Tuesday, December 16, 2008

நானும் நீயும் - ஜெயபாஸ்கரன்

"நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்கு பின்னால்
நின்று கொண்டிருப்பாய் நீ...

உன் இனத்து கற்ப்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாய் இருப்பாய் நீ...

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்..
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாகவேண்டும் நீ...

எனக்கு பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்கு பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை..."

No comments: