Sunday, November 11, 2012

வே. பாபு கவிதை


நான்கு இட்லிகளும்
ஒரு தண்ணீர்ப் பாட்டிலும்
முதல் இட்லியோடு
K தெருவின் 23ஆம் எண் வீட்டிற்குள்
அவன் நுழைந்தபோது
கோழிகள்
கூடையினுள் அடைந்துகொண்டிருந்தன
இரண்டாவது இட்லியோடு
போனபோது
அவை
குப்பையைக் கிளறிக்கொண்டிருந்தன
மூன்றாவது இட்லியோடு
போனபோது
அவற்றின் கண்கள்
கேமராபோல் சுழன்றுகொண்டிருந்தன
நான்காவது இட்லியோடு
தண்ணீர்ப் பாட்டிலையும்
எடுத்துச் சென்றபோது
அவை
அவனைப் பின்தொடர ஆரம்பித்தன

அப்பொழுதிலிருந்துதான்
நான்கு இட்லிகள்
ஒரு தண்ணீர்ப் பாட்டிலை
யார்
எடுத்துச் சென்றாலும்
அறம் அறம் எனக்
கோழிகள் கூவ ஆரம்பித்தன.

No comments: