Friday, March 11, 2011

கவிதைகள் - பொ. செந்திலரசு

பாதுகாப்பு குறித்து

வாழ்தலின் பாதுகாப்பு
குறித்து
பிரக்ஞை ஏதுமற்றிருந்தேன்
உருளும் எதிர்காலம்
விழிகளினுள் தேக்கி
வேட்டுவனின்
விரல்களிடை யொழுகும்
கயிற்றின் நுனியில்
தலைகீழாய்ப் படபடக்கும்
பறவைகளிரண்டின்
பயணமென்஬னைக்
கடக்காத வரை.

No comments: