நான்கு பேர்
வேறொருவரைப் பார்க்கப் போயிருந்தேன்
வருவாரெனச் சொல்லி
நான்குபுறமும் கண்ணாடியால் சூழ்ந்த
அறையொன்றில் அமரவைத்தார்கள்
உள்ளே என்னைப் போலவே
எல்லா திசைகளிலும் ஒருவர் அமர்ந்திருந்தார்
நடுவே அமர்ந்திருந்த
என்னைப் பார்க்க அவர் வந்தார் அறைக்கு
அவரைப் போலவேயிருக்கும்
நான்கு பேர் அவரோடு நுழைந்தார்கள் அறைக்குள்
நான் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன்
என்னை போலவேயிருக்கும் நான்கு பேர்
அவரைப் போலவேயிருக்கும் நான்கு பேரோடு
பேசிக்கொண்டிருந்தார்கள்.
Friday, March 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment