Saturday, March 12, 2011

கவிதைகள் சைதன்யா

சாம்பல் விட்டில் பூச்சி


கவிதை எழுதிக்கொண்டிருந்தபோது
என் பக்கத்தில்
பறந்து வந்தது - ஒரு
பச்சை விட்டில் பூச்சி
நீங்கள் நம்பமாட்டீர்கள்
எனக்கும் பச்சை விட்டிலுக்கும்
எந்தச் சம்பந்தமுமில்லை
என்னை மடியில் அமர வைத்துப்
பாலூட்டியது என்றால்
பிளவாளுமைதான் என்று
உங்கள் மனத்துக்குள் தோன்றும்
ஆனால்
என் குழந்தைகளுக்கு
தீப்பெட்டிக்குள் வைத்துக்கொண்டு
விளையாடும் வித்தை கற்றுக்கொடுத்தது
விட்டில் பூச்சிதான்
சிரிப்பில் பூமியைக் குலுங்கவைத்து
இமைகள் இளைப்பாறும்போது
ஒரு தடவை தவறி
அடுப்பங்கரையில் விழுந்தது
அன்றிரவு தூங்காத
என் கடைசிக் குழந்தை
காலையில் எழுந்து
சாம்பலைக் கிளறிவிடுகிறது
முகத்தில் அப்பிய சாம்பலில்
விட்டில் பூச்சி முணுமுணுத்தது...!

No comments: