படகுத்துறை
எதிர்கரையில் நின்று
சைகைசெய்து அழைக்கிறான்
படகுக்காரனை
நீர்த் துறையிலிருக்கும்
அத்தனை படகுகளும்
அவனைப் பார்த்தவாறிருக்கின்றன
ஆனால் படகுக்காரர்கள்
யாரும் அவனைப்
பார்த்ததாய்த் தெரியவில்லை.
எதிர்பார்த்தலின்
சிறிய படகொன்று
ததும்பி... ததும்பி அசைகிறது
அவனை நோக்கி.
n
மடாலயம்
மடாலயத்தின்
கதவுகள் திறந்துகிடக்கின்றன
உள்ளே எல்லோரும் கண்களை மூடித்
தியானிக்கின்றனர்.
பிறகு எல்லோரும்
போய்விட்டனர்
மடாலயம் ஆழந்து தியானிக்கிறது
கதவென்னும்
தன் அகன்ற கண்களை மூடியபடி.
Saturday, March 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment