Sunday, March 3, 2013

கைதவம் - நா.கண்ணன்

சூரியக் கொழுந்தொன்று
விண் தாண்டி மண்ணேயேறித்
தழலாகி, நீராகி,
மண்ணாகி, மரமாகி
புழுவாகிப், பாம்பாகி
பல்மிருகமாகி, மனிதனாய்
பா செய்து பாவனையிலிருந்தும்
சூரியக் கொழுந்து
அங்கேயே இருந்தது
இன்னருள் செய்து கொண்டு!

No comments: