Saturday, January 3, 2009

தேவதச்சன் கவிதை

"ரோஜாவும்
முல்லையும் வேண்டுமா
என்று வாசலிலிருந்து
கூவுகிறான்
பூக்காரன்.
அடுப்படியிலிருந்து
கத்துகிறாள்
நாளைக்கு வாங்கிக்கொள்கிறேன் என்று.
நாளை
வாங்க
அவள் வாசல் வரும்போது
பூ
புதுசாகவே இருக்கிறது
எப்போதும் போல்
நாளையும் அது
மரத்திலிருந்து மறைவதில்லை..."

No comments: