Friday, March 11, 2011

கவிதைகள் நரன்

நான்கு பேர்

வேறொருவரைப் பார்க்கப் போயிருந்தேன்
வருவாரெனச் சொல்லி
நான்குபுறமும் கண்ணாடியால் சூழ்ந்த
அறையொன்றில் அமரவைத்தார்கள்
உள்ளே என்னைப் போலவே
எல்லா திசைகளிலும் ஒருவர் அமர்ந்திருந்தார்
நடுவே அமர்ந்திருந்த
என்னைப் பார்க்க அவர் வந்தார் அறைக்கு
அவரைப் போலவேயிருக்கும்
நான்கு பேர் அவரோடு நுழைந்தார்கள் அறைக்குள்
நான் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன்
என்னை போலவேயிருக்கும் நான்கு பேர்
அவரைப் போலவேயிருக்கும் நான்கு பேரோடு
பேசிக்கொண்டிருந்தார்கள்.

No comments: