Saturday, March 12, 2011

கவிதைகள் கார்க்கோ

நேற்று
சூனியக்காரர்களுடன்
உரையாடிக்கொண்டிருந்தேன் அன்பரே
சகஜமாய் விவரித்தார்கள்
குரூரங்கள் உற்பத்தியாகும்
கொடுங்கதைகளைப் பற்றி
உரையாடலில்
இருள் கவ்வக் கவ்வ
என்னிலிருந்து வெளிப்பட்டன
ஒரு சில கெட்ட வார்த்தைகள்
இழந்த நம்பிக்கை
அச்சுறுத்துகிறது
இன்று நானும் மாறிப் போகலாம்
ஒரு சூனியக்காரனாய்
அப்படியானால் அன்பரே
என்னைத் தைரியமாய்
எதிர்கொள்ளுங்கள்
என் முந்தைய காலச்
சிறுகுறிப்புடன்.

No comments: