Saturday, March 12, 2011

கவிதைகள் இன்பா சுப்ரமணியன்

யாருமற்ற வீட்டில்

யாருமற்றுத் திறந்துகிடக்கும் வீட்டின்
மேசைமேல்
விரிந்து கிடக்கும்
புத்தகத்தை
யாரோ வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்
அதன் அடுத்தடுத்த
பக்கத்தைத் திருப்பியபடியிருக்கிறார்கள்
யாரேனும் உள்ளேறும்
அவ்வேளை
வெளியேறிவிடுகிறார்கள்
அவ்வறையைவிட்டு
திரைச்சீலை மட்டும் அசைந்துகொண்டிருக்கிறது.

No comments: