Saturday, March 12, 2011

கவிதைகள் எஸ். நடராஜன்

ஒப்பனை

நாம் எல்லோரும் ஒன்றாய்க்கூடி அமர்ந்திருக்கிறோம்
தூக்கத்திலிருந்த ஒரு மிருகம்
கண்விழித்துக்கொண்டது.
இதழ்களை அகட்டிக் கண்சுருக்கி முகம்மலர
நாம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறோம்
பசிநிரம்பிய அந்த மிருகம் தன் இரை தேட மெல்ல எழுந்தது.
கைகளைக் குவித்தவாறு தோள்களை வருடி
நம் அக்கறையைப் பறிமாறிக்கொண்டோம்.
உதிரம் வழியத் தன் பற்களை நெறித்து
இரை கொண்ட மிருகம் பசியாறியது
வலுவாய்ப் பிணைந்த நம் நேசத்தைப் புதுப்பித்து
கைகுலுக்கி நாம் பிரிகிறோம்.
பின் ஓய்வெடுத்துக்கொள்ளத் தன் வலையைத் தேடி
அது கதவைச் சாத்தித் தூங்கியது.

No comments: