Sunday, January 4, 2009

இன்னும் செதுக்கப்படாமலொரு சிற்பம் - சூத்ரதாரி.

"ஆக்ரோஷக் கண்களுடன்
வலக்கரத்தில் வீச்சரிவாளோடு
கருப்பராயன்.
பயந்து பதுங்கும் எலியொன்று.
இன்னும் அரசமரத்தடி கிடைக்காத ஏக்கத்தில்
வியாசருக்கு எழுத மறுத்து
துண்டாடப்பட்ட துதிக்கையுடன் பிள்ளையார்.
ஞானப்பழம் பெற்ற
இன்னொரு விநாயகன் முகம் திருப்பிக்கொள்ள
முதுகில் சாய்ந்திருந்தனர் ஒன்பது கன்னிமார்கள்.
கொட்டும் மழைக்கு ஒதுங்கி ஒடுங்கின
மாரியம்மனுக்கு எதிரில்
சுவைக்க முடியாக் கரும்புடன் காமாட்சியம்மன்.
கட்டிலடங்காத ஆநிரைகளுக்காய்
துளையற்ற குழலை இசைத்தபடி ஆயர்பாடிக்காரன்.
இன்னுமொரு தேவி காலடியில் மூச்சின்றி கிடக்க
உளியொன்று கண் திறந்து கொண்டிருந்தது.
உடைந்து தெறித்த நெருப்புத் துணுக்குகள்
மோதி விழுந்தன காத்திருக்கும் கண்களில்
எந்தக் கல்லில் ஒளிந்து கிடக்கிறதோ
அவன் செதுக்க நினைத்த சிற்பம்..."

No comments: