளித் தாகத்தின் வெறியில்
நீர் பருகி
நீந்துகின்றது மேனியில்
மௌனப் பெரும் மழையில்
காற்றில் மறைகின்றன குடைகள்
அவள் குரல்வளையில் அதிரும் நரம்புகளில்
பதறும் இசை
பேரிசையில் அயர்ந்து தூங்கும்
இரவு.

l

வல்லூறுகளை அழைப்பவன்

சப்பணம் போட்டு உட்கார்ந்து
குரல்வளையிலிருந்து வல்லூறுகளை அழைக்கிறான்
கூட்டம் கூட்டமாக
அவனை வட்டமிடுகின்றன
இரை கிடைக்கும் ஆவலில்

இது வரையிலும் எந்த இறைச்சியையும்
வழங்கியதில்லை
ஆத்திரமடைந்த வல்லூறுகள்
கண்ணாடி ஜன்னல்களின் மீது விழுகின்றன

மொழி தெரிந்தவன்
கண்ணாடியில் மோதிச் சரியும்
அந்தப் பெரும் பறவையை
தற்பெருமையுடன் பார்க்கிறான்

தொண்டைக்குள் வளர்த்துவைத்திருக்கும்
குரல் வித்தையில்
அவனிடம் அந்த மலைநகரமே
நடுங்குகிறது

அவனுக்கு எதுவும் தர
யாராவது மறுக்கிறபோது
அவர்கள்மீது வல்லூறுகளை
கொத்தவிடுவதாகப் பயத்தை விதைக்கிறான்

பயந்தவர்கள்
வல்லூறுகளைத் தொண்டைக்குள் வைத்திருப்பவனிடம்
இறைச்சிகளைத் தந்துகொண்டிருக்கிறார்கள்.

l

சிவந்த கடல்

கடல் வெளியில் நடக்கிறேன்
சுற்றிய நரம்பு வலைகளுக்குள்
மிருதுவான உடல்

களைத்துறங்கும் இரவுகளில்
கெட்ட கனவுத் தசைகளை
பல மீன்கள் கவ்வுகின்றன
உதறி எடுத்துக் கைகளை அசைக்க முயல்கிறேன்
யாரோ ஒருவன் அதனை
வெட்டி எடுத்துக்கொண்டு போய்விட்டிருக்கிறான்
இருந்த இடததிலேயே உழல்கிறேன்
காயம்பட்ட புண்ணிலிருந்து ரத்தம் கசிகிறது
சிவந்த கடலலையில் ரத்தக் கவிச்சி
பெருத்த உடல் தளர்த்துகிறது
படபடப்பு குறைந்த இதயம்
சாவுக்குக் காத்திருந்தவர்கள் துரத்தி வருகின்றனர்
தாரை தப்பட்டையுடன்
கண்கள் இருட்டிக் கடல் வெளி மறைகிறது
சிதிலமான உடலில்
மூடாத கண்களுடன்
ஆழ்ந்த நித்திரையில்
ஈட்டியுடன் வருகிறாள்
வாய் மூடிக் கதறுகிறேன்.

கவிதைகள் அரவிந்த் மாரிசாமி

துடைத்துக்கொள்ளுங்கள்


பேன் பிடித்த
பரட்டைத் தலைப்பிள்ளைகள்
அவர்களுடைய அழுக்கேறிய
விரல்களால்
உங்கள் டெனிம் டிரௌஸர்களைத் தொடுகிறார்கள்.

உங்கள் முக அருவருப்பும்
ஒரு ரூபாயும்
விதிக்கப்பட்டிருக்கிறது
அவர்களுக்கு.

சுய திருப்தியும்
நிமிடக் கடவுள் உணர்வும்
உங்களுக்கு.

நாட்டைப் பற்றிய கவலையும்கூட.

நிலங்களை
உறிஞ்சிக் குடித்த நர்மதை
எங்களை உமிழ்கிறது
உங்கள் முகங்களின் மேல்.
துடைத்துக்கொள்ளுங்கள்.

நர்மதையின் சிரிப்பு

இலைகள் உதிர்ந்து
விழுந்துகொண்டிருந்தும்
நீரின் விளிம்புகள்
சலனமின்றிப் படுத்துக்கிடக்கின்றன.

வனப் பறவைகள்
குழப்பத்தோடு
நீரில் தேடிக்கொண்டிருக்கின்றன
தமது பிம்பங்களை.

எவ்வளவு முயன்றும்
நீரால் அழிக்க முடியவில்லை
வனதேவதைகளின்
சூலங்களின் மேல்
எங்கள் இறுதிப் பிரார்த்தனையின்
குங்குமத்தையும் மஞ்சளையும்.

சுவர்களில் ஈரம் கூடக் கூடப்
பல்லிகள் கதறுகின்றன.
பறவைகளுக்குச் சகுனங்கள்
புரியப்போவதில்லை.

ஏளனமாய்ச் சிரிக்கும் நர்மதையே
சொல்லிவிடு அவற்றுக்கு
புனரமைப்பும் மறுவாழ்வும்
வென்றுவிட்டதை.

நிமிடங்கள்

நிமிடங்கள் நம்
இருவருக்கும் இடையில்
கரைந்துகொண்டிருக்கின்றன.

மௌனம் பனிப் பாறையாய்
உறைந்துபோய் இருக்கிறது.
பனியின் ஆவியாய்
நம் மூச்சுக் காற்று
காற்றோடு கரைந்து
நிறைகிறது.

பார்வைகளின் சுமை தாளாத
இமைகள் சாய்ந்து
இறுகிக்கிடக்கின்றன.

மெல்ல கூடும்
இதயங்களின் ஓசை
உறைந்த பனியைச்
சின்ன உளியாய்ச்
செதுக்கிப் பார்க்கிறது.

செதுக்கித் தெறிக்கும் துண்டுகள்
நம்மீது விழ
படபடக்கும் இமைகளின்
இடையில் சிக்கி
நொந்து தவிக்கிறது
பூப்போன்ற நம் காதல்.

நினைவுப் பரிசு

கருவில்லென வளைந்த
இரு புருவங்களின்
எல்லையெங்கிலும்
செம்பூவாய் மலர்ந்திருக்கும்
இதழின் கரையோரத்திலும்
சட்டென்று பிறந்த
வியர்வை முத்துக்களில்
பட்டுத் தெறித்த
சூரியனை
இரு கைகளால் மெல்லப் பிடித்துச்
சட்டைப் பைக்குள் வைத்துக்கொள்கிறேன்
உன் நினைவாக.

கவிதைகள் கோகுலக்கண்ணன்

கண்ணாடிக் கோளத்தின் உட்புற விரிசல்கள்


மரம் ஒவ்வொரு இலையாக உதிர்க்கிறது
பறவை பாடலை இழந்துகொண்டிருக்கிறது
குழந்தை ஒவ்வொரு வார்த்தையாக இழந்துகொண்டிருக்கிறது
இரு மலைகளுக்கு நடுவில் ஒளி ஒவ்வொரு துளியாக
விழுந்துகொண்டிருக்கிறது

ஒரு முதியவனின்
முகத்தை நிழல்களின் விரல்களை மூடுகின்றன
அவன் தொண்டையிலிருந்து எழும் குரல்
காற்றின் குகைக்குள் தொலைகிறது.

தெருவில் மூன்று கால் மட்டுமிருக்கும் நாய்
வளையும் வாலை
காலாக்கத் தோற்று விழுகிறது
நிற்காமல்.

கம்பங்கள் வழி பிரயாணிக்கும் தொலைபேசிக் கம்பியில்
நேற்றும்
இன்றும்
ஹலோ
ஹலோ
என்கின்றன

அடகுக்கடை வாசலில் படுத்திருக்கும் கிழவன்
என்னைப் போலவே இருக்கிறான்
கான்க்ரீட் தரையில் அவன் நாக்கு ஒட்டியிருக்கிறது
அதை அசைத்து அவன் எழுப்பும் ஓசையில்
நான் நிற்கும் நிலம் அதிர்கிறது.

சருகுகள்மீது மோதும் பாலித்தீன் பைகளின்
சருமத்தில் வழிகிறது
பனி

காலி
ரயில்வண்டிக்குள்
பனிமூட்டம்
ஒவ்வொரு பெட்டியாக
யாரைத் தேடுகிறது?

ஒரு சிறுமி தற்கொலை செய்துகொள்கிறாள்
தவளையை முத்தமிட்டு

நெடுஞ்சாலையில் காரைச் செலுத்துபவன்
வழி மாறித்
தொலைந்துபோகிறான்
ஒரு பாடலுக்குள்

பட்டாம்பூச்சி
பறக்கிறது

ஒளியின் ஒற்றைக் கண்ணைச்
சிமிட்டிச்
சிமிட்டி

கட்டில்களடியில்
ஆணுறைகள்
சுரங்கப் பாதையைத் தோண்டுகின்றன

குழந்தை பாடுகிறது
பாடலின்
முதல் வரியை
மீண்டும் மீண்டும்

கைக்கெட்டாது பறக்கின்றன
வண்ண வண்ண பலூன்கள்
திருடனின் கனவில்

வீடற்றவனின் மூச்சுக்காற்று
நடுவாந்தரத்தில்
கோட்டையை உருவாக்குகிறது;

அவன் உறங்குகிறான்

நெடுஞ்சாலையெங்கும்
கடவுள் தொலைத்த
ஓற்றைச் செருப்புகள்

உடைந்த முட்டை ஓட்டுக்குள்
ஒரு அணில் முகத்தைப் புதைத்து
அழுகிறது

மலைமீது மழையில்
நகரும் குதிரை
மழையின் வரைபடத்தைக் குளம்புகளால் வரைந்தபடி

ஜன்னல் வழி எட்டிப் பார்க்கும் நடுத்தர வயதுப் பெண் முன்
தெரு தலைக்குப்புறக் கிடக்கிறது

இருளில் நிற்பவனின் முகத்தைப் போலிருக்கிறது
உன் காதல்
இருப்பதுபோலவும்
இல்லாததுபோலவும்
உறுத்தும் ஒளிப் புள்ளிகளுடனும்

சூதாட்டத்தில்
ஒரு காய்
இருளின் கட்டத்திலிருந்து
ஒளியின் கட்டத்துக்கு
உருளுகிறது
மற்ற காய்
மூச்சிரைப்புடன்
தலையைக் கவிழ்த்து அழுகிறது

யாரும் பார்க்காத
பொழுதுக்குள் பறக்கின்றன
வாத்துகள்
கூட்டமாக

மைதானத்தில் ஆட்டக்காரன்
பந்தை அடிக்கத் தவறி
எறிந்த மட்டை
பார்வையாளனின் மண்டையில் விழ,
தெறிக்கும் மூளையை
குட்டிக்கரணம் போட்டு "கேட்ச்" பிடிக்கிறான் ஃபீல்டர்
அம்பயர் சுட்டுவிரலை உயர்த்தி
அவுட்
என அறிவிக்கிறார்.

Saturday, March 12, 2011

கவிதைகள் எம். நவாஸ் சௌபி

பருவம் பிடுங்கும் தொடுகை

உனது ஒவ்வொரு தொடுகையும்
தொடுகையின் பின் நிகழும் எதுவும்
மீண்டும் மீண்டும் தொடரும்போதும்
அது கிழடு தட்டியதல்ல
ஒரு பாழடைந்த வீட்டைப் போன்றதுமல்ல.
உனது தொடுகை
பல கோடி மயில்களின் ஒன்றான வருகை
நிலவை அரைத்து அப்பியது போன்ற சுகம்
நீ தொடுவது மட்டுமே வாழ்வும்.
தொடுகையின் பெயரால்
உன் நுனிவிரல்கள்
என்னில் பூத்துக்கொள்ளும் அழகில்
மூச்சுக் காற்று மோதி
ஒரு நீர்வீழ்ச்சியாய் மார்பில் விழும்.
இன்னும் நீ தொடுகிறாய்
மலட்டு நரம்புகளிலும் இரத்தம் ஊறி
உணர்ச்சி பொங்க
நான் பூத்துக்கொண்டிருக்கிறேன்
இப்பொழுது
உன் விரல்கள் வண்டுகளாகவும்
இந்த வனாந்தரத்தில்
என்னைத் தொடரும் உன் தொடுகை
என் பருவத்தைப் பிடுங்கி
வானத்தில் எறிந்துவிட்டுப் போகிறது.

கவிதைகள் தேன்மொழி எஸ்.

என்னுடைய ஓவியம்

என்னுடைய ஓவியத்தின்
கருப்பொருள் நானாக இருக்கிறேன்
இருப்பதையே வரைகிறேன்
இடைஇடையே
இப்படி இருக்கலாம் என்று
நினைப்பதையும் தருகிறேன்
எப்படியோ இது அழகான
ஓவியமாகச் சொல்லப்பட வேண்டும்
தோலுக்கு நிறமேற்றுகிறேன்
வடுக்கள் பருக்கள் மறைந்து
விளக்கி வைத்த முகத்தின் பிரசவம்
அணிந்திராத ஒரு
மிடுக்கான உடையைக்
கொண்டு என்னைப் போர்த்துகிறேன்
என் நீளம்கூட சற்று
கூட்டப்பட்டிருக்கிறது
கூட்டிக் குறைத்து வரைந்து
ஒரு பாராட்டுதலுக்குரிய
ஓவியமாக மாறிவிட்டேன்
ஆயினும்
உயிர்ப்பு மின்னல் உலாவர
வெடிப்பில் மாட்டிக்கொண்ட மனம்
ஓவியனின்
கைகளுக்குப் பின்னேதான்
இருக்கிறது.

கவிதைகள் மா.சு. சரவணன்

உன்னை நிறைத்த அறை

உன்னை நிறைத்த உனதறையில்
நீயில்லாதபோது நுழைந்தேன்
உறங்க நீ பட்ட பிரயத்தனங்கள்
படுக்கையில் கசங்கிக் கிடந்தன
சுவர் மூலையில்
உறுப்பின் அசௌரியங்கள் சுருண்ட
உன் உள்ளாடைகள் கிடந்தன
அலம்பாத தேநீர் குப்பியில் ஒட்டியிருந்தது
உன் எச்சிலின் இனிப்பு
விரித்துக் கிடத்திய புத்தகத்திலிருந்து
கவிதையின் நெகிழ்ச்சி
அறையெங்கும் சுழன்றது
உன்னோடு வாய்க்காத பொழுதை
உன் வாழ்முறை இறைந்த அறையில்
உன் ஒழுங்கீனங்களோடு கழித்தேன்.

கவிதைகள் க. அம்சப்ரியா

யாரோ தொலைத்துவிட்ட நள்ளிரவொன்று
சுற்றியலைகிறது வழி அறியாமல்
வழிப்படுத்துவதாக அழைத்துச் சென்ற நிலா
நடு ஆற்றில் மூழ்கடித்து
ஏதுமறியாததுபோல் கரையேறிப் போகிறது.
சொட்டச் சொட்ட நனைந்த இரவை
காடு வரவேற்று உட்கார்த்தியது.
அடர்ந்த மரங்களின் இரைச்சலில்
மனம் பேதலித்த இரவு
மலையுச்சியிலிருந்து குதித்து
தன்னை மாய்த்துக்கொண்டதை
தூரத்திலிருந்து கண்ணீரோடு
பார்த்துக்கொண்டிருந்தன பறவைகள்
அது இனி ஆவியாக
சுற்றியலைவதை விழித்திருப்பவர்கள் பார்க்கக்கூடும்
உறங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு
நேர்வதில்லை இம்மாதிரி அபத்தம் எதுவும்!

கவிதைகள் ஜனகப்பிரியா

ஒன்றும் செய்ய இயலாது
மனம் பூட்டிய மாளிகை
புற்களிடை மறை படித்துறை
படிஇடை வாழ் விஷ ஊர்வன
நீரற்ற தெப்பத்துள்
தோண்டுகிறது நினைவு
மலர் இருந்த கூடையும்
மது இருந்த குவளையும்
மார்பணிந்த கச்சையும்
எப்போ தற்றது பார்வை
எதன்வழி யேகிற் றாற்றல்
எவ்வாறழிந்தது தொடர்ச்சி
புனல் வெளி துயில் இருளே
ஊழின் திசைவழி உலவியபோதா
பறவை உரைமொழி கேட்டு
கோட்டைப் பிளவினுள் வளர்ஆல்
ஒளி உமிழ்ந்த காலா
இன்றும் தேவை சிலருக்கு
சிறையினுள்ளும் சிம்மாசனம்
உருக்குலைந்த முகப்பின் மேலும்
பறக்கின்ற கொடி நினைவு.

விதைகள் தேவதேவன்

விண்ணோக்கிச் செல்வதும்

விண்ணோக்கிச் செல்வதும்
விண்ணை உணர்வதும்
மண் நோக்கியே பொழிவதும்
மழை நீர்த்தேக்கங்கள் என
நின்று நிதானித்து
மண்ணைக் குளிர்வித்தபடியே
விண்ணையே நெஞ்சில் நிறைத்து
விண்ணோக்கியே கிடப்பதும்
அனைத்து உயிர்களையும்
காதலின்பத்தாற்
களிகொள்ளச் செய்வதுமேயன்றோ
நம்மை வாழ்விக்கும்
நம்முடைய ஒரே செயல்!

சிறுவர் உலகம்

கல்லெறிபட்டும்
(ஒரு சின்னக்கலசல் பதற்றம், வலி அவ்வளவே)
கலங்காது
தேனையே சொரிகிறது
தேன்கூடு

கொடுவனம்

தன்னந்தனியே
ஒரு காட்டிடையே
நிற்க நேர்ந்துவிட்டதா என்ன?
நன்பகல் வேளையிலும்
இரவின் ஒலியுடன்
இருண்டு கிடப்பதேன் இவ்வுலகம்?
உயிரைப் பிடித்துக்கொண்டு
பதுங்கி வாழ் முயல்களுக்குமப்பால்
நிலவவே முடியாது
மடிந்தும் தோன்றாமலுமே போன,
யாரும் கண்டிராத
மென்னுயிரினங்களின்
மரண வாசனையோ
மரண பயமோ, இப்போது உன்
இதயத்தைப் பிசைந்துகொண்டிருப்பது?
கண்டுகொண்டனையோ,
இம்மரணத்தின் சன்னிதியில்
முற்றிலுமாய் அழித்தொழிக்கப்பட வேண்டிய
கொடுவனத்தை?
அழிக்கப்படுமுன்
இவ்வேதனையிலேயே
விரைவாய் உன் மரணமும்
நிகழ்ந்துவிடுமென்றா
அவசர அவசரமாய் அதை எழுதி
மரணத்தை வென்றுவிடப் பார்க்கிறாய்?

ஒன்று

உணர்ச்சிப் பெருக்காய்
விரிந்துகிடக்கும் சேலைகள்தாம் எத்தனை!
நம் ஒற்றை உடன் நாடுவதோ
ஒன்றே ஒன்று.
எதை எடுத்துக்கொள்வதெனத் திகைத்து
ஒவ்வொன்றின்மீதும் படர்ந்து பிரிந்து
தேர்ந்தெடுத்த ஒன்றின் மேலே
தன் அத்தனைக் காதலையும்
கொட்டிக் குவித்தவாறே
முத்தமிட்டு அணைத்துத்
தன் மெய்மறந்தவாறே
ஒன்றி
உடுத்துத்
தன் அறையினின்றும் வெளிவரும்
அவள் உதடுகளில் முகிழ்த்திருந்த
புன்னகை சொல்லிற்று
காத்திருந்த அவனிடம்
அவள் காதல் கதைகளின் இரகசியம்.

கவிதைகள் பாலை நிலவன்

பாம்பு அறை

மனிதர்களின் வாசமற்ற பூமி அல்ல இது
பேரச்சத்தால் பீடிக்கப்பட்டுள்ள
நவீன மனக் குறிகள் விதைக்கப்பட்டுள்ளன.
எழுந்து பயணமாகும் யுவன் யுவதிகள்
பூனையாக இரவில் கூடடைகிறார்கள்
அந்நாளின் தோலின் மீதுதான்
நோய்கள் விதைக்கப்பட்டன.
தினந்தோறும் பூமியின் ஒளிமுக வாசலில்
கையேந்தி நிற்கும் ஒருவனிடம்
ஒரு விதைகூடப் பரிசளிக்க இயலாத
அதே அண்டத்தின் மீது
அவன் நோயுடனே வாழ்ந்துவருகிறான்
வீடுகளுக்குள் பாம்பெனப் பதுங்கிவிட
அறைகளில் பூனைகள் மட்டுமே
சுற்றிச் சுற்றி வருகின்றனவே
அது எவ்விதம்
அதுகூட அறியாமலேயே
நோயின் தாய்மையின் கரங்களில்
மயங்கி வீழ்ந்திருக்கிறான்.
சிதைவு சிதைவு என நகரும் பூமிமீது
சிறுமலரெனத்
தன் குழந்தையையும் கிடத்தியிருக்கிறான்.
அவனோ
நோயின் தாய்மையை அறியாமலேயே
கண்மூடியிருக்கிறான்.

பஞ்சு இறக்கைகளின் வானம்

கிளர்ச்சியூட்டும் ஒரு கனவுக்காக
மலைப் பிரதேசம் வந்தவன்
பரவசத்தை மனத்தின் சிதிலத்திலிருந்து
மீட்டுகிறான்.
அதனூடாகக் காலவெளியின்
அழுகையைத் திசையெங்கும் பூசுகிறான்
அவன் முத்தத்தின் இனிப்பால்
மலையின் பெருங்கற்கள் அசைகின்றன.
பேரன்பின் வியர்வை மணமும்
மலையிலிருந்து மஞ்சு விரிப்பாக மோதி
நாசியில் ஏறுகிறது
பஞ்சு இறக்கைகளின் வானம்
தலை வழிய
மலைப் பிரதேசம் நடனத்தின்
அசைவுகளுக்குள் வந்துவிட்டது.
கீழே ஊர்ந்து நகரும் எறும்பு மனிதர்கள்
எதையுமே அறியாதவர்களாக
பெரும்பாரத்தை சுவாசத்தின் கனல் பொங்க
சுமந்து நகர்கிறார்கள்.
தேகமணம் இனிக்க
மார்பில் நீந்தும் மலைப் பிரதேசம்
கிளர்ச்சியூட்டும் கனவாக
மெல்ல விரிவுகொண்டுவிட்டது
மலைப் பிரதேசம் வந்தவனின்
காலடி நிலம்
பித்தத்தின் ஒரு கணமாக
எழுந்து நிற்கிறது.
ஆடத் தொடங்குகிறான் பைத்யன்
குலுங்குகிறது
மலை.

குட்டி மான்

அவளுடைய அழுகையை நேர்கொண்டு
அறிந்த கணம்
பரிதவிப்பும் பயண வழிகளில்
நிறைந்த கண்ணீருமாய்
அலைந்தவன் எங்கிருக்கிறான்?
லேசான மனத்தின் பயமும்
சுய பச்சாதாபமும் கலந்த அழுகையை
அறிந்தவன் யார்?
சுவர்த் தடுப்புகளின் காவிய அறையில்
பனித்த நீர்மை மிகு ஓலம்
எதைப் பற்றியது
நிராதரவு என்ற சொல்லின்மீது
நிகழ்ந்த அழுகையை
எப்படி எதிர்கொள்வது
கைவிடப்படுதலுக்கும் கைவிலங்கிடப்படுதலுக்கும்
நடுவே ஓர் இளம் பெண்
தனது வாழ்வை அழுகையின்
கரிய மலரிலிருந்து அறிந்துணருகிறாள்.
விம்முதல் மட்டுமல்ல
துளித் துளிக் கடலாய்ப் பெருக்கெடுக்கும்
பேரலையின் கடுஞ்சீற்றமுமல்ல
தன்னந் தனிமையின் நிழல் படிந்த
பெருந் தயக்கம்
தனக்கு முன்பாக நிர்மானிக்கப்பட்ட
வணிகக் கூடங்களின் பெருநகரத்தில்
ஓர் இளம் பெண்
ஓரு பொருட்டல்ல
சுவரில் சாய்ந்து
முழங்கால்களில் புதைந்து விம்மும்
ஒரு முகம்
யாருடையது?
அவளுடைய எதிர்பார்ப்பின் சரிவோ
எதிர்காலம் பற்றிய பீதியோ
இக்கணத்தில் நிகழும் துக்கமோ
எதுவுமேயல்ல உங்களை அசைப்பது
துயரத்தின் அதி உன்னதமான
சம்பாஷணையின் ஆழ்ந்த பொருளை
விளக்க அவளுக்கு எதுவுமே தடையாயில்லை.
ஏனெனில்
அவள் அழுதாள்
காடுமலைகள் தாண்டித்
தன்னைக் காவுகொள்ளத் துரத்தும்
கொடு மிருகத்திடமிருந்து
சுவாசம் பீறிட ஓடோ டிக்கொண்டிருக்கும்
ஒரு குட்டி மானின்
காலடிகளுக்குச் சமானமாய்
ஓர் இளம் பெண் அழுதாள்.

கவிதைகள் அய்யப்பன்

ஒரு முத்தத்தின் அவகாசம்

முத்தங்களை ஒருபோதும் அறிந்திராத ஒருவன்
தன் கதவினைத் தாளிட்டுக்கொண்டான்.
முறிந்த பனையின் வெறுமையோடு
அமைதியாகிக் கிடக்கிறது வீடு
நீண்ட காற்றுக்குப் பிறகு
பசுவின் மௌனம் போலொரு
அசைவுடன்
வந்திறங்குகிறாள் அவள்.
அவகாசமற்றுத் துழாவும்
அவள் கைகளுக்குக் கிடைக்கின்றன
சொற்பக் குளிகைகள் மாத்திரம்
உரத்துப் பெய்யும் மழையின் மனதோடு
உயிர்ப்பிக்கத் துவங்குகிறாள்.
நம்பிக்கையின் விடுதலையைப் பற்றி
யாதொரு அறிதலுமற்ற அவன்
தன்னிடமிருந்து
விலகிக்கொண்டு விடுகிறான்.
தூரமாகக் கிடக்கின்றன அவனது
கறுத்த உதடுகள்
அவள் ஒன்றாக்குகிறாள்
சற்று யோசித்து
எங்கோ பார்த்து
பிறகு
ஒரு முத்தத்தினைத் தானமாகக்
கொடுக்கிறாள்.
கடுகு இறைத்த மண்ணின் மணம்
ஒட்டிக்கொண்டது
அவளது உதடுகளில்.

முதலெழுத்து

புரைக் கேறும் நாடியின் நடுவாதத்தில்
நரம்புதேடி ஆழத்தில் புதைகிறேன்
காட்டேரியின் பிளப்பை உறுதிசெய்து
கருஞ்சிவப்பை உதற
ஓர் எழுத்தினை நுகர்கிறேன்
மோகம் பிடித்த நான்.
வரியும் வளைத்த சுழியும்
புதைபொருளாய்ப் பித்துப் பிடிக்க
சுரண்டி தொழியகற்றி
எறும்பென
வளர்த்துப் பின் ஊர
ஆகிறது அதன் வடிவம்.
நயன சஞ்சீவியின் நீர்க் குழம்பில்
துளைத்த அதன் சிரசில்
ஒரு தும்பைப் பூ வைக்க
கோட்டை மதில்மீது ஏறுகிறேன்.
சுவர் இடிந்து நுழைந்தவர்கள்
அம்பாடி பாட்டோ டு தூக்கியாடினார்கள்
என் எழுத்தின் கழுத்தை.

நீ என்றான பிறகு

காரணங்களிலிருந்து விலகியே நிற்கிறாய்
அற்ப வாதங்களின் அருகில்
செல்ல நேர்கையில்
திசைகள் பிரிகின்றன.
நெருக்கமான கணங்களில்
திணறுகிறது
நீ அழுத்தும் அன்பு.
பிரிவது இன்னும் தடித்த தூரத்தில்
என்பதற்காகவாவது நாம்
பிரிய முயற்சிக்கலாம்.
ஆனபின்னும்
மீதூர்ந்த காற்றின் சுவை தேடி
மருகுகிறது தேகம்
கம்பக்கட்டு வானத்தில்
தெறித்துப் போவது
நீ சுழற்றிய நான்

கவிதைகள் அழகுநிலா

இந்த முறை . . .
ஆற்றில் விழுந்த இலை
ஆற்றுக்கும் தெரியாது.
இலைமீது தும்பியொன்று
பயணிக்கிறது.
அது பயணமன்று.
எங்கிருந்தும் யாரும் எங்கேயும்
போய்விட முடியாது என்பதாய்
ஓர் அமர்வு . . . வெறுமனே.
ஆறு தும்பி அருவி இலை
யாருக்கும் தெரியாது யார்
யாரென்பது.
அண்டத்தின் தீராத பேரிருட்டில்
ஓய்ந்து மிதக்கிறது இலை.
விருட்டெனப் பறக்கிறது தும்பி.
மரம் மீண்டும் உதிர்க்கிறது
மற்றுமோர் இலையை. அது
இந்த முறை காற்றில் அலைகிறது.

கவிதைகள் ஆனந்தராஜ்

இஷ்ட தெய்வத்தின் சந்நிதியில்

முழுக் குடிபோதையில் நுழைந்தேன்
என் இஷ்டதெய்வத்தின் சந்நிதிக்குள்.
மலர்களாய் மாறிக் கையிலிருந்தன
எவரோடும் பகிர்ந்திராத வார்த்தைகள்.
அங்கிருந்த எல்லாத் தீபங்களிலும் இணைந்துகொண்டது
ஐந்து நட்சத்திர ஹோட்டல் கேஸ் ஸ்டவ் நெருப்பைப் போல்
மென்மையாய்க் கனன்றிருந்த என் அறிவு.
தரிசனத்திற்கு வந்த எவரையும் அறிந்திராத நிலையில்
கோயிலிலிருந்த ஆர்வம் குறையத் தொடங்கியது.
பிரார்த்தனையின் முக்கியத்துவமும்
தெய்வத்தின் பேரழகும் சலித்து
வெளியேறுபவர்களினூடாகப் பிரகாரத்தைச்
சுற்றிக்கொண்டேயிருந்தேன்
கடலின் தெளிந்த ஆழத்தில்
பொக்கிஷத்தைத் தேடி நீந்தும் மனிதனாக.
பில்லியர்ட்ஸ் பலகையின் வண்ணப் பந்துகளைப் போன்று
உருளும் என் நினைவுகளில்
நகரை நிராகரித்த காடு தோன்றி
எந்தக் கோவிலைவிடவும் தானே சிறப்பு எனக் கூறியது.
சூரியனைப் போலத் தெய்வத்தையும்
நேருக்கு நேர் பார்க்க முடியாதெனத் தோன்ற
வெளியேறிவிட்டேன்.
ஆய்வகக் கண்ணாடிக் குடுவையில்
ஃபார்மலினில் அமிழ்ந்திருக்கும்
அரிய ஜந்துவாகத் தொடர்ந்து காத்திருக்கிறது
என் ஆதங்கம்.

கவிதைகள் வசுமித்ர

அப்பா
நான் உங்களைக் கொலை செய்யப்போகிறேன்
சரி மகளே
முத்தம் தா

இல்லையப்பா... குருதி கசிய
சரி மகளே
முத்தம் தா

அப்பா...
உங்கள் உடலைச் சிதைத்து
சரி மகளே
முத்தம் தா

அப்பா...
அப்பா...
நிஜமாகவே...

சரி மகளே
முத்தம் தா

அப்பா
இந்த விளையாட்டு பிடிக்கவில்லை
வேறு விளையாட்டு சொல்லித் தாருங்கள்

சரி மகளே
முத்தம் தா.

l

சபிப்பது பற்றிய
ஞானத்தைக் கற்றுக்கொள்கிறேனே அப்பா
அடம் பிடிக்கிறாள் நேயா

விழிகள் குமைய
அனுப்பிவைத்தேன் அவளை
என் முகத்தில் அறையுங்கள்
அவளை...
அவளை...
சாத்தானுக்கு அறிமுகம் செய்தேன்

நகங்களை நீட்டாதே
விழிகளின் நிறம் மாற்று
அவள் சிறுமி

அறிவுரைகளை
வேண்டுகோளாய்க் கொட்டி
வீடு திரும்பினேன் கண்ணீர்த் துணையுடன்

விரல்கள் உலரும் முன்
வீட்டுக்கு வந்தாள் சிறுமி நேயா குதித்தபடி
சாத்தான் நிழல்போல் பின்னால் நின்றான்

வழியனுப்ப வந்ததாகவும்
அவள் சிறுமியென்றும் சொல்லி அகன்றான்

பிறிதொரு நாள்
அலுவல் வேலையாய்ச் சாலையைக் குறுக்காகக் கடக்கையில்

நடை வீதியில் நின்று
சாத்தான் அனைவருக்காகவும்
ஆசீர்வதித்துக்கொண்டிருந்தான்.

l

துரோகம், மயக்கும் விழிகளுடன் வருகைபுரிகிறது
தனிமையில் பற்றியெரியும் என் அறையை நோட்டமிடுகிறது

நளினமான உடலசையக் கதவைத் தட்டுகிறது
திறந்த கதவின் வழியே வசந்தம் பீறிட்டு வீச
மயங்கிச் சரியும் துரோகத்தை அணைத்துக்கொள்கிறாள்
சிறுமி

அறைக்குள் நுழையும்
நான்
விசித்திர சப்தம் கேட்கிறேன்

ஒரு
குடம்
தண்ணீர் ஊற்றி
ஒரு
வனம் பூத்ததே...

என் விரல்கள் உதற
செவிக்குள் தாவரம் பூக்க

துரோகத்தைப்
புல்லாங்குழலாக்கி
என்
உதட்டில் பொருத்துகிறாள்
நேயா.

l

மீன்களை மயக்கி
நித்திரை கொள்ளச் செய்யும்
குளமொன்றிற்கு
முத்தம் தருகிறாள்
மகள் நேயா...

குளம்
கடலாக
திமிங்கிலங்கள்
விழித்தெழுகின்றன.

l

அறை அதிர
சுண்டுவிரலால் கதவு தட்டும் சப்தம்
முழு மௌனம் கொண்டு
தாழ் நீக்குகிறேன்

சூரியனின் ஒரு துண்டை வாயில் கடித்தபடி
ஒளித் திவலை வழிய அவன்
நண்பன் மற்றும் வீரியமிக்க எதிரி

வழியும் நீரைப் புறங்கையால் துடைத்தபடி
கால்களை நிதானித்து மாற்றி
எங்கே உன் சிறுமி
பார்க்க வேண்டும் அவளை

கனவுகள் குழம்ப
தரையில் அமர்கிறேன்

என் விழிகள் பார்த்தவனின் கைத்தொலைபேசி ஒலிக்க
சாவகாசமாய் கையில் எடுத்து
பதில் வாங்கக் காதில் பொருத்துகிறான்

எங்கே போனாய்
நான் உன் அறையில்...

சிறுமியின் குரல்
அறையை நிறைக்க
மயங்கிச் சாய்கிறான்

அவனுக்கு
சிறுமியென்றே அவளை விவரித்திருந்தேன்

சொல்லியிருக்க வேண்டும்
அவளுக்கு விலாப்புறம் இரண்டு சிறகுகள்
மற்றும்....

கவிதைகள் ராஜன் ஆத்தியப்பன்

மின்சாரமற்ற இரவில் மௌனம்
தூரத்து ஒலியைக் கூர்மையோடு
இருளில் பாய்த்துச் செல்லும்.

மரணத்தில் கரிய மலர்கள்
தமது வசீகர மனத்தைப் பரப்பத் தொடங்குகின்றன.

சப்தங்கள் ஒளிதழுவி
இயங்குவதை விரும்புகின்றன.

வெளிச்சம்போலன்றி
இழுப்பதற்கு எதுவுமற்று
அறையினுள்ளும் புறமும்
ஒரு மரக்கட்டையாய் வாழ்வு வெள்ளத்தில்
மிதக்கிறது இருள்.

ஒளியை ஒருக்காலும்
கட்டித் தழுவ முடியாது
இருளை எப்போதும்
தழுவிப் புணர முடியும்.

இருளின் நிறமென்ன என்ற கேள்வி
எழும்போது நகைக்காதே
ஒருவேளை அது மிருகங்களுக்கு மாத்திரம்
தெரிந்த விஷயமாயிருக்கலாம்
ஏனெனில் மிருகங்கள்தான் இருளைப் பார்க்கின்றன.

l

எதன்மீதும் குறுக்கீடு நிகழ்த்தவில்லை நான்
எனது இருப்போ
மண்புழுவினுடையது போன்று மறைவாயிருக்கிறது.

மங்கலான எனது மொழி
காற்றைக் கீறிப் பிளக்கக் கூடாமல்
நீரிலிட்ட பரல்கல்போல் மூழ்கி மறைகிறது.

எனது உடலைக் கையால் ஒதுக்கியபடி
கூட்டத்தில் ஆட்கள் நகர்கின்றனர்.

எனது பாதச் சுவடுகளில் கால்களால் மண் பறித்து
மூத்திரம் பெய்து மூடுகின்றன பூனைகள்.

ஒரு கோணிப்பையாய்
பேருந்தில் பயணிக்கிறேன்.

தலைக்கு மேலாகப் பறக்கும் புறாக்கள்
எந்தத் தேவனின்
ஆசீர்வாதத்தையும் கொண்டுவராமல்
தொலைவில் கடக்கின்றன.

அகண்ட வெளியின்
ஒரு சிறிய இழையை எடுத்துப்
பின்னத் துவங்குகையில்
சொப்பனம் முடிந்துவிடுகிறது. எதன்மீதும் . . .

l

உனது பாதங்கள்
நாளொன்றில்
மிகச் சிறிய பரப்பினைத் தீண்டி மீள்கின்றன.

குறைந்த சொற்களை
ஒரே மாதிரி உச்சரிப்பதில்
ஒரு நாளின் உரையாடல் முடிகிறது.

ஒளியில் கரைந்திருக்கும்
நிழல்களை உற்று நோக்காமல்
விழிகள் குனிந்து பார்ப்பதோடு
ஒரு நாளின் விழிப்பு வீழ்கிறது.

உடலின் தூர ஒலி கேட்காத
உன் செவிகளில்
நாளெல்லாம்
கண்ணாடி உடைவது போன்ற சப்தம்
குடைந்தபடியிருக்கிறது.

பாய் விரிக்கும்போதெல்லாம்
உனது ஒரு முடி நரைக்கிறது
இன்னொரு முடி உதிர்கிறது.

ஆடை கழற்றி முடிவதற்குள்
உனது
சொப்பன ஸ்கலிதம் நிகழ்ந்துவிடுகிறது

கவிதைகள் இன்பா சுப்ரமணியன்

யாருமற்ற வீட்டில்

யாருமற்றுத் திறந்துகிடக்கும் வீட்டின்
மேசைமேல்
விரிந்து கிடக்கும்
புத்தகத்தை
யாரோ வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்
அதன் அடுத்தடுத்த
பக்கத்தைத் திருப்பியபடியிருக்கிறார்கள்
யாரேனும் உள்ளேறும்
அவ்வேளை
வெளியேறிவிடுகிறார்கள்
அவ்வறையைவிட்டு
திரைச்சீலை மட்டும் அசைந்துகொண்டிருக்கிறது.

கவிதைகள் ந. இரமேஷ்குமார்

தாம்பத்தியம்

வலியை ஏற்படுத்தும்
ஆவேசங்களின் கிரீடங்களைச்
சரிபார்த்து நிறுத்து

அயர்ச்சி, தளர்ச்சிக்குப் பின்
என்னைக் கைமாற்றிவிடுகிறாய்
இரவிடம்

எதிர்விருப்பமறியா
உந்தன் செயல்பாடு உணர்த்திச்செல்லும்
உன்னுடனான என் இருப்பை

இருந்தாலும்
நீ துப்பும் வார்த்தைகளை
ஏற்படுத்தும் எரிச்சலை
கீறிக்கொள்கிறேன்
பிரியங்களின் நகங்களால்

கசங்கிய காகிதத்தைப்
பிரிக்கும் நேர்த்தியென
என்னைக் கையாளும் உனக்காய்
மடியையும் மார்பையும்
வழங்க வாய்ப்பளிக்காமல்
அபகரிப்பது எதனால்

வாழ்வென்பதன் பார்வைகள்
வேறுவேறுதான் நமக்குள்
சரி நான் கண்ணை மூடிக்கொள்கிறேன்
நீ மட்டும் பார்.

கவிதைகள் ஆனந்த்

ஆதிமொழி

தண்ணீரில்தான்
எல்லா ரகசியங்களும்
பரிமாற்றம் கொள்கின்றன

முன்னெப்போதும் இல்லாத சாகசங்களில்
முனைந்து திரியும் பறவைகள்
ஆதிமொழியில் பேசிக்கொள்கின்றன

பல கற்றும் பல கேட்டும்
பறவையின் இறகொன்று
வேண்டுமென்று அலையும்போது
வழியில் கண்ட முதிர்கன்னிகள்
சேர்த்துவைத்திருந்த கதைகளில்
இளவரசியின் இரவுப் பொழுதுகள் பற்றி
வெளியில் பரவின வதந்திகள்

ஆற்றங்கரையில் அலைகள்
அற்றுப்போகும் காலம் வேண்டி
காத்திருந்த வேளையில்
காதங்கள் கடந்துவந்த
கானத்தில் பொதிந்து நின்றது
உனக்கும் எனக்கும்
மட்டுமேயான ரகசியம்.

நத்தைகளின் பயணம்

எல்லாம் மாறிப்போகும்
கணத்துக்கு முன்னால்
கைகூப்ப மறுத்ததில்
ஒழுங்கு கலங்கியது

கட்டடங்களின் சுவர்களும்
வாசல்களும் சாளரங்களும்
காணாமல்போகும்போது
மிஞ்சுவது கல்மரங்கள்

பித்தனும் சித்தனும்
குதிகாலைப் பிடித்திழுக்கும் வேளையில்
அடையாளம் காண முடியாமல்
அமைதி குலைந்தது

விரிந்தன இதழ்கள்
வீட்டுக்கு வெளியில் ஒரு காலும்
உள்ளே ஒரு காலும் வைத்து
மனம் திரிந்துபோனது

மண்ணும் நீரும் சேர்ந்து
சேறாகக் கலந்து
புதிய பயணத்தைத் தொடங்கின
நத்தைகள்.

n

எனக்கான இடங்கள்

இப்போது
மலையேறி விளையாடுகிறேன்
கணக்குப் போடுகிறேன்
மாடிப்படி ஏறியிறங்குகிறேன்

சிறுவயதுக்குப் போய்
கனவுகள் காண்கிறேன்
கற்பனைகளில் சஞ்சரிக்கிறேன்

பிறப்பதற்கு முன்னால்
இருந்த இடத்துக்குப் போய்
தூங்குகிறேன்

நீண்டு விரியும் வெளியில்
யாருமற்றுக் கரைந்துபோகிறேன்.

கவிதைகள் வா. மணிகண்டன்

கலாமந்திர் விளம்பரப் பலகையில்
முதுகு காட்டிப் படுத்திருந்தாள்
வினைல் பெண்.
இடுப்பில் சிறிய
மடிப்பிருந்தது.
மடிப்பில் ஊர்ந்த
விளக்கொளியின் இருள் எறும்பைக்
கரங்களை நீட்டித்
தொட முயன்றேன்.
கூச்சமாக இருந்தது.
தாங்கிப் பிடித்த
கம்பி வழியாகச் சொன்னேன்.
வெம்மையான நிலம் குறித்துப்
பேசும்போது
உன் விரல்களுக்கிடையேயான
பரப்பினை
நினைத்துக்கொள்வேன் என்று.
சிரித்துவிட்டு
மீண்டும் திரும்பிக்கொண்டாள்.
குழப்பத்தில்
அவசரமாக நகர்ந்தான்
சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தவன்.

n

எவருடைய நிழலும்
வருடியிராத
இந்தப் புள்ளியில்தான்
எரிமலையின் சிதறலொன்று
கடந்து சென்றது.

n

என் ஜன்னலைத் திறந்தால்
பெயர் தொலைத்துவிட்ட பிணம்
கிடக்கிறது. சகதியப்பிய முகத்துடன்.
துருத்திய பற்கள் அதன்
அமைதியைக் குலைக்கின்றன.
தெரிந்த முகங்களைத் தன் முகத்தில் பொருத்தி
நடுக்கமூட்டுகிறது.
தூர நின்று பார்த்துவிட்டு நகரும்
மூன்று மனிதர்கள்
பயந்து நெருங்கும் சில நாய்கள்
தாவித் தாவி வரும் காக்கைகள்.

தவிர
வேறு யாரும் வருவதாக இல்லை.
இரவில் மழை நனைக்கலாம்
நாளை
வெயில் அதன் முகத்தைச் சுடலாம்.
கண்களை மட்டும் அந்தக் காக்கைகள்
எடுக்க
குடல் நாய்க்கென்று இருக்கக்கூடும்.

சற்று விறைக்காமல் இருப்பின்
என்னைப் பார்த்துச் சிரிக்கும்.
அல்லது கூட்டிச் செல்லச் சொல்லும்.

அநாதைப் பிணங்களின் உலகம் வேறுபட்டது.
எது குறித்தும் யோசிக்காமல்
நகர்ந்துவிட வேண்டும்.

n

பிளாட்பாரத்தில்
தொடை தெரியத் தூங்குபவள்
பஸ்ஸில் முறைத்தவளை
ஞாபகப்படுத்துகிறாள்
தலை நசுங்கிக் கிடப்பவன்
கழுத்தில் பொருந்துகிறது-
நேற்று மணக்கோலத்தில் பார்த்தவன்
முகம்
காயத்தின்
குருதியில் தெரிகிறது
உன் உருவம்.
அடையாளமற்ற
புள்ளியில் திருகுகின்றன
நிகழ்வுகள்

n

மஞ்சள் வெயில்
பூ
காதல்
மழை
பறவை
நீ
அல்லது
நான்
என்று எளிதாகச்
சொல்ல முடிவதில்லை.
மரணத்தை.

கவிதைகள் நரன்

புத்தகத்தின்
73ஆம் பக்கம்
கிழிக்கப்பட்டிருக்கிறது
அதில்தான்
தம் கரும்புரவியை
மேய்ந்து வரும்படிக்கு
அவிழ்த்துவிட்டிருந்தான் வீரன்
கிழிந்த பக்கத்தைத் தேடி அலைகிறான்
வாசகன்
குதிரையும் வீரனும் ஒருவரையொருவர்
தேடி அலைகின்றனர்
கிழிந்து விழுந்த கானகத்தில்.

n

முழுவதும்
வரைந்து முடிக்கப்பட்ட ஓவியத்திலிருந்து
பறவைகள் பறந்துவிடுமென எண்ணி
அதன்
சிறகுகளை மட்டும்
வரையாமல் விட்டு வைக்கிறாய்.
பின்னொருநாள்
வெறிச்சோடிக்கிடக்கிறது
பறவைகளற்ற ஆகாயம்

காணாமல் போய்விட்டது
உன் தூரிகை.

n

மலையடிவாரத்திற்கு
மேய்ச்சலுக்குச் சென்ற
எருமைகள் திரும்புகின்றன
அந்த மாலையின் இறுதியில்
புறவழிச்சாலையின் வழியே
ஊருக்குள் நுழைகிறது
இருள்
தன் கழுத்து மணியோசையை
எழுப்பியபடியே.

கவிதைகள் விசித்ரா

உயிர் தின்னும் மரணநதி

சலனமற்ற இரவில்
சலசலத்து ஓடும் மரண நதி
ஈவிரக்கமின்றி இழுத்துச் செல்கிறது மனிதர்களை

நதியின் தந்தையர்களாலும் புதல்வர்களாலும்
பிணங்களில் ஊற்றப்பட்ட வன்முறையின் நாற்றம்
ஜனநாயகத்தின் நறுமணத்தை மூழ்கடிக்கிறது

நதியின் இருளில்
மெழுகுவர்த்திகள் அணைந்துபோகின்றன

இருப்பின் அத்திவாரம் உடைந்த
குழந்தையினதும் கிழவனினதும் உயிரில் விழும்
மரண நதியின் ஓசை
அவர்களைத் தின்னுகிறது

அணைகளிடப்படாத் தேசத்தில்
இன்னும் கழுவப்படாத வன்முறைகளும் இருளுமாய்
மரணநதி பெருகிப் பாய்கிறது.

கவிதைகள் சின்னசாமி

மனப்படுகை

கதறும் அங்கத்தினர்களுக்குத் தாயாக,
விடமாய் உள்ளதென
பாலருந்தியவர்கள் புலம்புகிறார்கள்

மலர்களால் வாசம் வீசும் அகப்பை,

சேற்றுக் குளத்துத் தாமரையை
சிதைத்துத் துப்பப்
பாயும் எருமைகள்.

கால்கள் பிணைத்த சிலம்புகள்
சிதறும்போது சிலதூரம் நடக்கலாம்.
மார்பழுத்தும் வண்ணப் பதக்கங்கள்
மரிக்கும்போது உயிர்ப்பிக்கப்படலாம்.

மனிதனாவதற்கு
இதயங்கள் கொல்லப்பட வேண்டும்
மூளை செயலற்றுப்போனால்கூடப்
பரவாயில்லை.

எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள்
எப்போது என்னைப் புதைப்பீர்கள்.

கவிதைகள் அழகுநிலா

சொந்த முகத்தின் குறுக்குவெட்டுத்
தோற்றமாய் நெஞ்சதிரச் செய்கின்றன
எல்லாமும்.
மரத்திலிருந்து மரம் குருவியிலிருந்து
குருவி.
சட்டென வழிகிறது கண்ணீர்.
மாவீரனின் முதுகெலும்பை மூடிப்
படுத்திருக்கிறது மண்மேடு.
மேய்ந்துகொண்டேயிருக்கின்றன
பசுக்கள்.
தோட்டமும் பசுக்களை விடுவதாக
இல்லை.
பனிக்குடம் உடைந்து பொத்தென்று
விழும் கன்றின் கனத்தில்
நசுங்குகின்றன புல் குழந்தைகள்.
யாரோ கதை சொல்ல
யாரோ கேட்டுக்கொள்கிறார்கள்.
கரைக்குப் போய் மீண்டும்
ஏரிக்கே திரும்புகிறது
படகு.

n

பழுத்ததாய்த் தேடி வந்தமர்கிறது
கிளி.
எதுவென்று கேட்க முடியாது.
காடெங்கும் பாம்புகள்.
சொல்லித் தீராத கதை
ஒன்றும் புரிவதாக இல்லை.
உயர உயர எழும்புகிறது
சுவர்.
உறைக்குள் மின்னுகிறது
வாள்.
கதிரவன் மறையும் நேரமிது.
இருள் சூழ்ந்து இமைமூட
நீ வருவதென்பது
வராமலேயே இருப்பதாகிறது.

n

நீ குகையைத் தேடியலைந்தாய்
நான் மலையைத் தேடியலைந்தேன்.
தவம் ஒன்றுதான்.
ஒருவருக்குத் துணையாய் மற்றவர்
எதிரெதிர் திசைகளில் சுற்றித்
திரிந்தோம்.
காற்றால் நிரம்பி நீராய் வழிந்தது
ஜாடி.
பாதி உறக்கத்தில் முனகினோம் . . .
'மலைமீது ஏதுமில்லை . . .
குகைக்குள்ளும் . . .'
தொலைந்த குழந்தைகள்
வேண்டும் நமக்கு.
மலையில் வழிந்துகொண்டேயிருக்கிறது.
குகைக்குள் நிரம்பிக் கசிகிறது
நிசப்தம்.
நள்ளிரவில் நீ விழித்திருக்கிறாய்.
காடெங்கும் அலைகின்றன உனது
கால்கள்.
உனக்குத் தெரியாது . . .
குளம் முழுக்க விண்மீன்கள் மிதக்க
தாமரைகளாய்ப் பூத்துக் கிடக்கும் வானில்
நானும் குழந்தைகளும் உறங்குவதும்
எதற்குள்ளும் எதுவுமில்லை
என்பதும்.

n

மடிப்புக் கலையாத மேலாடை
அலமாரியில்.
உன்னையும் காணோம்
என்னையும் காணோம்
குறும்புக் கையொன்று பூவைக்
கிள்ளியெறியத் தேனுக்காக அலைகிறது
சிட்டு.
தனக்குத் தாயுமில்லை தந்தையுமில்லை
என்கிறான் ஞானி.
மேலே நிலவு மிதக்கத்
தோகை விரித்துக் கூத்தாடி
செத்து விழுகிறது மயில்.

n

அழுக்கு நீர் அருந்தி ஒய்யாரமாய்
நடக்கின்றன வாத்துகள்.
மேலுலகில் பன்னீரில் மூழ்கிக்
களிக்கின்றன தேவதைகள்.
மாலையொன்று கழுத்தில் விழுகிறது.
பூக்களே இல்லை தோட்டத்தில்.
அது ஆணாக இருப்பதால்
இது பெண்ணாக இருக்கிறது.
மரமும் வேண்டும் நிழலும்
வேண்டும் நமக்கு.
வைரம் ஜொலிக்கிறது.
உண்மை புரிய மறுக்கிறது.
பொய்க்குப் பொருளே இல்லை.
குழம்பித் தானாகத் தெளிகிறது
சேறு.
யாருக்கும் கேட்காத தொலைவில்
பறவையொன்று தனது முடிவற்ற
கீதத்தைப் பாடிக்கொண்டேயிருக்கிறது.

கவிதைகள் சைதன்யா

சாம்பல் விட்டில் பூச்சி


கவிதை எழுதிக்கொண்டிருந்தபோது
என் பக்கத்தில்
பறந்து வந்தது - ஒரு
பச்சை விட்டில் பூச்சி
நீங்கள் நம்பமாட்டீர்கள்
எனக்கும் பச்சை விட்டிலுக்கும்
எந்தச் சம்பந்தமுமில்லை
என்னை மடியில் அமர வைத்துப்
பாலூட்டியது என்றால்
பிளவாளுமைதான் என்று
உங்கள் மனத்துக்குள் தோன்றும்
ஆனால்
என் குழந்தைகளுக்கு
தீப்பெட்டிக்குள் வைத்துக்கொண்டு
விளையாடும் வித்தை கற்றுக்கொடுத்தது
விட்டில் பூச்சிதான்
சிரிப்பில் பூமியைக் குலுங்கவைத்து
இமைகள் இளைப்பாறும்போது
ஒரு தடவை தவறி
அடுப்பங்கரையில் விழுந்தது
அன்றிரவு தூங்காத
என் கடைசிக் குழந்தை
காலையில் எழுந்து
சாம்பலைக் கிளறிவிடுகிறது
முகத்தில் அப்பிய சாம்பலில்
விட்டில் பூச்சி முணுமுணுத்தது...!

கவிதைகள் எஸ். நடராஜன்

ஒப்பனை

நாம் எல்லோரும் ஒன்றாய்க்கூடி அமர்ந்திருக்கிறோம்
தூக்கத்திலிருந்த ஒரு மிருகம்
கண்விழித்துக்கொண்டது.
இதழ்களை அகட்டிக் கண்சுருக்கி முகம்மலர
நாம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறோம்
பசிநிரம்பிய அந்த மிருகம் தன் இரை தேட மெல்ல எழுந்தது.
கைகளைக் குவித்தவாறு தோள்களை வருடி
நம் அக்கறையைப் பறிமாறிக்கொண்டோம்.
உதிரம் வழியத் தன் பற்களை நெறித்து
இரை கொண்ட மிருகம் பசியாறியது
வலுவாய்ப் பிணைந்த நம் நேசத்தைப் புதுப்பித்து
கைகுலுக்கி நாம் பிரிகிறோம்.
பின் ஓய்வெடுத்துக்கொள்ளத் தன் வலையைத் தேடி
அது கதவைச் சாத்தித் தூங்கியது.

கவிதைகள் கார்க்கோ

நேற்று
சூனியக்காரர்களுடன்
உரையாடிக்கொண்டிருந்தேன் அன்பரே
சகஜமாய் விவரித்தார்கள்
குரூரங்கள் உற்பத்தியாகும்
கொடுங்கதைகளைப் பற்றி
உரையாடலில்
இருள் கவ்வக் கவ்வ
என்னிலிருந்து வெளிப்பட்டன
ஒரு சில கெட்ட வார்த்தைகள்
இழந்த நம்பிக்கை
அச்சுறுத்துகிறது
இன்று நானும் மாறிப் போகலாம்
ஒரு சூனியக்காரனாய்
அப்படியானால் அன்பரே
என்னைத் தைரியமாய்
எதிர்கொள்ளுங்கள்
என் முந்தைய காலச்
சிறுகுறிப்புடன்.

கவிதைகள் இசை

பணிமனை

மனோரம்யமான மாலைவேளையின்
கடற்கரை நிலத்திலிருந்து
வெக்கை எழும்பும்
என் இருக்கைக்கு இழுத்துச் செல்லப்படுகிறேன்
ஒரு பிடிவாதமான சிறுமியை
பலம் பொருந்திய ஒற்றைக் கை
அனாயாசமாக இழுத்துச் செல்வதைப் போல்
கடலைத் திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அது எழுந்து உடன் வராது எனும் போதும்
கடல் முயன்று பார்க்கவே செய்தது
வரிசையாக அலைகளை எழுப்பி
என்னை நோக்கி விரட்டியது
பண்டகசாலைகள் பெரிய பெரிய கட்டிடங்கள்
அவைகளை மிரட்டி
மீண்டும் கடலுக்குள் தள்ளிவிட்டன
கடைசியாக ஒருமுறை கால் நனைத்துக்கொள்ள
நான் அனுமதிக்கப்படவில்லை
நுரைகளை அள்ளி
முகம் கழுவிக்கொள்ள
வாய்ப்பேதுமில்லை
பணிமனை நுழைவாயிலில்
கவனமாகச் சோதனையிடப்பட்ட நான்
புட்டத்தில் ஒட்டியிருந்த
ஒன்றிரண்டு மணல் துகளையும்
பறிகொடுக்கிறேன்

n

புத்தன் அழுதான்

ஆற்றமாட்டாது
கண்ணீர் பெருக்கியபடி இருந்த ஆனந்தாவுக்கு
திடீரென தான் ஒரு புத்தன் என்பது
பிரக்ஞையில் படவே
அழுகையை நிறுத்திக் கண்களைத் துடைத்துக்கொண்டான்
நித்ய ஸாந்தமும் மந்தகாசமுமாய்
தன் முகத்தை நிலை நிறுத்த முயன்றானெனினும்
அங்குமிங்கும் இழுத்துக்கொண்டு நெளிந்த
முகரேகைகளின் வழியே கண்ணீர் பீய்ச்சியது
அது அவன் தம்மங்களனைத்தையும்
அடித்துக்கொண்டோடியது
மறைவிடம் தேடி ஓடும் ஆனந்தா
எவ்விடம் போயினும் நீ ஒரு புத்தனே
இன்னும் சில வினாடிகளில்
மரிக்க இருக்கிறான் உன் புத்தன்
அவனுடலெங்கும் சிந்தட்டும் உன் கேவல்கள்
வாரி அள்ளி மடியிலிடு
பெருங்குரலில் வெடித்தழு புத்தா

n

மயக்கு வித்தைக்காரன் பின்செல்லும் சிறுமி

எது உன்னை அவ்விடம் நோக்கி
வசீகரம் கூடிய மாயக்கரங்கள்
வாவென்றழைக்க, கிளம்பிவிட்டாய்
மயக்கு வித்தைக்காரன் பின்செல்லும் சிறுமி நீ
சரளைக்கற்களின் மீது
மேடான மேட்டில்
எதற்கிந்த நடை
வியர்வைப் பெருக்கில் ஆடைகள் நவநவத்து விட்டன
நீ சலித்து ஓயும் ஒவ்வொரு வேளையிலும்
அது தன் வனப்பின் சின்னஞ்சிறு துளியை
உன்மீது தெளிக்கிறது
நீ மறுபடியும் சிறுமியாகிறாய்
வேண்டாம் இவ்வலி என்று சொன்னால்
பாதி தூரம் வந்துவிட்டேனே
எனக் கலங்கும் நண்பா
அரவக்குட்டிகள் பதுங்கிக் கிடக்கும்
காட்டுவழி துவங்குகிறது
நல்லதற்கே சொல்கிறேன்
இப்போதேனும் திரும்பிப் போ

கவிதைகள் ஆகர்ஷியா

நம்மைப் பற்றிய கவிதை

ஆளாளுக்கு ஒப்பனையேற்றி
மேடையேறுகிறோம்.
இயங்கியல்
நம்மைத் தத்தமது வட்டத்துள்
வரையறுத்துள்ளது.
உன் ஒப்பனை கலையாது நானும்
என்னைக் குலைக்க மனமின்றி நீயும்
சம பருமன்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது.
வேடிக்கையதுவல்ல
ஒப்பனையற்றிருத்தல்கூட ஒருவித
பாத்திரமேற்பிற்கான
ஒத்திகையென்பதை
ஆளாளுக்கு மறந்து
விடாதிருக்கிறோம்.
இதனால்தான் போலும்
நம்முடைய வட்டங்கள்
ஒன்றையொன்று இடை
வெட்டிக்கொண்டதேயில்லை.
வெளியே பலரும் மெச்சுகிறார்களாம்
நம் இயங்கியலுக்குள்ளோடும்
ஒத்திசைவை
எத்தனையோ வருடத் திரைநீக்கத்தில்
ஒருவித கலையலங்காரத்துடன்
சலிப்பேதுமின்றிய பாவனையில்
ஆனாலும் என்னவோ
வட்டங்கள் மையொழுகக் கரைந்து
வெண்தாளில் பீச்சியடிப்பதாய்
ஏக்கம் மிகுந்த கனவுகள் மட்டும்
இப்பவும் என் இரவுகளில்!

ஆகர்ஷியா (பவானி அருளையா) யாழ்ப்பாணம் புங்குடு தீவில் பிறந்தவர். இவரது 'நம்மைப் பற்றிய கவிதை' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை இது. தொகுப்புகள் மூன்றும் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக விரைவில் வெளிவர உள்ளன.

கவிதைகள் அழகு நிலா

முழு நிலவொளியில் ஒளிர்கிறது நகரம்.
புரவியின் பிடரி மயிரைத் தடவுகின்றன
கரங்கள்.
கண்களில் கசிகிறது கடந்தகாலம்.
நிலவில் முதல் அடியை எடுத்துவைக்கிறது
புரவி.
விண்மீன்களைத் தாண்டிச் செல்லத்
துடிக்கின்றன குளம்புகள்.
புரவியின் மூச்சுக் காற்றில் அதிர்கின்றன
போதிமரத்தின் இலைகள்.
முதுகுத் தண்டில் வேர்விட்டு
ஆகாயத்தில் கிளை பரப்புகிறது மனம்.
உள்ளங்கையில் உதிர்கிறது
எதிர்காலம்.
மின்னும் கண்களால் புத்தனைத் தேடுகிறது
இரவு.
வெளியைக் கிழித்துப் பறந்து
புள்ளியில் ஒடுங்குகிறது புரவி.

கவிதைகள் அனார்

வண்ணத்துப்பூச்சியின் கனாக்காலக் கவிதை

உனது பெயருக்கு
வண்ணத்துப்பூச்சியென்றொரு அர்த்தமிருப்பது
எவ்வளவு பொருத்தம்
இல்லாவிட்டால்
என் கூந்தலிலும் தோள்களிலும்
உதடுகளிலும் அமர்ந்து பறந்து திரிய
உன்னால் முடிந்திருக்குமா என்ன
உணர்வெங்கும் குந்திச் சிறகடித்துத் திரியும்
சாகசத்தை
வண்ணத்துப்பூச்சியாய் இல்லாது போனால்
எப்படி நிகழ்த்திக் காட்டுவாயெனக்கு
உன் தந்திரத்தின் மாயம் அளவற்றது
உள்ளே பாடல்போல மிதக்கின்ற
வண்ணத்துப்பூச்சி
வெளியே பிடித்துவைக்க முடியாத கனா

பைத்தியம் பிடித்திருக்கும் இந்நாள்களிலெல்லாம்
வண்ணத்துப்பூச்சியை மொய்க்கின்ற மலராகப்
பறந்துகொண்டேயிருக்கிறேன்
வாழ்வின் கனாக்காலம் முழுவதும்
பருவங்கள் மாறிமாறிப் பறக்கும்
வண்ணத்துப்பூச்சிகள்
தம் வண்ணங்களால் உயிரூட்டுகின்றன
நம் அந்தரங்க வெளிகளில்
வானவில் படிந்து உருகிக்கிடக்கும்
மலைகளின் தொன்மப் புதையல்களில்
மௌனம் குருதிசொட்ட ஒளிந்திருக்கிறேன்
இன்னொரு முறை
மகரந்தச் சொற்களினால் சிலிர்ப்பூட்டும்
பூங்கொத்துகளில் துளிர்த்துத் தேனூறும்
வண்ணத்துப்பூச்சியின் பிரம்மாண்டமான
கனாக்காலக் கவிதை நானென்பதில்
உனக்குச் சந்தேகமிருக்கிறதா இனியும்

பகிர்ந்துகொள்ளாத மாலை

சாம்பல் வெள்ளையாய்
மழை மூசாப்பு தொடங்கும்
அந்தியில் விகசிப்பது
என்னைச் சுற்றிக் குளிர் வலையை
விரித்துக்கொண்டேயிருப்பது
உன் உருவம்
வைக்கோற் கட்டுக்களை
அடைத்துக்கொண்ட மாட்டு வண்டிகள்
வரிசையாக
வயல் பாதையில் வருகின்றன
கறிவேப்பிலை பொரிந்த எண்ணெய் மணம் பரவச்
சிணுங்கும் மணிகளின் இசையோடு
மாலையின் ருசியைக் கூட்டுகிறான்
கடலை வியாபாரி
காற்றின் கிழிந்த ஓரங்களைத்
தைத்து முடிப்பதில்
அவசரம் காட்டுகின்றன
ஒரு சோடித் தும்பிகள்
நெருப்பு நிற மாலைக் கதிர்கள்
ஆற்றுநீர் மேற்பரப்பில்
மருதாணியிடுகின்றதா மயக்கத்தை
பதுங்கிவரும் வாடைக் காற்றின்
எதிர்பாராத தொடுதலில்
அதிர்ந்து சிலிர்க்கின்றன மஞ்சள் மலர்கள்
நான் கற்பனை செய்கின்றேன்
இத்தருணங்களில்
உன் இதமான நெருக்கத்தைப்
பருகாது ஆறிய தேநீரிடம்
நாம் பகிர்ந்துகொள்ளாத
இம்மாலைப் பொழுது தோல்வியைத்
தழுவுகின்றது.

வெறித்தபடி இருக்கும் கனவு

வெளிச்சத்தை இருட்டைத்
தின்று வளர்கிறது கனவு
தண்ணீரிலும் காற்றிலும்
தன்னைப் பூசிவிடுகின்றது
காலத்தின் தொலைவுவரை தகிக்கும்
வெப்பத்தைக் குடித்த கடுங்கோடையென
உதடுகளில் தேங்கிக்கிடக்கிறது
அறியப்படாத புலத்திலிருந்து
நீலச்சிறகுகள் மின்னலென விரிந்திற்று
அவ்விரு சிறகுகளில் தூக்கிவைக்க முயல்கிறேன்
தழல் விட்டெரிகிற அதே கனவைத்
தப்பமுயன்ற அதன் அதிசய நிழல்
காலை வெயிலில்
உருவற்று அலைகின்றன
ஆதியில் விடுபட்டுப்போயிருந்த
என் பொற்காலக் கனவை
மெல்லக் கைகளில் அள்ளுகிறேன்
இசையின் நுண்இழைகளால் மூடுண்டகாடு
அதன் இயல்புகளுடன்
அனுமதிக்கின்றது மழையின் கனவை
நீர்ப்பெருக்கின் கசிவு படிந்திருக்கும் கரையில்
தீராத கேவல்களாய்ப்
பரவிச் சிதறும் கனவுக் குமிழிகள்
கட்டிலின் மூலை நான்கிலும்
முயலின் பளபளக்கும் கண்களாய்
மிரட்சியுடன்
உன்னை வெறித்தபடியிருக்கும் என் கனவு

அனார் (இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம்) கிழக்கிலங்கையின் சாய்ந்த மருதுவில் பிறந்தவர். இவரது 'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இவை.

கவிதைகள் வினோதினி

முகமூடி செய்பவள்

அவளது வீட்டின் சுவர்களெங்கும்
அவள் செய்யும் முகங்கள்.

தனது
குருதியிலொரு துளி
மூச்சின் ஒற்றைத் துணுக்கு
மூப்புறுந் தசைத்திரள் சிறிது சேர்த்து
முகங்கள் செய்கிறாள்.

நடு நிசியில் பகலின் வெளிச்சத்தில்
எனது ஊரில்
எங்கோ ஓர் உயிர் இறக்கையிலும்
மற்றொன்று பிறக்கையிலும்
யாரோ ஒருவர் கொல்லப்படுகையில்
கேள்வி கேட்கும் உரிமை தொலைத்து
அவர்கள் தலைகள் தாழ்கையில்
அவள் முகங்கள் செய்கிறாள்.

ஒரு பெண்ணின் காதல் மறுக்கப்படுகையில்
அவள் பலவந்தமாக இச்சிக்கப்படும்
பொழுதுகளில்
குழந்தைகள் பயந்து அழ மறக்கையில்
வெடிச்சத்தங்கள் பறவைகளின் கூடுகளை
உலுப்புகையில்
காரணமேதுமற்றுக் கடத்தப்பட்டவன்
தன் வாழ்வு பற்றி அச்சமுறுகையில்
வீடொன்று ஆளற்றுத் தனிக்கையில்
கிராமமொன்று கைவிடப்படுகையில்
அங்கே நாயொன்று
உணவின்றி அலைந்து உயிர்விடுங் கணத்தில்
பாலுந் தேனுங் குடிக்கும் எமது கடவுளர்
இல்லை எனத் திட்டப்படுகையில்
அவள் முகங்கள் செய்கிறாள்.

முகங்களின் மூச்சும்
மூடாத கண்களின் பார்வையும்
குழந்தைகளது என ஏமாந்து
அவள் உயிரூட்டும் முகங்கள் எப்படியோ
அவளது கனவுகளைக் களவாடிவிடுகின்றன
அவ்வப்போது.

நீ போனதும்

செய்ய வேண்டியது நிறைய இருந்தது
நீ போனதும்
உனக்கும் எனக்கும் இடையில்
தங்கிய காலத்தை அகற்றுதல்
உனது வாசனை பரவிய

படுக்கையை மாற்றுதல்
நீ பிய்த்தெறிந்த பூவிதழ்களை வீசுதல்
உனது ஆன்மாவை ஒளிக்கும்
உடைகளைத் துவைத்தல்
நீ கிழித்துப்போட்ட காகிதத் துண்டுகளை ஒட்டுதல்
(அதில் நீ நமது பெயர்களை
எழுதியிருக்கக்கூடும்)
எனச் செய்ய வேண்டியது நிறைய இருந்தது.
நீ போனதும்
மழை பெய்துகொண்டிருந்தது
நகரெங்கும் என்மீதும்.

l

எனது பாடல்களை நான்
எழுதி முடிப்பது இன்றல்ல நாளையுமல்ல
எனில் என்று?
எழுதாத எனது பாடல்கள்
எல்லாம் அந்தச் சிறுமியின் கைகளில்,
எப்போது வேண்டுமெனிலும் தரமாட்டாளாம்.
தான் விளையாடாதபோது
எடுத்துக்கொள்ளென்கிறாள்.
அவள் தூங்கும்போது முயல்கையில்
ஒரு சொல் வருவதற்குள்
விழித்துக்கொண்டு அவள் சண்டையிடத்
தோற்றுப்போய்ப் பதுங்கிவிடுகிறதென் ஆன்மா
எனது பாடல்களை நான்
எழுதி முடிப்பது இன்றல்ல நாளையுமல்ல
யாருமறியாமல் அவை பத்திரமாக
இருக்கின்றன
அந்தச் சிறுமியிடம்.

வினோதினி (வினோதினி சச்சிதானந்தன்) யாழ்ப்பாணத்தில் இருக்கிறார். இவரது 'முகமூடி செய்பவள்' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இவை.

கவிதைகள் எஸ். தேன்மொழி

11வது நிழல்சாலை


பாதங்கள் வழியாகச் சிரமங்களும் அவஸ்தைகளும் நழுவ
எதிர்ப்படுகிற மனிதர்களில்
எத்தனை பேர் காதல் வயப்பட்டிருப்பார்கள்
முந்தைய இரவில் மனைவியை அடித்தவனின் எண்ணம்
முதுகெலும்புக்குள் இப்போது எப்படி அலையும்
வாழைப்பூவின் பிசினிலிருந்து ஒருவனுக்கும்
வாழைத்தண்டின் நாரிலிருந்து ஒருவனுக்கும்
இந்தக் காலை புறப்படுகிறதே
நேற்றிரவு நிறைவு பெறாத பெண்மையும்
நிறைவுபடுத்தாத ஆண்மையும்
இந்தப் பகலில் எந்த மிருகத்தின் உருவத்தில் நடக்கும்
காதலிக்காகத் தசைகளைப் பெருக்குகிறவனின் உலகம்
பிரிவுக்குப் பின் இந்தச் சாலையை எப்படி எதிர்கொள்ளும்
கொலைகாரனும் கொலை செய்யப்பட்டவனும்
ஓடிய திசையினை அறிந்தவன் யார்
குடிகாரனின் வார்த்தைகள் சிதறிக்கிடக்கிற இடத்தில்
பவழமல்லியும் கிடக்கின்றன
இந்தச் சாலையைக் கட்டமைத்தவர்கள் யாரேனும்
இதனூடே நடந்து செல்வார்களா
கொடுங்கனவுகள் பற்றி நண்பர்கள் பேசிச் செல்வார்களா
முதுமையின் வியர்வையும் இளமையின் வியர்வையும்
வேறு வேறான இசையுடன் என்னைக் கடந்துபோகின்றன
பெண்களின் தளிர் உடல்கள் எல்லாப் பாடலிலும் ஊடுருவுகின்றன
என் விரல்இடுக்கு வழிநடத்தும் நாய்க்குட்டியின் கண்களில்
உணரப்பட்ட வாசனைகளின் குவியல்
காதுகளில் தொடர்ச்சியற்று விழும் உரையாடல்கள்
வாழ்வின் இறுக்கத்தைச் சற்று முடிச்சிடவும் அவிழ்க்கவுமாய்ப்
புரியவேயில்லை
11வது நிழல் சாலையில் என் தனிமையும் பயணித்திருக்கிறது.

கவிதைகள் தேவேந்திர பூபதி

எண்ணுடல்


வெகுநாள்களுக்குப் பிறகுதான் தெரிந்தது
நான் ஒரு தொலைபேசி எண்ணாய் இருக்கிறேன் என்பது
அழைப்பு என்பது கொடூரமானது
உறக்கத்தின் மத்தியில் நடுநெற்றியில்
சம்மட்டியால் அடிப்பதை
ஒரு இனிய குரல் எப்படிப் பிசாசைப் போல அலறும்
மேலும் அது என் காதுகளைப் பிடித்துத்
தலைகீழாக வேறு தொங்கும்போது
உறங்காத என் இமைகளில் இருந்து
காதலின் சொற்கள் வெளியேறியபடியே இருக்கின்றன
அதனுடன் கொஞ்சம் வசவுகளும்
எனது பணி மேசையில் குதித்தாடும்
அழைப்பெண்களின் ஓசை
பாறைகளைச் சல்லிகளாக்கும்
இயந்திரத்தினுடையதிலும் சத்தமானது
பழைய முத்தங்களை இப்போது
மறுபரிசீலனை செய்கிறேன்
சில அதீதச் சிணுங்கல்களுடன் செல்லம் கொஞ்சுகின்றன
தாவரங்களைப் பற்றியும் மலைச் சரிவுகள் குறித்தும்
கதை சொல்பவையும் உண்டு
பணிமாற்றம் குறித்துக் கவலை மறைத்து
மகிழ்ச்சி தெரிவிப்பவை சில
கடுமையான விமர்சனமும்
கவிதைகள் குறித்துச் சிலாகிப்பவையும் வருகின்றன
எனது கண் எல்லாத் திசைகளிலும் இயக்கப்படுகிறது
எதிரே உருவமற்று என்னை ஆணையிடும்
குரல்களுக்கு முன்னால் எனது எண்
வெளிகளின் இணைப்பற்ற இடைவெளிகளில்
மௌனமாய்ப் பதுங்குகிறது
குரல்களின் வலையில் அகப்பட்டிருக்கிறது எனது உடல்
மாயச் சிலந்திகளின் கண்கள்
ஊடுருவும் ஒரு பார்வைக்கு முன்பாக
எனது தொலைபேசி அலறுகிறது.

n

புலிநகச் சகோதரர்

ஒருபுறம் புலியின் உருவமும்
மறுபுறம் ஒரு பிரபுவின் தலையும்
அச்சடிக்கப்பட்ட நாணயம்
ஒன்றுக்காகச் சகோதரனிடம்
ஏற்பட்ட தகராறு
தலைப்பகுதியில் தழும்பாய் எஞ்சியிருக்கிறது
அது செல்லாத காசு என்றறிந்தும்
என் பால்யம் பிறகு
எங்கு செல்லும் எனப் புரிந்தும்
மறையாத தழும்பின் கீழ்
சக உதிரம் தேம்புகிறது
காலத்தில் நான் புலியாகவும்
மறுபுறம் பிரபுக்களின் வேட்டையாகவும்
நிலம் கிடந்து தவிக்க
நாணயங்களுக்குக் கீழ் போர் நடக்கும்
காலத்திற்கு வந்து சேர்ந்தேன்
செல்லாத நாணயங்களைப்
பொறுக்கும் எந்த விரலிலும் இப்போது
புலிநகம் பளபளக்கிறது
பிரபுக்களோ
தங்கள் பால்ய காலத்தில் கிடக்கிறார்கள்.

n

பறவைகளின் பாடலுக்குத் திரும்புவது

இதற்கு முன் என் காதலைப்
பத்திரப்படுத்தியவளிடம்
எனது கபடமின்மையைச் சேகரித்தவளிடம்
மந்திரவாதியின் உயிர் இருக்கும்
கிளிக்குஞ்சைப் போல்
எனது அன்பை விட்டிருக்கிறேன்
அவள்தான் சொன்னாள்
நீ இன்னும் மாசடையவில்லை
உனது கண்களின் வஞ்சகமின்மையை
நான் அறிவேன்
நீ திரும்புவாய் ஒரு தேவதையின்
தாலாட்டிற்கு
ஒரு மலரின் அழகை ஆன்மீகமாய்க் காண்பதற்கு
இன்னும் உனது கால்களில் நோவு அகலவில்லை
அழைப்புகளில் வஞ்சகம் மறையவில்லை
உனது வானம் மழையை மையமிடவில்லை
நதிகளிலோ அசுத்தங்கள் கலக்கின்றன
இருப்பினும் திரும்புவாய்
பறவைகளின் பாடலுக்கு
நெருப்பின் பழம் தன்மைக்கு
அல்லது ஒரு கனியின் உந்துதலுக்கு
கனவுகளில் அவள் கூவுகிறாள்
திரும்புவாய் உன் ஜீவிதத்திலிருந்து
ஒரு தாய்மைக்கு
அதனின்றும்
பத்திரப்படுத்துவேன் உன் காலத்தின் களங்கமின்மையைப்
பால்மணம் வீசும் உன் முத்தத்தையும்.

கவிதைகள் கவிதா

ஆன்மாவை இசைக்கும் கலைஞன்

நட்சத்திரங்களற்ற இந்த இரவில்
என் அடர்ந்த வனங்கள்மீது
அவனது இசை
ஒரு மாயவித்தையை
நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

அவன் இசையின் சில
அதிர்வுகளில்
காலத்தின் அதிகாரங்கள்
பிறழ்வுகொள்கின்றன.

அவனது இசையிலிருந்து மீளும்
ஆசுவாசத்தை
என் இரவுகளுக்கும்
ஒளியை
என் பகல்களுக்கும்
அவன் தந்துகொண்டிருக்கிறான்.

பின்ஜாம வேளைகளில்
எனக்காக மட்டுமே
அவன் இசைத்துக்
கொண்டிருப்பது
யாருமறியாதிருந்த என்
தனிமையின் ஆழங்களை;
யாருக்கும் காண்பிக்கப்படாத
என் ரகசிய துயரங்களை;
வாழ்வு தின்றுகொண்டிருக்கும்
என் மென்கனவின் மௌனங்களை

நிச்சலனமான இந்தப் பொழுதின் மீது
அவன் விரல்களிலிருந்து அவன் கசியவிட்டுக்
கொண்டிருப்பது
என் ஆன்மாவை.

n

தம்மை நிகழ்த்திக்கொள்ள
ஒரு களம் தேடி அலைந்துகொண்டிருக்கின்றன
என் யுத்தங்கள்.

போர் முரசுகளின் பெரும் ஒலிகளுக்கிடையில்
நிலவும் சிறு அமைதிகளுக்குப்
பழகிவிட்ட களம்,
யுத்தங்களிடமிருந்து தன்னை
ஒளித்துக்கொள்கிறது.

கொடும்பூதங்களென யுத்தங்கள் வளரும்போது
தன்னை மேலும் சுருக்கிக்கொண்டு
கூடுதல் எச்சரிக்கைகளோடு
மறைவிடங்களைப் பாதுகாத்துக்கொள்கிறது
களம்.

இறுதியில்
என் யுத்தங்கள்
தோற்றுக்கொண்டிருக்கின்றன.

களங்களுக்கு எப்படியோ தெரிகின்றன
யுத்தங்களின்
ரகசிய வலிகள்.