Sunday, March 13, 2011

கவிதைகள் மாதுமை சிவசுப்ரமணியம்

நீயா கணவா ...?

அந்த நிமிடங்களில் நீயாக நீயிருக்கவில்லை . . .
உன்னுள் இருந்த
மது போதை ஒருபுறம் . . . காமப் பசி மறுபுறம் . . .
இரண்டின் வெளிப்பாட்டிலும்
நீ புணரும் மிருகமானாய் . . .
காதலுக்கு மட்டுமே கசிகின்ற என் யோனி
உன் ஆவேசத்திற்குக் கசிய மறுத்தது . . .
உன் விடாப்பிடியான போராட்டத்தினூடே
என் வறண்ட யோனிக்குள்
தாகம் தீர்க்க முயன்றது உன் ஆண் குறி . . .
ஒன்று . . . இரண்டு . . . மூன்று என . . .
என் யோனித் துவாரத்தை
நீ ஊடறுக்கும் ஒவ்வொரு முறையும்
உடலைவிட மனது வலித்தது . . .
உன் வேகம் அதிகரிக்க
என்னில் கண்ணீர் தயாரானது . . .
வழமையாய்க் காதலில் கசிந்து
உன்னைக் கட்டியணைத்து
முத்தமிடும் எனக்கு
உன் மூச்சுக் காற்றின்
மது நெடி சாட்டையடித்தது . . .
எங்கிருந்தோ வந்து
அம்மாவின் முகம்
மனத்தில் நிழலாடியது . . .
இதைத்தானா
"பெண் பொறுப்பதற்குப்
பிறந்தவள்" என்றாய் அம்மா? . . .
என் உயிரின் கடைசிச் சொட்டு
பலம்வரை பொறுத்திருந்தேன் . . .
அப்பாடா . . .
உன் நீர் கசிந்து
நீ மனிதனானாய் . . .
என்ன உணர்ந்தாயோ
"பசிக்குதா?" என்றாய்
முழுதாய் உனது பசி தீர்ந்த பின் . . .
குரல் தழும்ப
"வலிக்குது" என்றேன் . . .
எந்தப் பதற்றமும் இல்லாமல்
"ஸாரிடா செல்லம்" என்றாய் . . .
உருண்டு திரண்டிருந்த
என் கண்ணீர்த் துளிகள்
மௌனமாய் வழிந்தன . . .
சில நிமிட மௌனங்கள் . . .
எங்கே என் தலை கோதி
என்னை வருடிக் கொடுப்பாயோ . . .
என எதிர்பார்த்த எனக்கு
உன் குறட்டை ஒலி
உயிரை வதைத்தது . . .
உன் தாகம்
உன் தேவை - தீர்ந்ததால்
உனக்கு உறக்கம் . . .
என் வலி
என் அழுகை - ஓயாமல்
விழி மூடி விழித்திருந்தேன் . . .

No comments: