Saturday, January 3, 2009

வண்ணத்துப் பூச்சி - கள்ளழகர்

"வண்ணத்துப் பூச்சி
பறந்து கொண்டிருக்கிறது
கண்ணுக்கெட்டும் தூரத்தில்
அழைக்கிறது அதன் சிறகுகளால்
ஈர்ப்பில் லயித்து
பின்னோடும் என் பார்வைகள்
இலையில் காலூன்றி
கனமற்ற கனத்தின் கனம் தாளாது
இலை ஆட
ஆடும் வரை சிறகசைத்து
அமரும்
உயிரின் கைகள்
உணர்வின் விரல் குவித்துப்
பிடிக்கும்போது
பறந்திருக்கும்
அங்கும் இங்கும் பறந்து
வேறோர் இடத்தில் அமரும்
பிடிகொடுக்காது
கைக்கெட்டும் தூரத்தில்
பறந்து கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சி
அழைக்கிறது அதன் சிறகுகளால்..."

No comments: