Sunday, January 4, 2009

சங்கரராம சுப்பிரமணியன் கவிதை

"தங்களுக்கும் ஒரு இறந்த காலமும்
ஏக்கமும் உருவாகுமென்று
ஸ்கூட்டர்கள் நினைத்துப் பார்க்கவேயில்லை
அவைகளுக்கும்
ஒரு காவிய முடிவும்
வழியனுப்புதலும் நிகழ்ந்து விட்டன.
மஞ்சள் விளக்குகள்
கடற்காற்று
அவைகளின் நினைவை அழித்துவிடுகின்றன
பட்டறைகளிலும்
எங்கோ இருட்டறைகளிலும்
கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றன
இந்த நெடிய பூமியில் எல்லோரும்
தொலைந்து போகும் அபாயத்தை எண்ணி..."

No comments: