Saturday, March 12, 2011

கவிதைகள் ஜென்னத்துல் ஃபிர்தவ்ஸ்

காணாமல் போனவர்கள் பற்றிய குறிப்புகள்

அவர்கள்
காணாமல் போய்விட்டவர்கள்
நாளிதழ்களைப் புரட்டினால்
அவர்களின் அடையாளங்களை
அறிந்துகொள்ளலாம்
தாடி வைத்திருப்பவர்களாகவும்
தன் குறிப்பை எப்போதும்
பைகளில் வைத்துக்கொண்டே
அலைபவர்களாகவும்
அவர்கள் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள்.
காணாமல் போனவர்களைப் பற்றி
முழுமையான எந்தத் தகவலும்
இதுவரை கிடைத்ததாக இல்லை.
஑நாங்கள் நாட்டைக் குலைக்க வந்த
தீவிரவாதிகள் . . .ஒ என்ற குறிப்புகள் மட்டும்
என்கௌண்டர்களில் கொல்லப்படும்
அவர்களின் பைகளிலிருந்து
எப்போதும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

No comments: