Saturday, January 3, 2009

தனிமை - சல்மா

"இராப்பகலாய்
சலசலக்கிறது அரச மரம்

அதன் மொழியில்
பாடிக்கொண்டிருக்கிறது
அதனுடைய பாடலை

மறந்த காதல்களை
பிரிந்த நண்பர்களை
கழிந்த இனிய நாட்களைத்
தூண்டும் பாடல்கள்

இப்பாடல்கள்
என்னையும் ஒரு பறவையாய்
தன்னிடம் ஓடிவரச் செய்யும்
ஒரு தந்திரமாக இருக்கலாம்

காற்றால்
பறவையால்
பாடல்களால் நிறைந்த
இம்மரம் அறியுமா
என் சிறகின்மைகளை..."

No comments: