Friday, December 26, 2008

வாடகை வீட்டில் வளர்ந்த மரம் - பாவண்ணன்

"விட்டுச்சென்றதும் குடிவைத்துக் கொள்ள
ஆள் கிடைத்த மகிழ்ச்சியில்
நாள் கடந்து போவதை ஞாபகமுட்டுகிறீர்கள்...

அன்புக்குரிய உரிமையாளரே
பெட்டிகள் படுக்கை மின்விசிறி
தொலைக்காட்சி அடுப்பு எரிவாயு
மூட்டை கட்டிக் கொண்டிருக்கிறோம்
வாடகை வண்டி வந்ததும்
ஏற்றிக் கொண்டு கிளம்புகிறோம்...

கொண்டு செல்லமுடியாத சொத்தாக
பின்புறத்தில் நிற்கிறது ஒரு மரம்
எங்களை நினைவுட்டினாலும்
எங்களைப் போல இருக்காது அது
குழாயில் தண்ணீரை ஏன் நிறுத்தினீர்கள்
என்று ஒரு போதும் கேட்காது
மின்சார நேரத்தைக் குட்டச்சொல்லி
முற்றத்தை மறித்து குழையாது
மழை புயல் கஷ்டங்களை முன்வைத்து
பழுது பார்க்கவும் வேண்டாது
நேருக்கு நேர் பார்த்தாலும்
எவ்வித சங்கடமும் தராது
வருத்தமோ கசப்போ எங்களோடு போகட்டும்
மரத்துக்காவது கருணை காட்டுங்கள்..."

No comments: