Saturday, January 3, 2009

முன்பெல்லாம் - பூமா ஈஷ்வரமுர்த்தி

முன்பெல்லாம்
மின்சாரக் கம்பிகள்
மட்டுமே
நளினமற்று
குறுக்கே குறுக்கே
போகும்
இப்போது
டிவி ஆன்டெனாக்கள்...

பகலில்
வானம் பார்த்தால்
சூரியன் திட்டித் தொலையும்...

சூரியன்
மறையக் காத்திருக்கும்
இளைய ராத்திரியில்
கோயில் கோபுரங்கள்
பேங்க் கட்டிடங்கள்
சோடியம் வேப்பர்கள்
'தும்பமாய்'
வானம் மறைக்கும்...

இன்னும் கொஞ்சம்
ராத்திரியானாலோ
பெண் தான் வானம் பார்ப்பாள்...

பிறகு

குழந்தைக்கு
நிலா காட்டும் சாக்கில்
நாமும்
வானம் பார்க்கலாம்
கைகளில்
குழந்தை இருக்க
வானம் யார் பார்ப்பார்..."

No comments: