Thursday, November 20, 2008

விட்டு விடுதலையாகி - சின்ன கபாலி

"குதிரையை லாயத்தில் கட்டு
கடிவாளம், கண்பட்டைகளை அகற்று
சற்றே ஓய்வு கொள்ளட்டும்...

நடந்து செல்
நாற்றிசையும் கூர்நது நோக்கு
மனிதர்களை,
விலங்குகளை,
புழு பூச்சிகளை,
பறவைகளை,
மரங்களை,
உறுமிச் செல்லும் வாகனங்களை
அன்பாய் கவனி...

அண்ணாந்து வான் நோக்கு...
அதிசயங்களில் மெய் மற.
குனிந்து பூமியை தரிசி;
ஏதேனும் பிடிபட்டால்
எடுத்துச் செல்
இல்லையேல்
உண்டுறங்கி ஓய்வு கொள்..."

No comments: