Sunday, November 23, 2008

பட்டாம் பூச்சி - கவிதா பாரதி

"மலர்கள் தவிர்த்து
நதியிடம் எந்த உரிமையும் இல்லை
ஒரு பட்டாம் பூச்சிக்கு...

மீன் கொத்திக்கன்றி
பட்டாம்பூச்சிக்குத் தருவதற்கு
எதுவுமில்லை நதிக்கும்...

சுழித்தோடும் கண்ணாடியில்
மௌனம் பார்த்துக் கொள்ளும்
பட்டாம் பூச்சிக்கு
அப்படியென்ன சந்தோசம் இருந்துவிடக்கூடும் ...

நதிக்கும்
பட்டம் பூச்சிக்குமான உறவில்
நமக்கென்ன வேலை..."

No comments: