Saturday, March 12, 2011

கவிதைகள் விசித்ரா

உயிர் தின்னும் மரணநதி

சலனமற்ற இரவில்
சலசலத்து ஓடும் மரண நதி
ஈவிரக்கமின்றி இழுத்துச் செல்கிறது மனிதர்களை

நதியின் தந்தையர்களாலும் புதல்வர்களாலும்
பிணங்களில் ஊற்றப்பட்ட வன்முறையின் நாற்றம்
ஜனநாயகத்தின் நறுமணத்தை மூழ்கடிக்கிறது

நதியின் இருளில்
மெழுகுவர்த்திகள் அணைந்துபோகின்றன

இருப்பின் அத்திவாரம் உடைந்த
குழந்தையினதும் கிழவனினதும் உயிரில் விழும்
மரண நதியின் ஓசை
அவர்களைத் தின்னுகிறது

அணைகளிடப்படாத் தேசத்தில்
இன்னும் கழுவப்படாத வன்முறைகளும் இருளுமாய்
மரணநதி பெருகிப் பாய்கிறது.

No comments: