Saturday, March 12, 2011

கவிதைகள் அழகுநிலா

இந்த முறை . . .
ஆற்றில் விழுந்த இலை
ஆற்றுக்கும் தெரியாது.
இலைமீது தும்பியொன்று
பயணிக்கிறது.
அது பயணமன்று.
எங்கிருந்தும் யாரும் எங்கேயும்
போய்விட முடியாது என்பதாய்
ஓர் அமர்வு . . . வெறுமனே.
ஆறு தும்பி அருவி இலை
யாருக்கும் தெரியாது யார்
யாரென்பது.
அண்டத்தின் தீராத பேரிருட்டில்
ஓய்ந்து மிதக்கிறது இலை.
விருட்டெனப் பறக்கிறது தும்பி.
மரம் மீண்டும் உதிர்க்கிறது
மற்றுமோர் இலையை. அது
இந்த முறை காற்றில் அலைகிறது.

No comments: