Sunday, December 14, 2008

காற்றின் பாடல் - சமயவேல்

"இடை விடாமல் தொடர்ந்து
காற்று பாடிக்கொண்டிருக்கிறது ...

அதன் ஒவ்வொரு பாடலிலும்
கோடி உயிர்கள் முளைத்தெழுகின்றன..

அதன் ஒவ்வொரு வரியிலும் மரங்கள்
செடி கொடிகள் ஆனந்தக் கூத்தாடுகின்றன ...

அதன் வார்த்தைகளுக்குள் குழந்தைகள்
குதித்து ஓடி கும்மாளமிடுகின்றன ...

அதன் இசைக்குள் மனிதர்கள்
விதம் விதமாக நேசம் கொள்கிறார்கள்...

அதன் சிறிய ஒளிக் குறிப்புகளைக் கேட்டு
பறவைகள் சிறகடித்துப் பறக்கின்றன...

வெறும் மண் பூமி
உயிர் கொண்டு சுழழ்கின்றது...

கற்றே உன் ஒப்பற்ற கருணையில்
காட்டு மூங்கிலோடு நானும் பாடுகிறேன்...

கதவைத் தள்ளி அறைக்குள் நுழையும்
காற்றின் அன்பில் கரைந்து பாடுகிறேன்...

எனது காற்று என்று இங்கே
எதனைக் கூறுவேன்
எனது பாடல் இன்று இங்கே
எதைச் சொல்லுவேன்
எல்லாம் இங்கே காற்றின் பாடலே...."

No comments: