Sunday, November 11, 2012

அகச்சேரன் கவிதை


அந்திக் கருக்கலில்
பறவைகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்
அந்திக் கருக்கலில்
மிதக்க ஆரம்பித்து விடுகிறது
என் நிச்சலனத் தனி ஏரி

அதில்
ஒரு பரிசல்
ஒரு துடுப்பு
உங்களை அழைக்கிறது
என் வற்புறுத்தலுக்குப் பிறகும்

இரும்பு ரேழிக்கு வெளியே
பேசத் துடிக்கும்
பைத்தியத்தின் கைபோல.

No comments: