Saturday, November 22, 2008

அடுத்த கட்டத்தில் - தேவதச்சன்

"அடுத்த கட்டத்தில் கால் வைத்துகொண்டது
மனித குலம். இது வெளிப்படை
சமூகவியலார் மனிதப்பயணம் பற்றி நிறைய சொல்லியாயிற்று
கூடவே எந்திரமெனும் துணையும் கூட்டாயிற்று
இந்தச்சிட்டுக் குருவியும் நானும் சுமந்து செல்கிறோம்
நான் போரை, அது அமைதியை
விடுதலை தூரப் பொருளல்ல என்றே காட்சி தருகின்றன
காலைக் குரல்கள், மரங்கள், சத்தமற்று சேருமுன் சிறுநீர்
குதிரையாய் இருந்தபடி குதிரை ஏறும் தப்புக்கு முன்னால்
வயிற்றின் அமிலத்தில் வதங்குகிறது குதிரை
எல்லாம் கண்டதால் அமைதியும், எதுவும்
காணாததால் முயற்சியும் இங்கொரு மனம்
தேடியபடி இருக்கிறது இயல்வதை..."

No comments: