Sunday, January 4, 2009

பட்சிகளுக்கான பாடம் - வி.அமலன் ஸ்டேன்லி

"அடுத்த இளம்பனிக்காலத்தில்
கட்டிடங்கள் கொண்டுவிடும்
பழம்பெரும் வறண்ட குளம்

பெருநகர் கூளங்களும்
மண்ணும் சரளையுமென
கொட்டி நிரம்புகிறது

போக்கிடமற்று ஒழிந்துபோகலாம்
கொக்கும் நாரைகளும்

சுவரிடுக்குகளில் வாழ
புறாக்களிடமும்
எச்சில்களை ஜீரணிக்க
காக்கைகளிடமும்
கற்றுக் கொள்ளட்டும்
சீக்கிரமே அவை
மனிதரைப் போல..."

No comments: