Saturday, January 3, 2009

கோடைகாலக் குறிப்புகள் - சுகுமாரன்.

"ஒரு பிரம்மாண்ட சிலந்தி போல
கான்கிரீட் காடுகளுக்கு மேல் அசைகிறது சூரியன்
வெயில்
எலும்புகளுக்குள்ளும் நுழைந்து கருணையைக் கொல்கிறது
என் நம்பிக்கைகள் வற்றிக் கொண்டிருக்கின்றன

பறவைகள் உலர்ந்த குரலில் புலம்புகின்றன
காலிக் குடங்கள் அலறுகின்றன
கோபத்துடன் நிமிரும் கைகளில் விலங்குகள்
பளபளக்கின்றன
வயிற்றிலடிக்கப்பட்டவர்களின் ஊர்வலங்கள் நகர்கின்றன
தார்ச்சாலை உருகி
பாரவண்டிக்காரனின் கால்கள் புதைகின்றன

காற்றைக் கடந்தன யாருடையதோ சொற்கள்:
'கொடுமையானது
இந்த கோடைக் காலம்'

இல்லை
எப்போதும் நாம் வாழ்வது கோடை காலத்தில்..."

No comments: