Thursday, January 10, 2013

ராணிதிலக் கவிதைகள்


எழுதிக்கொண்டிருந்தேன்
என்
இருக்கையில் அமர்ந்தபடி
எழுதிக்கொண்டிருந்தேன்
நான்கு
ஐந்து
வார்த்தைகளை
மனம்
வலை வீசிக்கொண்டிருக்க
வெளியே
ஆந்திமந்தாரை மரத்தின்
கீழே
முற்றத்தில்
நான்கு
ஐந்து
மலர்கள்
வீழ்ந்துகொண்டிருந்ததைப்
பார்த்துக்கொண்டு
இருந்தேன்.
மதிய சாலை
இன்று
காலை முதல்
என்
எல்லா வெற்றிகளையும்
யார் யாருக்கோ
கையளித்துவிட்டு
சந்தோஷத்தில்
நிழலற்ற மதிய சாலையில்
தன்னந்தனியாக
நடந்து செல்கிறேன்
என் தலைக்குமேல்
மிதந்தபடி
வரும்
இந்தக் கத்திக்கப்பலுக்கு
என்ன
செய்வேன்?

No comments: