Saturday, March 12, 2011

கவிதைகள் ஜனகப்பிரியா

ஒன்றும் செய்ய இயலாது
மனம் பூட்டிய மாளிகை
புற்களிடை மறை படித்துறை
படிஇடை வாழ் விஷ ஊர்வன
நீரற்ற தெப்பத்துள்
தோண்டுகிறது நினைவு
மலர் இருந்த கூடையும்
மது இருந்த குவளையும்
மார்பணிந்த கச்சையும்
எப்போ தற்றது பார்வை
எதன்வழி யேகிற் றாற்றல்
எவ்வாறழிந்தது தொடர்ச்சி
புனல் வெளி துயில் இருளே
ஊழின் திசைவழி உலவியபோதா
பறவை உரைமொழி கேட்டு
கோட்டைப் பிளவினுள் வளர்ஆல்
ஒளி உமிழ்ந்த காலா
இன்றும் தேவை சிலருக்கு
சிறையினுள்ளும் சிம்மாசனம்
உருக்குலைந்த முகப்பின் மேலும்
பறக்கின்ற கொடி நினைவு.

No comments: