Sunday, March 3, 2013

பணிவதற்கில்லை - நா. விச்வநாதன்

பணிவதற்கில்லை.

இருட்டு பிரிவதற்குள்
ஊர்ப்போய்ச்சேர்
என்றாள் அவள்
முகம் தலை என
முழுசாய் மூடிக்கொண்டு
போய்ச் சேருவதில்லை
சாகசம்.
காண்போர் மெச்ச
கம்பீரம் மிளிர
ஒருராஜ நடை
தேவை அப்போது.
எந்தச் சொல்
புண்படுத்தும் என்பதில்லை.
திசையெட்டும் 
துள்ளிக் குதிக்கும்
என்பதுமில்லை
கோடாய் ஒரு புன்னகையின்
நடுவிலிருந்து
அசுரபலம் சேகரித்து
உயிர்த்தது
யாருமறியாதது.
என்ன முயன்றென்ன
போகின்ற காலம்
வருகின்ற காலம்
எதுவும்
அசைத்துப் பார்ப்பதில்லை.
என் அறத்தை
தானே உருவாக்குவேன்
பேணுவேன் எனும்போது
ஆணை எதற்கும்
அடிபணிவதற்கில்லை.

No comments: